NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 7 வயது முஸ்லீம் சிறுவன் வகுப்பறையில் தாக்கப்பட்ட சம்பவம்: உச்ச நீதிமன்றம் விசாரணை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    7 வயது முஸ்லீம் சிறுவன் வகுப்பறையில் தாக்கப்பட்ட சம்பவம்: உச்ச நீதிமன்றம் விசாரணை 
    குழந்தையின் தந்தை கூறிய குற்றச்சாட்டுகள் எஃப்ஐஆரில் இல்லை

    7 வயது முஸ்லீம் சிறுவன் வகுப்பறையில் தாக்கப்பட்ட சம்பவம்: உச்ச நீதிமன்றம் விசாரணை 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 25, 2023
    05:33 pm

    செய்தி முன்னோட்டம்

    7 வயது இஸ்லாமிய சிறுவனை அறையும்படி பிற மாணவர்களுக்கு ஒரு ஆசிரியை உத்தரவிட்ட சம்பவம் சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்தது.

    இது குறித்து இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

    அப்போது, இந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், அது மாநிலத்தின் மனசாட்சியை அதிர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை கண்காணிக்க மூத்த ஐபிஎஸ் அதிகாரியை நியமிக்குமாறு உத்தரவிட்டது.

    உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள நேஹா பப்ளிக் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஒரு பள்ளி ஆசிரியை மாணவர்களிடம் ஒரு சிறுவனை அறையும்படி கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வைரலாக பரவியது.

    அந்த வைரல் வீடியோவை இங்கு காணலாம்.

    டிவ்க்ஜ்

    குழந்தையின் தந்தை கூறிய குற்றச்சாட்டுகள் எஃப்ஐஆரில் இல்லை

    இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இது கவலைக்குரியது என்றும், இது வாழ்வதற்கான உரிமை சம்பந்தப்பட்ட விஷயம் என்றும் கூறினர்.

    மேலும், இந்த வழக்கை அக்டோபர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாணவர்களின் கவுன்சிலிங் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும், பாதிக்கப்பட்ட குழந்தையின் கல்விக்கான பொறுப்பை ஏற்கவும் உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட்டது.

    குழந்தையின் தந்தை கூறிய குற்றச்சாட்டுகள் எஃப்ஐஆரில் இல்லாதது குறித்து விமர்த்தித்த உச்ச நீதிமன்றம், அதற்கு கடுமையான ஆட்சேபனைகளையும் பதிவு செய்தது.

    மதத்தின் காரணமாக தான் தனது மகன் தாக்கப்பட்டான் என்று பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை வாக்குமூலம் அளித்திருந்தார். ஆனால் அது எஃப்ஐஆரில் குறிப்பிடப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    இந்தியா

    சமீபத்திய

    மணிரத்னம்- கமல்ஹாசனின் 'தக் லைஃப்': கதைக்களம், OTT வெளியீடு மற்றும் பல கமல்ஹாசன்
    மீதமுள்ள எஸ்-400 ஏவுகணை அமைப்புகள் 2026க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்; ரஷ்யா அறிவிப்பு ரஷ்யா
    ChatGPT பயன்பாட்டில் இந்தியா முதலிடம்! ஓபன்ஏஐ
    மாம்பழம் நல்லதுதான், ஆனால் இந்த உணவுகளோடு சேர்த்து சாப்பிடக் கூடாது; எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள் உடல் ஆரோக்கியம்

    உத்தரப்பிரதேசம்

    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் காவல்துறை
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை கேரளா
    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் நேபாளம்
    உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் இந்தியா

    இந்தியா

    சீனாவால் அனுமதி மறுப்பு; யார் இந்த நைமன் வாங்சு, ஒனிலு தேகா மற்றும் மெபுங் லாம்கு? ஆசிய விளையாட்டுப் போட்டி
    இந்தோ சீன கலவை உணவான சோயா மஞ்சூரியன் செய்வது எப்படி? சமையல் குறிப்பு
    நிஜ்ஜார் கொலை குறித்த குற்றச்சாட்டுகளை பல வாரங்களுக்கு முன்பே இந்தியாவுடன் பகிர்ந்து கொண்ட கனடா  கனடா
    புதிய சர்வதேச மைதானத்தைப் பெறும் வாரணாசி.. இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி! கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025