NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தந்தையை கேள்விகளால் துளைத்த தருணம்: நாடாளுமன்ற குழுவில் சஷி தரூரை எதிர்கொண்ட மகன் இஷான் தரூர்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    தந்தையை கேள்விகளால் துளைத்த தருணம்: நாடாளுமன்ற குழுவில் சஷி தரூரை எதிர்கொண்ட மகன் இஷான் தரூர்
    சஷி தரூரை எதிர்கொண்ட மகன் இஷான் தரூர்

    தந்தையை கேள்விகளால் துளைத்த தருணம்: நாடாளுமன்ற குழுவில் சஷி தரூரை எதிர்கொண்ட மகன் இஷான் தரூர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 06, 2025
    10:04 am

    செய்தி முன்னோட்டம்

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றைத் தொடர்ந்து வாஷிங்டன் டிசியில் இந்தியாவின் இராஜதந்திர சந்திப்புகளின் போது ஒரு அரிய மற்றும் மனதைத் தொடும் தருணம் நடைபெற்றது.

    பத்திரிகையாளர்களை சந்தித்த குழுவின் தலைவர் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், அந்த கூட்டத்தில் இருந்த ஒரு பத்திரிகையாளரான தனது மகன் இஷான் தரூரிடமிருந்து ஒரு கேள்வியை எதிர்கொண்டார்.

    இஷான் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ​​பயங்கரவாதம் குறித்து ஒரு கூர்மையான கேள்வியை எழுப்பியபோது மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்பட்டார் தந்தை தரூர்.

    தருணம்

    இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்!

    நிருபர்களிடையே இருந்த இஷான், கேள்வி கேட்க மைக்கை எடுத்தபோது, ​​சசி தரூர் சிரித்துக்கொண்டே, அதை சரியாக உயர்த்துமாறு சைகை செய்தார்.

    "பாகிஸ்தான் மீண்டும்மீண்டும் மறுத்து வரும் நிலையில், பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்புக்கான ஆதாரங்களை இந்திய பிரதிநிதிகளிடம் எந்த நாடேனும் கேட்டதா?" என்றார்.

    "நீங்கள் இதை கேட்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். நான் இதை ஏற்பாடு செய்யவில்லை, நான் உங்களுக்கு சத்தியம் செய்கிறேன். இந்த நபர் தனது தந்தையை கேள்வி கேட்கிறார்," என்று தரூர் சிரித்துக்கொண்டே சொன்னார்.

    தொடர்ந்து,"யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை" என்றும், "எந்த வெளிநாட்டு அரசாங்கமும் அந்த பிரதிநிதிகளிடம் ஆதாரம் கேட்கவில்லை" என்றும் பதிலளித்தார்.

    இருப்பினும்,"இரண்டு அல்லது மூன்று இடங்களில்" ஊடகங்கள் இந்தக் கேள்வியை எழுப்பின என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

    ஆதாரங்கள்

    ஆதாரங்கள் இல்லாமல் இந்தியா நடவடிக்கை எடுக்காது: தரூர் 

    "நம்பகமான ஆதாரங்கள் இல்லாமல் இந்தியா இதைச் செய்திருக்காது என்பதை நான் மிகத் தெளிவாகக் கூற விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.

    மூன்று தருணங்களை மேற்கோள் காட்டி, பாகிஸ்தானில் இருந்து 37 ஆண்டுகால பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்வதையும், ஒவ்வொன்றும் தொடர்ந்து வழக்கமான மறுப்பை ஏற்படுத்துவதையும் தரூர் எடுத்துரைத்தார்.

    அபோதாபாத்தில் உள்ள ஒரு இராணுவ முகாமுக்கு அருகில் ஒசாமா பின்லேடன் கண்டுபிடிக்கப்பட்டபோதும், அவர் இருக்குமிடம் குறித்து தெரியாதென பாகிஸ்தான் மறுத்ததை அவர் நினைவூட்டினார்.

    26/11 மும்பை தாக்குதலில் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் மறுத்ததையும் அவர் குறிப்பிட்டார்.

    "எனவே பாகிஸ்தான் பற்றி எங்களுக்குத் தெரியும். அவர்கள் பயங்கரவாதிகளை அனுப்புவார்கள், அவர்கள் உண்மையில் பிடிபடும் வரை அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்று மறுப்பார்கள்," என்று அவர் கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #WATCH | Washington DC: On a question asked by his son about whether any country had asked the delegation for evidence of Pakistan's involvement in the Pahalgam attack and about Pakistan's repeated denials of any role in the attack, Congress MP Shashi Tharoor says, "I'm very glad… pic.twitter.com/RR0tcVOwpU

    — ANI (@ANI) June 5, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆபரேஷன் சிந்தூர்
    வைரல் செய்தி
    ட்ரெண்டிங் வீடியோ

    சமீபத்திய

    தந்தையை கேள்விகளால் துளைத்த தருணம்: நாடாளுமன்ற குழுவில் சஷி தரூரை எதிர்கொண்ட மகன் இஷான் தரூர் ஆபரேஷன் சிந்தூர்
    பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: ஆர்சிபி மார்க்கெட்டிங் தலைவர் கைது, நிகழ்வு நிறுவன அதிகாரிகள் கைது பெங்களூர்
    நிலவு ஆராய்ச்சிக்கு ஏவப்பட்ட ஜப்பானின் Resilience விண்கலம் தோல்வி நிலவு ஆராய்ச்சி
    எப்ஸ்டீன் சர்ச்சை, ஸ்பேஸ்எக்ஸ் முடக்கம்: முற்றுகிறது டிரம்ப் -மஸ்க் மோதல் எலான் மஸ்க்

    ஆபரேஷன் சிந்தூர்

    'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் தனது போர் விமானங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் போர்
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் இந்தியா
    'மீண்டும் ஒரு தாக்குதல் நடந்தால், இந்தியா உறுதியான பதிலடி கொடுக்கும்': மோடி பாகிஸ்தான்

    வைரல் செய்தி

    கார்ட்டூன் பொம்மையுடன் திருமணம்; ஆறாவது திருமண நாளைக் கொண்டாடிய ஜப்பான் நபர் ஜப்பான்
    காருக்கு இறுதி ஊர்வலம் நடத்தி அடக்கம் செய்த குடும்பம்; குஜராத்தில் நெகிழ்ச்சி சம்பவம் குஜராத்
    இணையத்தில் வைரலாகும் ஹரியானாவின் 1500 கிலோ எடையுள்ள கோடீஸ்வர எருமை  ஹரியானா
    ஹே நண்பனே விட்டு செல்லாதே..! சச்சின் கைகளை இருக பற்றி கொண்ட வினோத் காம்ப்ளி சச்சின் டெண்டுல்கர்

    ட்ரெண்டிங் வீடியோ

    இந்தியா vs பாகிஸ்தான் ஹாக்கி போட்டி: வந்தே மாதரம் பாடிய ரசிகர்கள்; வைரலாகும் காணொளி ஹாக்கி போட்டி
    ரஜினியின் பாட்ஷா படத்தில் வரும் 'கிரேட் டேன்' நாய் பற்றி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா  ரஜினிகாந்த்
    புஷ்பா 2: அல்லு அர்ஜுன் வாழ்க்கையில் ஒரு நாள் தேசிய விருது
    புரட்டாசி ஸ்பெஷல்: 'ஈரோடு அம்மன் மெஸ்' புகழ் ஜப்பான் காலிபிளவர் செய்முறை  புரட்டாசி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025