NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்னென்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்னென்ன?
    ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்னென்ன?

    ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்னென்ன?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 08, 2023
    04:51 pm

    செய்தி முன்னோட்டம்

    நடப்பு நிதியாண்டில் (FY24) ரிசர்வ் வங்கியின் இரண்டாவது நிதிக் கொள்கைக் கூட்டத்தை இன்று கூட்டியது நிதிக் கொள்கைக் குழு.

    இந்தக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை ஏற்கனவே இருக்கும் அதே 6.5%-த்திலேயே தக்க வைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    மேலும், நடப்பு நிதியாண்டிற்கான GDP வளர்ச்சியானது 6.5% இருக்கும் என ஏற்கனவே கணித்திருந்தது ரிசர்வ் வங்கி. அந்த கணிப்பு மாற்றப்படாமல் அப்படியே தொடர்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    நடப்பு நிதியாண்டின் சில்லரைப் பணவீக்கமானது, 5.1%-ஆக இருக்கும் எனக் கணித்திருக்கிறது RBI. இந்த அளவு முன்னர் 5.2%-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மேலும், ஒட்டுமொத்த பணவீக்க அளவானது RBI-யின் இலக்கான 4% மேல் இருப்பதாகவும், இந்த நிதியாண்டு முழுவதும் அப்படியே தொடர வாய்ப்பிருப்பதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

    இந்தியா

    ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறுவது என்ன? 

    இந்தக் கூட்டத்தில் உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ்.

    உலக நாடுகளிடையே இருக்கும் பிரச்சினைகள் காரணமாக உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகளில் தொய்வு ஏற்படலாம் எனக் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

    மேலும், உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் இந்தியப் பொருளாதாரமும், இந்திய நிதித்துறையும் நிலைத்து நிற்பதாகத் தெரிவித்திருக்கிறார் அவர்.

    ரிசர்வ் வங்கியானது மாறி வரும் பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப இந்திய பொருளாதாரம் மற்றும் நிதித்துறையை நிலைத்தன்மையுடன் வைத்திருக்க தேவையான மாற்றங்களைக் கொண்டு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரிசர்வ் வங்கி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ரிசர்வ் வங்கி

    அதானி பங்குகள் வீழ்ச்சி; வங்கித் துறை நிலையாக தான் உள்ளது: RBI இந்தியா
    அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் இந்தியா
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்
    ரூபாய் நோட்டில் கிறுக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்று கூறப்படுவது உண்மையா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025