Page Loader
முடிவுக்கு வந்ததது சகாப்தம்; முழு அரசு மரியாதையுடன் ரத்தன் டாடா உடல் தகனம் செய்யப்பட்டது
முழு அரசு மரியாதையுடன் ரத்தன் டாடா உடல் தகனம் செய்யப்பட்டது

முடிவுக்கு வந்ததது சகாப்தம்; முழு அரசு மரியாதையுடன் ரத்தன் டாடா உடல் தகனம் செய்யப்பட்டது

எழுதியவர் Sekar Chinnappan
Oct 10, 2024
07:14 pm

செய்தி முன்னோட்டம்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் மதிப்பிற்குரிய தலைவர் ரத்தன் டாடாவின் உடல் வியாழன் (அக்டோபர் 10) மாலை மகாராஷ்டிராவின் வோர்லியில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. மும்பையில் உள்ள ப்ரீச்-கேண்டி மருத்துவமனையில் புதன்கிழமை அவர் காலமானார். அவருக்கு வயது 86. அவரது உடல் இறுதிச் சடங்குகளுக்காக வொர்லியில் உள்ள தகனக் கூடத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, மும்பை காவல்துறையால் அவருக்கு முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் டாடாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு

மத்திய அரசு சார்பில் அமித் ஷா அஞ்சலி

ஆசியான்-இந்தியா மற்றும் கிழக்காசிய உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி லாவோஸ் சென்றுள்ள நிலையில், இந்திய அரசின் சார்பில் டாடாவின் அஸ்திக்கு அமித் ஷா அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, டாடாவின் உடல் தெற்கு மும்பையில் உள்ள தேசிய கலை நிகழ்ச்சிகளுக்கான மையத்தில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொழிலதிபர் ரத்தன் டாடா இந்தியாவின் மிகப்பெரிய குழுமமான டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் இருந்தார். அவர் தொழில் மட்டுமல்லாது பொது வாழ்க்கையில் தீவிரமாக இருந்தார். பல்வேறு தேசிய மற்றும் உலகளாவிய தளங்களில் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.