NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: ஒரு ராணுவ வீரர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: ஒரு ராணுவ வீரர் கைது 
    இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: ஒரு ராணுவ வீரர் கைது 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 17, 2023
    10:41 am

    செய்தி முன்னோட்டம்

    ஏப்ரல் 12ஆம் தேதி பஞ்சாப் பதிண்டா இராணுவ நிலையத்தில் 4 ராணுவ வீரர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் இன்று(ஏப் 17) ஒரு ராணுவ வீரர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    குற்றம் சாட்டப்பட்ட, இராணுவ வீரர் மோகன் தேசாய், குற்றத்தை ஒப்புக்கொண்டு, தனிப்பட்ட தகராறு காரணமாக தனது சக ஊழியர்களை சுட்டுக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

    துப்பாக்கிச் சூடு தொடர்பாக 4 வீரர்களிடம் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தப்பட்டதாக பஞ்சாப் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் சாட்சியான மேஜர் அசுதோஷ் சுக்லாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அடையாளம் தெரியாத இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    details

    இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்

    கொல்லப்பட்ட 4 வீரர்களின் பெயர்கள் சாகர், கமலேஷ், சந்தோஷ் மற்றும் யோகேஷ் என்று FIRரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    கமலேஷ், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். யோகேஷ் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

    உயிரிழந்த 4 பேரும் இராணுவத்தின் பீரங்கிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதலில், இந்த துப்பாக்கி சூடு, தப்பியோடிய காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்கின் வேலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

    ஆனால், இன்று ராணுவ வீரர் ஒருவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதால், இந்த சம்பவத்திற்கும் காலிஸ்தான் தலைவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பஞ்சாப்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 1 பஞ்சாப்
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 2 பஞ்சாப்
    விரைவு ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை அறிவிப்பு  ரயில்கள்
    இந்தியாவில் 10 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு: நேற்றில் இருந்து 30% அதிகரிப்பு  கொரோனா

    பஞ்சாப்

    லக்பீர் சிங் சந்துவைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் பரிசுத்தொகை கனடா
    டெபாசிட் வட்டியை உயர்த்திய பஞ்சாப் நேஷனல் வங்கி! வங்கிக் கணக்கு
    காவலர்களுடன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் மோதல்: என்ன நடக்கிறது அமிர்தசரஸில் இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திரௌபதி முர்மு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025