NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாலியல் வழக்கில் மீண்டும் சர்ச்சையை தூண்டிய அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாலியல் வழக்கில் மீண்டும் சர்ச்சையை தூண்டிய அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு
    சர்ச்சையை தூண்டிய அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு

    பாலியல் வழக்கில் மீண்டும் சர்ச்சையை தூண்டிய அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 10, 2025
    06:23 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியின் ஹவுஸ் காஸில் உள்ள ஒரு பாரில் சந்தித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

    அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்டவர் "பிரச்சனையை தானே வரவழைத்து கொண்டார்" என்றும், கூறப்படும் சம்பவத்திற்கு அந்த பெண்ணும் பொறுப்பாளி என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது தற்போது சர்ச்சையை தூண்டியுள்ளது.

    பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் குற்றவாளி டிசம்பர் 2024 இல் கைது செய்யப்பட்டார்.

    தீர்ப்பு

    'பாலியல் வன்கொடுமை குறித்து மருத்துவர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை'

    நீதிபதி சஞ்சய் குமார் சிங் தனது தீர்ப்பில், "பாதிக்கப்பட்டவரின் குற்றச்சாட்டு உண்மை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவரே பிரச்சனையை வரவழைத்துக் கொண்டார் என்றும், அதற்கு அவரும் பொறுப்பு என்றும் முடிவு செய்யலாம் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது" என்று கூறினார்.

    "பாதிக்கப்பட்ட பெண்ணின் அறிக்கையிலும் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அவரது மருத்துவ பரிசோதனையில், அவரது கன்னித்திரை கிழிந்திருப்பது கண்டறியப்பட்டது, ஆனால் பாலியல் வன்கொடுமை குறித்து மருத்துவர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை," என்று நீதிமன்றம் கூறியது.

    சம்பவ விவரங்கள்

    வழக்கின் பின்னணி

    இந்த வழக்கு செப்டம்பர் 2024 ஆம் ஆண்டு தொடங்குகிறது.

    அப்போது நொய்டாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் மாணவியான பாதிக்கப்பட்ட பெண், மூன்று நண்பர்களுடன் டெல்லி பாருக்குச் சென்றார்.

    குற்றம் சாட்டப்பட்டவர் உட்பட சில ஆண்களை அவர் அங்கு சந்தித்தாள்.

    அவர் தனது போலீஸ் புகாரில், குடித்துவிட்டு, தன்னுடன் நெருங்கி பழக ஆரம்பித்ததாகவும், தன்னை வீட்டில் இறக்கிவிடுமாறு வற்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

    குற்றச்சாட்டுகள்

    பாதிக்கப்பட்டவரின் குற்றச்சாட்டுகளும் அதைத் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கையும்

    குற்றம் சாட்டப்பட்டவரின் வற்புறுத்தலின் பேரில், அவருடன் "ஓய்வெடுக்க" வர ஒப்புக்கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டினார்.

    பயணத்தின் போது அவர் தன்னை பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், நொய்டாவில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, குர்கானில் உள்ள ஒரு உறவினரின் பிளாட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவள் கூறினாள்.

    பின்னர், அவர் காவல்துறையை அணுகினார், மேலும் நொய்டா காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

    பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

    வாதம்

    குற்றம் சாட்டப்பட்டவரின் வாதமும் நீதிமன்றத்தின் பதிலும்

    அவரது கூற்றுக்களை மறுத்த குற்றம் சாட்டப்பட்டவர், தனது ஜாமீன் மனுவில், பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவு தேவைப்பட்டதால் அவர் தன்னுடன் ஓய்வெடுக்கச் சென்றதாகக் கூறினார்.

    பாலியல் பலாத்காரத்தை அவர் மறுத்தார், அது ஒருமித்த செயல் என்று வலியுறுத்தினார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண் ஒரு முதுகலைப் பட்டதாரி மாணவி என்பதால், அவர் காவல்துறையினரிடம் வெளிப்படுத்திய "அவரது செயலின் ஒழுக்கத்தையும் முக்கியத்துவத்தையும்" அவரால் புரிந்து கொள்ள முடியும் என்று கூறியது.

    ஜாமீன்

    குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

    குற்றத்தின் தன்மை, சாட்சியங்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் உடந்தை போன்ற வழக்கின் அனைத்து காரணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, நீதிபதி சிங், "விண்ணப்பதாரர் ஜாமீனுக்கு ஏற்ற வழக்கை உருவாக்கியுள்ளார்" என்ற முடிவுக்கு வந்தார்.

    பின்னர் அவர், "எனவே, ஜாமீன் விண்ணப்பம் இதன் மூலம் அனுமதிக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டார்.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் வினய் சரண் மற்றும் வழக்கறிஞர் பல்பீர் சிங் ஆகியோர் ஆஜரானார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாலியல் வன்கொடுமை
    பாலியல் தொல்லை
    உயர்நீதிமன்றம்

    சமீபத்திய

    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்
    மனிதர்களின் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் ஏஐ சாட்பாட்கள்; ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல் செயற்கை நுண்ணறிவு

    பாலியல் வன்கொடுமை

    கல்லூரி பெண்களை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி எனத்தீர்ப்பு ஸ்ரீவில்லிபுத்தூர்
    சந்தேஷ்காலி வழக்கை திரும்ப பெற்ற 2 பெண்கள்: பாஜக வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு சந்தேஷ்காலி
    பிரஜ்வால் வழக்கு: பொய் புகார் அளிக்க பெண் கட்டாயப்படுத்தப்பட்டதாக NCW தகவல் கர்நாடகா
    பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமேடிக் பாஸ்ப்போர்ட்டை ரத்து செய்ய MEA நடவடிக்கை  பாலியல் தொல்லை

    பாலியல் தொல்லை

    "28.9 % சதவிகித குழந்தைகள் பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர்": யுவன் கொந்தளிப்பு  யுவன் ஷங்கர் ராஜா
    பாலியல் தொல்லைகளை தடுக்க தனியார் பள்ளி பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு  பள்ளிகள்
    பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் பாஜக செயலாளர் கைது பாஜக
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் மஹிளா நீதிமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூர்

    உயர்நீதிமன்றம்

     'டெல்லி மதுபான வழக்கில் ஆம் ஆத்மி கட்சி குற்றவாளியாக அறிவிக்கப்பட உள்ளது': அமலாக்கத்துறை  டெல்லி
    மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை நீட்டித்தது டெல்லி நீதிமன்றம்  டெல்லி
    மதுபானக் கொள்கை தொடர்பான அனைத்து வழக்குகளிலும் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு டெல்லி
    'இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற சதி...': மும்பை உயர்நீதிமன்றம் மும்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025