NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வேங்கை வயலில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டும் போலீஸ்: பா. ரஞ்சித் குற்றசாட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை
    வேங்கை வயலில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டும் போலீஸ்: பா. ரஞ்சித் குற்றசாட்டு
    "தொடரூம் சமூக அநீதி!" இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம்

    வேங்கை வயலில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டும் போலீஸ்: பா. ரஞ்சித் குற்றசாட்டு

    எழுதியவர் Sindhuja SM
    Jan 13, 2023
    03:42 pm

    செய்தி முன்னோட்டம்

    பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதாக இயக்குனர் பா. ரஞ்சித் ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்டம் முத்துகாடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயல். பகுதியில் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் சில வாரங்களுக்கு முன் மனித கழிவுகள் கலந்திருப்பதாக கூறப்பட்டது. இதை அந்த மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று விசாரித்து உறுதி செய்தார்.

    இந்நிலையில், இந்த தகாத காரியத்தை செய்த குற்றவாளிகளை கைது செய்யுமாறு பல நாட்களாக பல்வேறு தரப்பினர் கோரி வருகின்றனர்.

    ஆனால், இதுவரை குற்றவாளிகள் யார் என்பது தெரியாமலேயே இருக்கிறது.

    புதுக்கோட்டை

    இயக்குநர் பா. ரஞ்சித் கண்டனம்

    இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற இயக்கங்கள், காவல்துறையினர் மற்றும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    முதல்வர் ஸ்டாலின் இது குறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை என்ற விமர்சனங்களும் தொடர்ந்து கொண்டிருந்தது.

    இந்நிலையில், அவர் நேற்று சட்டமன்றத்தில் இது குறித்து பேசினார். குற்றவாளிகள் கண்டிப்பாக கைது செய்யப்படுவர் என்று உறுதியும் அளித்தார்.

    இதற்கிடையில், "தொடரூம் சமூக அநீதி! புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்ச்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரனை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனங்கள்!!" என்று இயக்குநர் பா.ரஞ்சித் தன் கண்டனத்தை ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பா ரஞ்சித்
    தமிழ்நாடு
    ஸ்டாலின்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    பா ரஞ்சித்

    ப. ரஞ்சித்தின் தங்கலான் படத்திற்காக 4 மணி நேரம் மேக்கப் போடும் விக்ரம் விக்ரம்

    தமிழ்நாடு

    'மக்களோடு மக்களாக சுற்றி பார்த்துவிட்டு செல்கிறேன்' என்று காவல்துறையிடம் கூறிய எளிமையான முதல்வர் மகாபலிபுரம்
    ராமேஸ்வரம் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம்-காணொளி காட்சி மூலம் துவக்கி வைப்பு மு.க ஸ்டாலின்
    வைகுண்ட ஏகாதேசி - ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் அதிகாலை 4.45 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது இந்தியா
    பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்: என்ன நடந்தது? பாஜக

    ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் மு.க ஸ்டாலின்
    இமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து! இந்தியா
    பொங்கல் பரிசு வழக்கு: தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதலா? தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவையில் மாற்றம்: புதிய இடங்கள் யார் யாருக்கு? தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025