NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க பள்ளி நலக்குழு - மத்திய பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க பள்ளி நலக்குழு - மத்திய பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
    மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க பள்ளி நலக்குழு - மத்திய பள்ளி கல்வித்துறை

    மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க பள்ளி நலக்குழு - மத்திய பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

    எழுதியவர் Nivetha P
    Oct 04, 2023
    12:45 pm

    செய்தி முன்னோட்டம்

    அண்மை காலமாகவே மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக நீட் தேர்வு முடிவுகள் மற்றும் இதர பல்வேறு காரணங்களால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

    இதனை தடுக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வந்தது.

    இதனிடையே, போட்டி தேர்வு நடக்கும் ராஜஸ்தான் கோட்டாவில் மருத்துவ மற்றும் பொறியியல் நுழைவு தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இதுபோன்ற தற்கொலை நிகழ்வுகளை தடுக்க 'உம்மீட்' என்னும் வழிகாட்டு வரைவினை மத்திய பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, பள்ளி முதல்வர் தலைமையிலான பள்ளி நலக்குழு ஒன்றினை அமைக்கலாம். அதிலுள்ள உறுப்பினர்கள் தற்கொலை போன்ற நெருக்கடியான சூழலை கையாளுவதற்கான தகுதி கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    வரைவு 

    தோல்வி பயத்தினை களைக்க முயற்சி செய்ய வேண்டும் 

    மேலும் அந்த வரைவில், மன அழுத்தத்தில் மாணவர்கள் இருந்தால், பெற்றோர் அல்லது அதனை அறியும் சமூகத்தினை சேர்ந்தோர் நலக்குழுவிடம் கூறி, தற்கொலை எண்ணத்தை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து, பள்ளியில் தோல்விகளை கண்டு அஞ்சுதல், சக மாணவர்களோடு ஒப்பிடுதல், படிக்க பயப்படுவது, வெற்றியின் அளவீடுகளை எண்ணி பயப்படுவது, தோல்வியினை நிரந்தரம் என எண்ணி அதிலிருந்து மீளாமல் தவிப்பது போன்றவைகளை நீக்க முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதேபோல் அந்த வரைவில், இருண்ட தாழ்வாரங்களை ஒளிர செய்தல், தோட்ட கலை, காலியான வகுப்பறைகளை பூட்டி வைத்தல் போன்ற பணிகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நீட் தேர்வு
    தற்கொலை
    மத்திய அரசு

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    நீட் தேர்வு

    நீட் நுழைவுத் தேர்வுக்கு தேதிகள் அறிவிப்பு! இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    நீட் தேர்வு விலக்கு குறித்து இன்னும் 2 தினங்களில் விளக்கம் - மா.சுப்ரமணியம் சென்னை
    அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு அதிமுக

    தற்கொலை

    கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை  கோவை
    கோவை DIG தற்கொலைக்கான காரணம் இதுதான்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் கோவை
    முந்தைய நாளே தற்கொலைக்கு தயாரான கோவை டிஐஜி - பரபரப்பு தகவல்  கோவை
    கோவை டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை வழக்கு - 8 பேருக்கு சம்மன்  காவல்துறை

    மத்திய அரசு

    புழுங்கல் அரிசியை தொடர்ந்து பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு இந்தியா
    'ஏழை மக்களின் நிலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது' : பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    பரனூர் சுங்கச்சாவடியில் நவீன ஊழல் - சிஏஜி அறிக்கை மூலம் அம்பலம் செங்கல்பட்டு
    வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு: மத்திய அரசு அதிரடி  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025