NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகம் முழுவதும் பலமடங்கு உயர்ந்த முத்திரை கட்டணங்கள்: பத்திரப்பதிவுத்துறை அறிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகம் முழுவதும் பலமடங்கு உயர்ந்த முத்திரை கட்டணங்கள்: பத்திரப்பதிவுத்துறை அறிக்கை 
    திருத்தங்கள் கடந்த மே 3 முதல் அமலுக்கு வந்துள்ளது எனவும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது

    தமிழகம் முழுவதும் பலமடங்கு உயர்ந்த முத்திரை கட்டணங்கள்: பத்திரப்பதிவுத்துறை அறிக்கை 

    எழுதியவர் Venkatalakshmi V
    May 08, 2024
    09:52 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகம் முழுவதும் ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்டவற்றுக்கான முத்திரைக் கட்டணத்தை பத்திரப்பதிவுத்துறை பல மடங்காக உயர்த்தியுள்ளது.

    கடந்தாண்டு தமிழக சட்டப்பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாக கொண்டு முன்மொழியப்பட்ட சட்டமுன்வடிவு அடிப்படையில், பிரமாணப்பத்திரம், ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கான முத்திரைக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    மேலும் இந்திய முத்திரைச் சட்டத்திலும் திருத்தங்கள் செயப்பட்டுள்ளதாகவும், இந்த திருத்தங்கள் கடந்த மே 3 முதல்அமலுக்கு வந்துள்ளது எனவும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கைப்படி, தத்தெடுத்தலுக்கு முன்பிருந்த ரூ.100 முத்திரைக் கட்டணமானது ரூ.1000ஆகவும், பிரமாணப்பத்திரம், உடன்படிக்கை ஆகியவற்றுக்கு முத்திரைக் கட்டணம் ரூ.20 என்பது ரூ.200ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    சங்கம் பதிவுக்கான முத்திரைக் கட்டணம் ரூ.300 லிருந்துஒவ்வொரு ரூ.10 லட்சத்துக்கும் ரூ.500 என்று ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    கட்டண அதிகரிப்பு

    பத்திரப்பதிவு துறையில் அதிகரித்த கட்டணங்கள்

    கிரையபத்திரம் ரத்துக்கு ரூ.50 ஆக இருந்த கட்டணம் ரூ.1000 ஆகவும், நகல் பத்திரத்துக்கு ரூ.20 ஆக இருந்த கட்டணம் ரூ.100 ஆகவும், பிரதி எடுத்தலுக்கு ரூ.25 ஆக இருந்த கட்டணம் ரூ.500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    மேலும், ஒருவர் தான் மற்றொருவரிடம் வாங்கிய சொத்தை அவருக்கே திருப்பியளிப்பதாக இருந்தால், அது கிரைய பத்திரமாக கருதப்பட்டு வழிகாட்டி மதிப்பில் 7% கட்டணம், 2 சதவீதம் பதிவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

    ஆனால், தற்போது ரூ.1000-ஆக குறைக்கப்பட்டுள்ளது. சங்கத்துக்கான ஒப்பந்த பதிவுக்கு ரூ. 200 அல்லது ரூ.500 என இருந்த கட்டணம் ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    குடும்பத்தினர் அல்லாத பாகப்பிரிவினைக்கு ஒவ்வொரு பாகத்துக்கும் 4 சதவீதம் என்பது, ஒவ்வொரு பாகத்துக்குமான சந்தை மதிப்பில் 4% என திருத்தப்பட்டுள்ளது.

    பாகப்பிரிவினை கட்டணங்கள்

    மாற்றமடைந்த பாகப்பிரிவினை விதிகள்

    அதேபோல் ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு பாகப் பிரிவினை செய்யும்போது, அதில் ஒருவர் உயிருடன் இல்லாத பட்சத்தில் அவரது சட்டப்படியான வாரிசுகள், முன்பு குடும்பத்தினர் அல்லாதவராக கருதப்படுவர்.

    ஆனால், தற்போது புதிய திருத்தத்தில், அந்த சட்டப்படியான வாரிசுகளும் குடும்ப அங்கத்தினராக கொண்டு வரப்பட்டுள்ளனர்.

    மேலும் பங்குதாரர் பதிவுக்கான கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ.1000-ஆக உயர்ந்துள்ளது.

    மேலும், பொது அதிகார பத்திரத்தை பொறுத்தவரை, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துகளை ஒரே பதிவில் வாங்குவதற்காக வழங்கப்படும் சிறப்பு பொது அதிகாரம், ஒரு நபர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு பதிவுக்கு மட்டும் வழங்கப்படும் சிறப்பு பொது அதிகாரத்துக்கு ரூ.5 ஆக இருந்த கட்டணம் ரூ.500 ஆனது.

    embed

    உயர்ந்த முத்திரை கட்டணங்கள்

    முத்திரைக் கட்டணம் அதிரடி உயர்வு!#StampDuty |#PowerBond |#TamilNaduhttps://t.co/DqnoFbgeI1 pic.twitter.com/0EIRJRDXsU— Dinamalar (@dinamalarweb) May 7, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    தமிழகம்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    வெளிப்படையான வக்ஃப் சொத்து மேலாண்மைக்கான UMEED போர்ட்டலை தொடங்கியது மத்திய அரசு வக்ஃப் வாரியம்
    பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரியாம சொல்லிட்டார்; சிம்லா ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளதாக பாகிஸ்தான் விளக்கம் பாகிஸ்தான்
    இந்தியாவில் செயற்கைக்கோள் இன்டர்நெட் சேவைக்கான உரிமம் பெற்றது எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் இன்டர்நெட்
    பாதுகாப்பு காரணங்களுக்காக அமர்நாத் யாத்திரையின் காலஅளவு 38 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது அமர்நாத்

    தமிழக அரசு

    இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது வாக்காளர்
    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் நேரடி ஒளிபரப்பு கோரிக்கைகளை நிராகரிக்க கூடாது: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு ராமர் கோயில்
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு  ஜெயலலிதா
    தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் அனுமதி  தமிழகம்

    தமிழகம்

    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    பிரதமர் குறித்து தமிழக அமைச்சர் கீழ்த்தரமாக பேசியதாக பாஜக குற்றச்சாட்டு  நரேந்திர மோடி
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு புதுச்சேரி

    தமிழ்நாடு

    அரசின் உரையை வாசிக்காமல், மூன்றே நிமிடத்தில் சட்டப்பேரவையில் பேச்சை முடித்த ஆளுநர் சட்டமன்றம்
     22ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்: அலுவல் கூட்டத்தொடரில் முடிவு சட்டமன்றம்
    அரசு ஊழியர்கள் ஸ்ட்ரைக்: மாவட்ட கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு தமிழக அரசு
    தமிழ்நாடு பட்ஜெட் 2024இல் எதையெல்லாம் எதிர்பார்க்கலாம்?  பட்ஜெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025