NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல் - ககன்தீப் சிங் பேடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல் - ககன்தீப் சிங் பேடி 
    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல் - ககன்தீப் சிங் பேடி

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல் - ககன்தீப் சிங் பேடி 

    எழுதியவர் Nivetha P
    Jan 04, 2024
    12:58 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையானது அண்மை காலமாக அதிகரித்துள்ளது என்று செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

    குறிப்பாக மருத்துவத்துறை சார்ந்த வலிநிவாரணிகள் போதைக்காக பயன்படுத்தப்படுகிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    இந்நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தடைச்செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் வலிநிவாரணிகளை விற்பனை செய்யும் கடைகள் கண்டறியப்பட்டால் உடனடியாக சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ககன்தீப் சிங் பேடி, 'தமிழகத்தில் பான் மசாலா, புகையிலை போன்ற 391வகை போதைப்பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கான தடையினை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து கடந்த மே மாதமே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்' என்று கூறினார்.

    சீல் 

    மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை 

    தொடர்ந்து பேசிய அவர், 'கடந்த டிசம்பர் 11ம்.,தேதி முதல் 26ம்.,தேதிவரை நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 993 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றும்,

    'இதுவரை சுமார் ரூ.37.70லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, 1,400 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது' என்றும் தெரிவித்தார்.

    மேலும் அவர், 'இதுவரை தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யும் கடைகளுக்கு முதன்முறை ரூ.5000அபராதம், 2ம்-முறை சிக்கினால் ரூ.10,000அபராதம், 3ம்-முறை சிக்கினால் ரூ.25,000அபராதம் விதிக்கப்படுவதோடு, கடைக்கு சீல் வைக்கப்படும் என்னும் நடைமுறை இருந்தது' என்றுக்கூறிய அவர்,

    "இனி முதன்முறையே உடனடியாக கடைகளுக்கு சீல் வைக்கப்படும்" என்றும்,

    "மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்தால் அந்த மருந்தகங்கள்மீது கடும் நடவடிக்கை பாயும்" என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    உணவு பாதுகாப்பு துறை
    புகையிலை
    எச்சரிக்கை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழ்நாடு

    2023ல் தமிழக அரசு அறிமுகப்படுத்திய மாஸ் திட்டங்கள் என்னென்ன? - பார்ப்போம் வாருங்கள்  மு.க ஸ்டாலின்
    புதிய வகை தொற்று பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்  தொற்று
    அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்: தமிழக மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை  புதுச்சேரி
    ரூ.6000 புயல் நிவாரண தொகைத் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    உணவு பாதுகாப்பு துறை

    உலக உணவு பாதுகாப்பு தினம் 2023: ஆண்டுதோறும் 10ல் ஒருவர் பலி!  உலக உணவு பாதுகாப்பு தினம்
    வயிற்றுக்கு தீங்கு மற்றும் நோவு விளைவிக்கும் சில உணவுகள்  உலக உணவு பாதுகாப்பு தினம்
    மதுரை உணவகத்தில் பார்சல் உணவில் பிளேடு கிடந்ததாக புகார் - அதிகாரிகள் விசாரணை  மதுரை
    சென்னையில் செயல்படும் ஹோட்டல் குழம்பில் காகிதங்கள்-6 பேருக்கு வாந்தி, மயக்கம் சென்னை

    புகையிலை

    உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2023: "நமது அத்தியாவசிய தேவை உணவு; புகையிலை அல்ல"  உலகம்
    புகையிலை தடையை ரத்து செய்ய முடிவு: புதிய நியூசிலாந்து அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு  நியூசிலாந்து

    எச்சரிக்கை

    தமிழகத்தில் புதுவித சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் - எச்சரிக்கை விடுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு சமூக வலைத்தளம்
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    காலிமனை பதிவிற்கு நிலத்தின் தற்போதைய புகைப்படம் கட்டாயம் - பதிவுத்துறை உத்தரவு  தமிழ்நாடு
    அரசு விரைவு பேருந்துகளை சாலையோர உணவகங்களில் நிறுத்துவதற்கான நிபந்தனைகள் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025