LOADING...
மக்களவையில் Operation Sindoor மீதான விவாதத்தை தொடங்கி வைத்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மக்களவையில் Operation Sindoor மீதான விவாதத்தை தொடங்கி வைத்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 28, 2025
03:22 pm

செய்தி முன்னோட்டம்

மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். தனது தொடக்க உரையில், அவர், ஆபரேஷன் சிந்தூரைப் பாராட்டி,"பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு... ஒன்பது பயங்கரவாத உள்கட்டமைப்பு தளங்கள் தாக்கப்பட்டன, இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், அவர்களின் பயிற்சியாளர்கள் மற்றும் கையாளுபவர்கள் குறிவைக்கப்பட்டனர்," என்று கூறினார். இந்தியா ராணவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் பின்னணி, நோக்கம் மற்றும் வெற்றிகள் குறித்து விரிவாக விளக்கினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

 பதிலடி

பாக்., ஆதரவு தீவிரவாதிகளுக்கு திட்டமிட்ட பதிலடி

"பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல பொதுமக்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி நடவடிக்கையாக, ஆப்ரேஷன் சிந்தூர் மூலமாக 9 தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன," என அமைச்சர் கூறினார். இந்தியாவின் நவீன ஏவுகணைத் திறன்கள், குறிப்பாக S-400 போன்ற உயர் தொழில்நுட்ப ஆயுதங்கள் மூலம், 22 நிமிடங்களில் பாகிஸ்தானின் முக்கிய இலக்குகள் தகர்க்கப்பட்டதாக அவர் கூறினார். "இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள் கொல்லப்பட்டனர்," எனவும் அவர் சுட்டிக்காட்டினார். "இந்தியாவின் எந்த ஒரு ராணுவத் தளத்துக்கும் சேதம் ஏற்படவில்லை. பாகிஸ்தான் முயற்சி செய்த போதிலும், அவர்கள் ராணுவத்துடன் நம்மால் எந்த நேரத்திலும் முற்றுப்பூர்வமாகப் போராடும் வகையில் தயாராகவே இருக்கிறோம்," என்றார் ராஜ்நாத் சிங்.

அழுத்தம்

"தாக்குதலை நிறுத்த ஏதும் அழுத்தம் இல்லை"

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நிறைவேறிய இலக்குடன் நிறுத்தப்பட்டது எனவும், வெளிநாட்டுகளின் அழுத்தம் காரணமாக அல்ல என்பதையும் அவர் வலியுறுத்தினார். "இந்திய விமானப்படையின் திறமையை உலகம் உணர்ந்தது," என்றும் அவர் கூறினார். தொடர்ந்து அவர், "இந்தியா அமைதியை விரும்புகிறது. ஆனால் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால், ஆப்ரேஷன் சிந்தூர் தொடரும்" என எச்சரிக்கை விடுக்கவும் தவறவில்லை.

அமளி

முன்னதாக மக்களவை நடவடிக்கைகள் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டன

ஆபரேஷன் சிந்தூர் மீதான விவாதம் முன்னதாக இன்று நண்பகலுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பீகாரில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால், விவாதம் பிற்பகல் 2:00 மணிக்கு தொடங்குவதற்கு முன்பே கீழ்சபை மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை காலையில் கேள்வி நேரத்திற்காக மீண்டும் கூடியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் SIRக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஆபரேஷன் சிந்தூர் மீதான விவாதத்திற்குப் பிறகு, SIR மீதான விவாதம் குறித்து அரசாங்கத்திடம் உத்தரவாதம் அளிக்க அவர்கள் கோரினர்.