NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராஜஸ்தான் சுரங்கத்தில் லிப்ட் சரிந்து விழுந்ததால் மூத்த விஜிலென்ஸ் அதிகாரி பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராஜஸ்தான் சுரங்கத்தில் லிப்ட் சரிந்து விழுந்ததால் மூத்த விஜிலென்ஸ் அதிகாரி பலி

    ராஜஸ்தான் சுரங்கத்தில் லிப்ட் சரிந்து விழுந்ததால் மூத்த விஜிலென்ஸ் அதிகாரி பலி

    எழுதியவர் Sindhuja SM
    May 15, 2024
    01:36 pm

    செய்தி முன்னோட்டம்

    ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள கோலிஹான் சுரங்கத்தில் நேற்று இரவு லிப்ட் சரிந்து விழுந்ததில் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த விஜிலென்ஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

    அந்த தாமிர சுரங்கத்தில் லிப்ட் இடிந்து விழுந்ததில் விஜிலென்ஸ் குழு உட்பட 15 பேர் சிக்கினர். சிக்கியிருந்த மற்ற 14 அதிகாரிகள் நேற்று இரவோடு இரவாக மீட்கப்பட்டனர்.

    ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி உபேந்திர பாண்டே, கொல்கத்தாவில் இருந்து வந்த விஜிலென்ஸ் குழுவுடன் சுரங்கத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, ​​லிப்ட் சுமார் 577 மீட்டர் உயரத்தில் விபத்துக்குள்ளானது.

    இந்தியா 

    இரவோடு இரவாக நடந்த மீட்பு பணி 

    தற்போது பாண்டேவின் உடல் சுரங்கத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

    சிக்கிய அதிகாரிகளில் கெத்ரி காப்பர் காம்ப்ளக்ஸ் பிரிவு தலைவர் ஜி.டி.குப்தா மற்றும் கோலிஹான் சுரங்கத்தின் துணை பொது மேலாளர் ஏ.கே.சர்மா ஆகியோர் அடங்குவர்.

    விஜிலென்ஸ் குழுவுடன் புகைப்படக் கலைஞராக சுரங்கத்திற்குள் நுழைந்த பத்திரிகையாளரும் இந்த விபத்தில் சிக்கினார்.

    முதலில் மீட்கப்பட்ட மூன்று அதிகாரிகள் எலும்பு முறிவுகள் மற்றும் பிற காயங்களுடன் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

    இரண்டாவது சுற்றில் மேலும் ஐந்து பேர் வெளியேற்றப்பட்டனர். மீதமுள்ளவர்கள் அதன் பிறகு, பரபரப்பான சூழ்நிலையில் இரவோடு இரவாக மீட்கப்ட்டனர்.

    முன்னதாக, சிக்கியவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய 8 பேர் கொண்ட குழு வெளியேறும் வாயில் வழியாக சுரங்கத்திற்குள் அனுப்பப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராஜஸ்தான்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ராஜஸ்தான்

    ராஜஸ்தான்: பிரதமரின் பேரணிக்கு அனுப்பப்பட்ட 6 போலீசார் லாரி விபத்தில் சிக்கி பலி காவல்துறை
    ராஜஸ்தான் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் மல்லிகார்ஜூன் கார்கே  மல்லிகார்ஜுன் கார்கே
    ராஜஸ்தானில் இன்று சட்டசபை தேர்தல்; ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி தேர்தல்
    தொடரும் நீட் மரணம்; மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவி கோட்டாவில் தற்கொலை நீட் தேர்வு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025