NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நித்தியானந்தா உயிரிழந்து விட்டாரா? அவரது 4,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் யாருக்கு?
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    நித்தியானந்தா உயிரிழந்து விட்டாரா? அவரது 4,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் யாருக்கு?
    நித்தியானந்தா, பல சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளின் மையமாக இருந்தார்

    நித்தியானந்தா உயிரிழந்து விட்டாரா? அவரது 4,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் யாருக்கு?

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 01, 2025
    04:10 pm

    செய்தி முன்னோட்டம்

    திருவண்ணாமலை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் ஆசிரமங்களை நிறுவி, ஆன்மிக சொற்பொழிவுகள் நடத்தி பிரபலமான சுவாமி நித்தியானந்தா, பல சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளின் மையமாக இருந்தார்.

    பல சர்ச்சைகளில் சிக்கிய அவர் ஈக்குவடோர் தீவுகளுக்கு தப்பி சென்றதாக கூறப்பட்டது.

    அங்கிருந்து கைலசா என தனி நாட்டை நிறுவி ஆட்சி செய்துவருவதாக கூறிய நித்தியானந்தா அங்கிருந்தபடி இணையம் வாயிலாக தன்னுடைய சிஷ்யர்களிடம் சொற்பொழிவு நிகழ்த்தி வந்தார்.

    இந்நிலையில், நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் ஒரு ஆன்மிக சொற்பொழிவில், நித்தியானந்தா இந்து தர்மத்தை பாதுகாக்க உயிர்த் தியாகம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

    இந்த தகவல் காலை முதல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. ஆனால், இந்த தகவலின் உண்மைத் தன்மை குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

    சர்ச்சைகள்

    தொடர் சர்ச்சைகளும், கண்ணாம்பூச்சி ஆட்டங்களும் 

    பெங்களுருவில் பிடதி ஆஸ்ரமத்தை நிறுவி நடத்தி வந்த நித்யானந்தா, நடிகை ஒருவருடன் இருக்கும் வீடியோ டிவியில் வைரலானதை தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கினார்.

    அமலாக்கத்துறை, CID என தொடர்ச்சியாக புலனாய்வு துறையினர் அவர் மீது வழக்குகள் பதிய, திடீரென மாயமானார்.

    பின்னரே கைலாஸா என்ற தனி நாட்டை நிறுவி அங்கே தனது சிஷ்யர்களுடன் ஆட்சி செய்து வருவதாகவும், ஐ.ந சபையின் ஒப்புதல் பெற்றதாகவும் கூறினார்.

    கைலாசாவிற்கு வர விரும்புவர்களுக்கு தனி பாஸ்போர்ட் வழங்கப்படுவதாகவும் கூறினார்.

    கைலாஸா எங்கு உள்ளது என கூறப்போவதாக கடந்த ஆண்டு அவர் கூறிய நிலையில், நாட்டில் பல இடங்களில் கைலாஸாவின் கிளைகளில் இருப்பதால், அங்கிருந்த படியே சிவனை அடையாளம் என குண்டை தூக்கி போட்டார்.

    சொத்து 

    நித்யானந்தாவின் சொத்துக்கள் என்னவாகும்?

    நித்தியானந்தாவின் மறைவு கைலாஸா போல பிராங்க்காக இருக்கும் என பலரும் கூறி வரும் நிலையில், ஒரு வேளை அவரது மறைவு உண்மையாக இருந்தால், அவருடைய 4000 கோடி ரூபாய் சொத்துகள் யாருக்கு போகும் என்ற கேள்வியும் இணையத்தில் உலவுகிறது.

    நித்யனந்தாவின் பிரதான சிஷ்யையாக அறியப்படும் நடிகை ரஞ்சிதாவிடம் தான் அந்த சொத்தின் உரிமை உள்ளது என ஒரு சில ஊடகங்கள் கூறுகின்றன.

    மறுபுறம், புலனாய்வுத்துறை வழக்குகள் அவர் மேல் இருப்பதால் அவரது சொத்துகள் அனைத்தும் அரசு வசமே செல்லும் எனவும், வழக்கு முடிந்த பின்னர் தான் அடுத்த நடவடிக்கை எனவும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நித்தியானந்தா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    நித்தியானந்தா

    மதுரை ஆதீன மடத்திற்கு உரிமை கோரும் நித்தியானந்தா - மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  உயர்நீதிமன்றம்
    கைலாசா எங்கிருக்கிறது என ஜூலை 21 தெரிவிக்கவுள்ளதாக நித்தியானந்தா அறிவிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025