NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் ஒரு ராஜ்யசபா எம்.பியும் உள்ளார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் ஒரு ராஜ்யசபா எம்.பியும் உள்ளார்
    மொத்த இறப்பு எண்ணிக்கை 713ஆக உயர்ந்துள்ளது.

    போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் ஒரு ராஜ்யசபா எம்.பியும் உள்ளார்

    எழுதியவர் Sindhuja SM
    Oct 08, 2023
    06:44 pm

    செய்தி முன்னோட்டம்

    தேசிய மக்கள் கட்சி (NPP) தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வான்வீரோய் கர்லுகி மற்றும் அவரது குடும்பத்தினர் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது.

    இஸ்ரேல் மீது நேற்று அதிகாலை திடீரென்று பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

    அந்த தாக்குதல் ஆரம்பித்து 24 மணி நேரத்துக்கு மேல் ஆகியும், தெற்கு இஸ்ரேலின் பல பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.

    இதனால், மொத்த இறப்பு எண்ணிக்கை 713ஆக உயர்ந்துள்ளது.

    சமீபத்திய தகவல்களின்படி, 400 இஸ்ரேலியர்களும் 313 பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், புனித யாத்திரைக்காக ஜெருசலேமுக்கு பயணம் செய்த எம்பி கர்லுகி, அவரது மனைவி, மகள் மற்றும் 24 இந்தியர்கள் பெத்லகேமில் சிக்கிக்கொண்டனர்.

    ட்ஜ்வ்க்

    இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்துடன் தொடர்பில் உள்ளார் மேகாலயா முதல்வர்

    இஸ்ரேலில் சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதி செய்ய வெளியுறவு அமைச்சகத்துடன்(MEA) தொடர்பில் இருப்பதாக NPP மேலாளரும் மேகாலயா முதல்வருமான கான்ராட் சங்மா தெரிவித்துள்ளார்.

    மேகாலயாவை சேர்ந்த அந்த எம்பி, அவரது குடும்பத்தினர் மற்றும் 24 இந்தியர்களை இன்று இரவுக்குள் இந்திய தூதரகம் எகிப்துக்கு வெளியேற்றும் என்று கூறப்படுகிறது.

    இஸ்ரேலில் சிக்கித் தவித்த பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா இன்று காலை பத்திரமாக இந்தியா திரும்பியதாக தகவல்கள் கூறுகின்றன.

    இதற்கிடையில், இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம் இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கான அறிவுரையை நேற்று வெளியிட்டது.

    இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இந்த அறிவுரையில் கூறப்பட்டிருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மாநிலங்களவை
    இஸ்ரேல்
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    பூனையைக் கைது செய்து அதிரடி காட்டிய காவல்துறை; சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவின் சுவாரஸ்ய பின்னணி டிரெண்டிங்
    ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2025
    பேஸ்புக் பதிவால் சிக்கல்; மூத்த மகனை கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் நீக்கினார் லாலு பிரசாத் யாதவ் பீகார்
    ஐபிஎல் 2025 சிஎஸ்கேvsஜிடி: டாஸ் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்; குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச்சு ஐபிஎல் 2025

    இந்தியா

    பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி- ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புகழாரம் ரஷ்யா
    இந்தியாவின் பழமையான நகரங்களையும் அவற்றின் காலத்தால் அழியாத அழகையும் பற்றி ஒரு பார்வை  மத்திய பிரதேசம்
    ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் ஆசிய விளையாட்டுப் போட்டி
    பெண் பயணிகளுக்கு பக்கவாட்டு இருக்கை.. ஏர் இந்தியாவின் புதிய அறிவிப்பு! ஏர் இந்தியா

    மாநிலங்களவை

    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    சில எம்.பி.க்கள் இந்த சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி இந்தியா
    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி இந்தியா
    தமிழ் பழமொழி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்த நிதியமைச்சர் டெல்லி

    இஸ்ரேல்

    குழந்தைக்கு டிக்கெட் இல்லாததால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர் உலகம்
    இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு உலக செய்திகள்
    2,000 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை: ஈரான் அதிரடி உலகம்
    5,000 ராக்கெட்டுகளை ஏவிய காசா: போர் நிலையை அறிவித்தது இஸ்ரேல்  உலக செய்திகள்

    பயங்கரவாதம்

    நக்சல் எதிர்ப்பிலிருந்து தீவிரவாத எதிர்ப்புக்கு இடம் பெயரும் சிஆர்பிஎஃப் கோப்ரா படைப்பிரிவு ஜம்மு காஷ்மீர்
    சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொலை; புதிய தலைவர் அறிவிப்பு ஐ.எஸ்.ஐ.எஸ்
    தீவிரவாதியின் மனைவியை நாட்டின் அமைச்சராக நியமித்த பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர் பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025