NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வேங்கைவயல் வழக்கில் முன்னேற்றம் இருக்கிறது: சிபிசிஐடி தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வேங்கைவயல் வழக்கில் முன்னேற்றம் இருக்கிறது: சிபிசிஐடி தகவல்
    இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வேங்கைவயல் வழக்கில் முன்னேற்றம் இருக்கிறது: சிபிசிஐடி தகவல்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 08, 2023
    06:14 pm

    செய்தி முன்னோட்டம்

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் என்ற பகுதியில், சில வாரங்களுக்கு முன், பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்டிருந்தது.

    இதனால், அந்த பகுதி குழந்தைகள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதனையடுத்து, எழுந்த புகாரின் பேரில் புதுக்கோட்டை ஆட்சியர் இதை நேரில் சென்று விசாரித்தார்.

    அப்போது, அந்த பகுதி மக்கள் இன்னும் தீண்டாமை செயல்களை பின்பற்றுவது தெரியவந்தது.

    இதை ஒழிப்பதற்கு தேவையான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், குடிநீரில் மனித கழிவுகளைக் கலந்தவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

    எந்த முன்னேற்றமும் இல்லாததால் அந்த வழக்கு காவல்துறையினரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றபப்ட்டது.

    மாற்றப்பட்ட இந்த வழக்கில் முன்னேற்றம் இருப்பதாக சிபிசிஐடி தற்போது கூறியுள்ளது.

    புதுக்கோட்டை

    சந்தேக நபர்கள் 8 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட பிரச்சனை தொடர்பாக 8 பேரிடம் நேற்று(பிப் 7) சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

    அதனையடுத்து, இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விசாரணை நடத்துவதற்காக ஏடிஎஸ்பி தலைமையிலான 11 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது.

    வேங்கை வயல் பிரச்சனையின் போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், அதன் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான 8 பேரை நேற்று திருச்சிக்கு வரவழைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

    இதற்கிடையில், சிபிசிஐடி போலீஸும் குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்காததால் விசிக தலைவர் திருமாவளவன் சில நாட்களுக்கு முன் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19
    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்

    தமிழ்நாடு

    தை அமாவாசை - சதுரகிரியில் மூச்சு திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழப்பு இந்தியா
    மாணவியின் கேள்விக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாரஸ்ய பதில் இந்தியா
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டி தேர்தல்
    கோயம்பேடு பேருந்து நிலைய வாகன நெரிசலை குறைக்க தமிழநாடு அரசு நடவடிக்கை சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025