NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
    முன்னதாக கர்ப்பத்தை கலைக்க அனுமதி மறுத்த பம்பாய் உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

    பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 22, 2024
    02:40 pm

    செய்தி முன்னோட்டம்

    பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியின் 30 வார கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக உடனடியாக கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அந்த சிறுமியின் ஒவ்வொரு மணி நேரமும் அவளுக்கு முக்கியமானது என்று கூறி இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

    முன்னதாக கர்ப்பத்தை கலைக்க அனுமதி மறுத்த பம்பாய் உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

    இந்திய தலைமை நீதிபதி DY சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைக்க ஒரு குழுவை அமைக்குமாறு மும்பையில் உள்ள சியோன் மருத்துவமனைக்கு உத்தரவிட்டது.

    பாதிக்கப்பட்ட சிறுமி பாதுகாப்பாக மருத்துவ வசதிக்கு அழைத்துச் செல்லப்படுவதையும், செயல்முறைக்கான செலவை மகாராஷ்டிர அரசு ஏற்க ஒப்புக்கொண்டதையும் உறுதி செய்யுமாறு உச்ச நீதிமன்றம் மருத்துவமனைக்கு உத்தரவிட்டது.

    உச்ச வரம்பு

    உச்ச வரம்பை தாண்டியதால் உடனடியாக மருத்துவ அறிக்கையை கேட்ட உச்ச நீதிமன்றம்

    2023ஆம் ஆண்டு பம்பாய் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் தாய் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

    சிறுமியின் தாயின் கூற்றுப்படி, அவரது மகள் பிப்ரவரி 2023இல் காணாமல் போனார்.

    பின்னர் மூன்று மாதங்களுக்கு கழித்து ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    முன்னதாக இந்த வழக்கில் கருக்கலைப்பு சம்மந்தமாக சிறுமியின் உடல் மற்றும் உளவியல் நிலை குறித்து மும்பை சியோன் மருத்துவமனையிடம் அறிக்கை கோரியிருந்தது உச்ச நீதிமன்றம்.

    தற்போது அந்த அறிக்கையின்படி உடனடியாக கருக்கலைப்பு செய்ய உத்தரவிட்டுள்ளது.

    மருத்துவக் கருச்சிதைவு சட்டத்தின் கீழ், திருமணமான பெண்களுக்கும், கற்பழிப்புக்கு ஆளானவர்கள் உட்பட சிறப்புப் பிரிவுகளில் உள்ளவர்களுக்கும், 24-வாரங்கள்தான் கர்ப்பத்தை கலைப்பதற்கான உச்ச வரம்பு.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாலியல் வன்கொடுமை
    உச்ச நீதிமன்றம்
    கர்ப்பம்

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    பாலியல் வன்கொடுமை

    பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் டிஜிபிக்கு ஜாமீன்  தமிழ்நாடு
    மணிப்பூர் பெண்கள் வீடியோ வழக்கு: 5வது குற்றவாளி கைது  மணிப்பூர்
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  மணிப்பூர்
    மணிப்பூர் வைரல் வீடியோ: உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்  மணிப்பூர்

    உச்ச நீதிமன்றம்

    சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு சண்டிகர்
    சண்டிகர் மேயராக அறிவிக்கப்பட்டார் ஆம் ஆத்மி வேட்பாளர்: 'சட்டவிரோத' வாக்கெடுப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்  சண்டிகர்
    பிரபல சட்ட அறிஞர் ஃபாலி எஸ் நாரிமன் தனது 95வது வயதில் காலமானார் சட்டம்
    திருமணம் செய்து கொண்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட இராணுவ செவிலியருக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு  இந்திய ராணுவம்

    கர்ப்பம்

    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு  செங்கல்பட்டு
    பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் இருவரும் பலி  குழந்தைகள்
    ஜிப்மர் மருத்துவமனை பெண் ஊழியர் கொலை வழக்கில் புதிய திருப்பம் - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    நீங்கள் IVF-ஐ திட்டமிடுவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய சோதனைகள் மருத்துவ ஆராய்ச்சி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025