Page Loader
சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்
ஐபிசியில் மத்திய அரசு மாற்றங்களைச் செய்ய வேண்டிய நேரம் இது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம்

எழுதியவர் Sindhuja SM
Jun 02, 2023
11:00 am

செய்தி முன்னோட்டம்

பெண்களின் சடலம் பலாத்காரம் செய்யப்படுவதை(நெக்ரோபிலியா) இந்திய தண்டனைச் சட்ட(ஐபிசி) பிரிவு 375 குற்றமாக கருதாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. நீதிபதிகள் வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஐபிசி பிரிவு 377ன் கீழ் இயற்கைக்கு மாறான குற்றங்களின் எல்லைக்குள் இந்த குற்றம் வராது என்று கூறியது. ஐபிசியின் 375 மற்றும் 377 பிரிவுகளை கவனமாகப் படித்தால், இறந்த உடலை மனிதன் என்று அழைக்க முடியாது என்பது தெளிவாகிறது. எனவே, சட்டப்பிரிவு 375 அல்லது 377 இன் விதிகள் இந்த குற்றத்திற்கு செல்லாது" என்று நீதிமன்றம் கூறி இருக்கிறது.

details

ஐபிசியின் 377வது பிரிவைத் திருத்த வேண்டும்: நீதிமன்றம் 

எனவே, நெக்ரோபிலியாவை குற்றமாக மாற்ற, ஐபிசியில் மத்திய அரசு மாற்றங்களைச் செய்ய வேண்டிய நேரம் இது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஐபிசியின் 377வது பிரிவைத் திருத்த வேண்டும் அல்லது நெக்ரோபிலியாவை குற்றமாக்க ஒரு தனி தண்டனை சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் அரசாங்கத்தை வலியுறுத்தியது. மேலும், பெண்களின் சடலத்திற்கு எதிரான குற்றங்களை தடுக்க அனைத்து அரசு பிணவறைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிணவறை சுகாதாரத்தை பராமரிக்கவும், பிணவறைகளில் தனியுரிமையை உறுதிப்படுத்தவும், உள்கட்டமைப்பு தடைகளை அகற்றவும், பிணவறை ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.