NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 2 சிலைகள், 2 கொடிமரங்கள் திருட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 2 சிலைகள், 2 கொடிமரங்கள் திருட்டு

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 2 சிலைகள், 2 கொடிமரங்கள் திருட்டு

    எழுதியவர் Sindhuja SM
    Feb 04, 2024
    11:22 am

    செய்தி முன்னோட்டம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்த 2 யானை சிலைகள் மற்றும் 2 கொடிமரங்களை காணவில்லை என்று அக்கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள உள் பிரகாரத்தில் இருக்கும் கல்யாண மண்டபத்தின் நுழைவு வாயிலில் இரண்டு யானை சிலைகள் இருந்தததாகவும், அந்த கற் சிலைகளை 10 ஆண்டுகளாக காணவில்லை என்றும் அவர் புகார் அளித்துள்ளார்.

    மேலும், 2015ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தின் போது புதிதாக 3 கொடிமரங்கள் மரங்கள் வைக்கப்பட்டதாகவும், அப்போது, அங்கிருந்த பழைய கொடிமரங்கள் கோயிலுக்குள்ளேயே பத்திரப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

     கோவிலில் வெள்ளை அடித்தவர்கள் மீது புகார் 

    அப்படி, கோயிலுக்குள்ளேயே வைக்கப்பட்ட 2 பழைய கொடிமரங்களை காணவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    மேலும், கோவிலில் வெள்ளை அடிக்கும் பணியில் ஈடுபட்ட ரமேஷ் மற்றும் அவரது சகோதரர் மாரிமுத்து ஆகியோர் அந்த சிலைகளை கடத்தியதாகவும் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்த 2 யானை சிலைகள் மற்றும் 2 கொடிமரங்களை காணவில்லை என்ற செய்தி பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை

    சமீபத்திய

    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்
    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை

    மதுரை

    முக்கியமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் சென்னை
    மதுரை அரசு மருத்துவமனை - கர்ப்பிணிகள் அடுத்தடுத்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரசு மருத்துவமனை
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கான பிரத்யேக அரங்கம் - பணிகள் தீவிரம்  ஜல்லிக்கட்டு
    இந்தியாவின் பழமையான நகரங்களையும் அவற்றின் காலத்தால் அழியாத அழகையும் பற்றி ஒரு பார்வை  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025