NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெண்களின் பாதுகாப்பு குறித்து பொய் பிரச்சாரம் செய்வதை சகித்துக்கொள்ள முடியாது: கேரள முதல்வர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெண்களின் பாதுகாப்பு குறித்து பொய் பிரச்சாரம் செய்வதை சகித்துக்கொள்ள முடியாது: கேரள முதல்வர்
    பாலின சமத்துவமும், பாலின நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று முதலவர் விஜயன் கூறியுள்ளார்.

    பெண்களின் பாதுகாப்பு குறித்து பொய் பிரச்சாரம் செய்வதை சகித்துக்கொள்ள முடியாது: கேரள முதல்வர்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 26, 2023
    07:14 am

    செய்தி முன்னோட்டம்

    கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநிலம் முழுவதும் பெண்களின் பாதுகாப்புக்கு எதிராக சிலர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாகவும், இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிப்பது நல்ல போக்கு அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

    பெண்கள் பாதுகாப்பு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், "பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் பெண்களின் பாதுகாப்புக்கு எதிரான பொய் பிரச்சாரங்களும் அதிகரித்து வருகின்றன. நம்மிடம் அனைத்து வகையான சட்டங்களும் உள்ளன. அந்த சட்டங்கள் திறம்பட பயன்படுத்தப்படலாம்." என்று கூறியுள்ளார்.

    இந்தியா

    பெண்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: முதல்வர் விஜயன்

    மேலும், "பிரச்சினைகள் ஏற்படும் போது பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டங்களை திறம்பட பயன்படுத்த வேண்டும். சமீபகாலமாக தனிமைப்பட்ட சில சம்பவங்களின் அடிப்படையில், கேரளாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என சிலர் தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது போன்ற தவறான விஷயங்களை ஊக்குவிப்பது நல்ல போக்கு அல்ல." என்று கூறினார்.

    பெண்கள் தங்கள் பொருளாதார மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் விஜயன் கூறினார்.

    குடும்ப வன்முறையைத் தடுக்கவும், வரதட்சணையைத் தடுக்கவும், பாதுகாப்பான பணியிடங்களை உறுதிப்படுத்தவும் பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அப்போதுதான் பாலின சமத்துவமும், பாலின நீதியும் நிலைநாட்டப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    பினராயி விஜயன்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    கேரளா

    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது சுகாதாரத் துறை
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை உத்தரப்பிரதேசம்
    கர்ப்பமாக இருக்கும் கணவன்: குழந்தையை வரவேற்க தயாராகும் திருநர் தம்பதி இந்தியா
    கேரள திருநர் தம்பதி ஜியா-ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது திருநர் சமூகம்

    பினராயி விஜயன்

    வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர் ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025