NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நிராகரிப்பு; உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நிராகரிப்பு; உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நிராகரிப்பு உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்

    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நிராகரிப்பு; உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 30, 2023
    01:28 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க தனக்கு அதிகாரம் இல்லை என சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தது.

    அப்போது நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும், சிகிச்சைக்கு பிறகு அமலாக்கத்துறையும் அவரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது. பின்னர் ஆகஸ்ட் 28வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

    இந்நிலையில், நீதிமன்றக் காவல் முடிந்த பிறகு, சென்னையில் உள்ள எம்எல்ஏ, எம்பிக்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 15வரை நீட்டிக்கப்பட்டது.

    special court denies bail

    உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்

    ஜாமீன் வழங்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க மறுத்த நீதிபதிகள், ஜாமீனுக்கு முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தினர்.

    அதைத் தொடர்ந்து முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்த மனு புதன்கிழமை (ஆகஸ்ட் 30) விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, ஜாமீன் மனு மீது உத்தரவிடும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் சிறப்பு நீதிமன்றத்தை அணுகுமாறும் கூறினார்.

    இதையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்ட நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தனக்கு விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், எனவே உயர்நீதிமன்றத்தை அணுகுமாறும் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செந்தில் பாலாஜி
    உயர்நீதிமன்றம்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை லஷ்கர்-இ-தொய்பா
    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு
    அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது: IMD  வானிலை ஆய்வு மையம்
    இயக்குனர் மணிரத்னம்- தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி காதல் கதைக்காக இணைகிறார்களா?  இயக்குனர் மணிரத்னம்

    செந்தில் பாலாஜி

    இருதயத்தில் 90% பிளாக், மனித உரிமைகள் ஆணையம் தலையீடு; அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தொடரும் திருப்பங்கள் அமலாக்க இயக்குநரகம்
    "இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை!": தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ  முதல் அமைச்சர்
    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம் தமிழ்நாடு
    'செந்தில் பாலாஜி மனைவியின் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும்': நீதிமன்றம் தமிழ்நாடு

    உயர்நீதிமன்றம்

    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA இந்தியா
    ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் இந்தியா
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  இந்தியா

    தமிழ்நாடு

    இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் ட்ரோன் சோதனை மையம்  சென்னை
    திடீரென முடங்கிய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக இணையதளம் தமிழக அரசு
    சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்; அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்  பெட்ரோல்
    அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட 7ம் நூற்றாண்டினை சேர்ந்த முருகன் சிலை  அமெரிக்கா

    தமிழ்நாடு செய்தி

    ட்ரோன் கேமராவை கோவை வனப்பகுதியில் பறக்கவிட்ட சுற்றுலாப்பயணிக்கு ரூ. 25000 அபராதம் கோவை
    வரலாற்று பதிவு: மு.கருணாநிதி முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்ற நாள் இன்று! வைரல் செய்தி
    சிவபெருமானின் ஏழு மலையாக கருதப்படும் வெள்ளியங்கிரி மலையின் சிறப்புகள் கோவை
    சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பு சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025