பள்ளிகளை குறி வைத்து மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்; இம்முறை ஜெய்ப்பூர் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பட்டுள்ளது
செய்தி முன்னோட்டம்
இன்று காலை, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள குறைந்தது நான்கு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, பள்ளியிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
"நான்கைந்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீசார் பள்ளிகளுக்கு வந்துள்ளனர்" என்று ஜெய்ப்பூர் போலீஸ் கமிஷனர் பிஜு ஜார்ஜ் ஜோசப் தெரிவித்ததாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
வெடிகுண்டு மற்றும் மோப்ப நாய்ப் படைகள் துணையுடன் வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக பள்ளி வளாகத்தைச் சோதனையிடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியவர்களை அடையாளம் காண விசாரணை நடந்து வருகிறது.
கடந்தகால அச்சுறுத்தல்கள்
சென்னை, டெல்லி பள்ளிகளுக்கும் விதிக்கப்பட்ட வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள்
ஜெய்ப்பூரில் நடந்த இந்த சம்பவம், டெல்லி-என்சிஆரில் உள்ள 150க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இதுபோன்ற அச்சுறுத்தல்கள் வந்த 12 நாட்களுக்குப் பிறகும், சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் பல தனியார் பள்ளிகளுக்கு வந்த எச்சரிக்கை மின்னஞ்சல்களை தொடர்ந்து வந்துள்ளது.
இதனால், ஜெய்ப்பூர் சுற்றிலும் பரவலான பீதியை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, 20 மருத்துவமனைகள், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மற்றும் டெல்லியில் உள்ள வடக்கு ரயில்வேயின் சிபிஆர்ஓ அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
அறிக்கைகளின்படி, டெல்லி பள்ளிகளுக்கு வந்த அச்சுறுத்தல்கள், ரஷ்யாவை தளமாகக் கொண்ட அஞ்சல் சேவையிலிருந்து அனுப்பப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை வந்த அச்சுறுத்தல்கள் ஐரோப்பாவை தளமாகக் கொண்ட அஞ்சல் சேவை நிறுவனமான "beeble.com" இலிருந்து அனுப்பப்பட்டன.
மின்னஞ்சல் விவரங்கள்
ஞாயிறு மின்னஞ்சல்கள் 'கோர்ட்' குழுவால் அனுப்பப்பட்டது
ஞாயிற்றுக்கிழமை பல டெல்லி கல்வி நிறுவனங்களுக்கு வந்த மின்னஞ்சல்களில், "உங்கள் கட்டிடத்தில் வெடிகுண்டுகளை வைத்துள்ளேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் அவை வெடிக்கும். இது ஒரு அச்சுறுத்தல் அல்ல, வெடிகுண்டை நிராயுதபாணியாக்க சில மணிநேரங்கள் உள்ளன. இல்லையெனில் கட்டிடத்திற்குள் இருக்கும் அப்பாவி மக்களின் இரத்தம் உங்கள் கைகளில் இருக்கும். இந்த படுகொலையின் பின்னணியில் 'கோர்ட்' என்ற குழு உள்ளது" என்று அந்த மின்னஞ்சல் மேலும் கூறியுள்ளது.
இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக தனித்தனியாக, மே 6ஆம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் குறைந்தது 14 பள்ளிகளுக்கு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன.
நான்கு நாட்களுக்குப் பிறகு, வெடிகுண்டு புரளி அஞ்சல்களில் "பாகிஸ்தான் தொடர்பு" இருப்பதைக் கண்டறிந்ததாக அகமதாபாத் போலீசார் தெரிவித்தனர்.