NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வேங்கைவயல் வழக்கில் முன்னேற்றம் இருக்கிறது: சிபிசிஐடி தகவல்
    இந்தியா

    வேங்கைவயல் வழக்கில் முன்னேற்றம் இருக்கிறது: சிபிசிஐடி தகவல்

    வேங்கைவயல் வழக்கில் முன்னேற்றம் இருக்கிறது: சிபிசிஐடி தகவல்
    எழுதியவர் Sindhuja SM
    Feb 08, 2023, 06:14 pm 0 நிமிட வாசிப்பு
    வேங்கைவயல் வழக்கில் முன்னேற்றம் இருக்கிறது: சிபிசிஐடி தகவல்
    இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் என்ற பகுதியில், சில வாரங்களுக்கு முன், பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்டிருந்தது. இதனால், அந்த பகுதி குழந்தைகள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, எழுந்த புகாரின் பேரில் புதுக்கோட்டை ஆட்சியர் இதை நேரில் சென்று விசாரித்தார். அப்போது, அந்த பகுதி மக்கள் இன்னும் தீண்டாமை செயல்களை பின்பற்றுவது தெரியவந்தது. இதை ஒழிப்பதற்கு தேவையான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், குடிநீரில் மனித கழிவுகளைக் கலந்தவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. எந்த முன்னேற்றமும் இல்லாததால் அந்த வழக்கு காவல்துறையினரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றபப்ட்டது. மாற்றப்பட்ட இந்த வழக்கில் முன்னேற்றம் இருப்பதாக சிபிசிஐடி தற்போது கூறியுள்ளது.

    சந்தேக நபர்கள் 8 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட பிரச்சனை தொடர்பாக 8 பேரிடம் நேற்று(பிப் 7) சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். அதனையடுத்து, இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணை நடத்துவதற்காக ஏடிஎஸ்பி தலைமையிலான 11 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது. வேங்கை வயல் பிரச்சனையின் போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அதன் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான 8 பேரை நேற்று திருச்சிக்கு வரவழைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், சிபிசிஐடி போலீஸும் குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்காததால் விசிக தலைவர் திருமாவளவன் சில நாட்களுக்கு முன் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    வேங்கை வயல்

    சமீபத்திய

    மும்பையில் சொந்தமாக வீடு வைத்திருக்கும் தமிழ் திரை பிரபலங்கள் பட்டியல் கோலிவுட்
    புதுச்சேரியில் 11 நாட்கள் விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு புதுச்சேரி
    சற்று சரிந்த தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    மீண்டும் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா

    தமிழ்நாடு

    இந்தியாவின் கடைசி வாழும் சதிர் நடன கலைஞர் பத்மஸ்ரீ முத்துக்கண்ணம்மாள் பத்மஸ்ரீ விருது
    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை திருச்சி
    அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் புதுச்சேரி
    இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை இந்தியா

    வேங்கை வயல்

    வேங்கைவயல் சம்பவத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்த மனு தமிழ்நாடு
    ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய வேங்கைவயல் மக்கள் தமிழ்நாடு
    வேங்கைவயல் விவகாரம்: தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ் தமிழ்நாடு
    தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பது தான் சமூக நீதியா: தமிழக ஆளுநர் ஸ்டாலின்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023