NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சதய விழா 2024 ஸ்பெஷல்: திருமுறை கண்ட ராஜராஜ சோழன்; தேவாரம் பாடல்களை மீட்டெடுத்தது எப்படி?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சதய விழா 2024 ஸ்பெஷல்: திருமுறை கண்ட ராஜராஜ சோழன்; தேவாரம் பாடல்களை மீட்டெடுத்தது எப்படி?
    திருமுறை கண்ட ராஜராஜ சோழன்

    சதய விழா 2024 ஸ்பெஷல்: திருமுறை கண்ட ராஜராஜ சோழன்; தேவாரம் பாடல்களை மீட்டெடுத்தது எப்படி?

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 25, 2024
    01:16 pm

    செய்தி முன்னோட்டம்

    சோழ வம்சத்தின் புகழ்பெற்ற ஆட்சியாளரான ராஜராஜ சோழன், அவரது கட்டிடக்கலை அற்புதங்களுக்கும் இராணுவ வெற்றிகளுக்கும் பெயர் பெற்றவர் ஆவார்.

    இருப்பினும், தமிழ் இலக்கியத்தைப் பாதுகாப்பதில் அவரது பங்களிப்பு, குறிப்பாக புனிதமான தேவாரம் பாடல்களை மீட்டது, அதிகம் அறியப்படாத, ஆனால் அவரது மகத்தான சாதனையாக உள்ளது.

    சைவ சமயத்தின் மகான்களான அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பட்ட தேவாரம் என்ற பாடல்கள் காலத்தாலும், அலட்சியத்தாலும் அழிந்து போகும் அபாயத்தில் இருந்தது.

    10ஆம் நூற்றாண்டில், ராஜராஜ சோழன் இந்த ஆன்மீக பாடல்களை மீட்டெடுக்கவும் பாதுகாக்கவும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியை மேற்கொண்டார்.

    நம்பியாண்டார் நம்பி

    நம்பியாண்டார் நம்பியின் உதவி

    அவரது ஆட்சிக் காலத்தில், தேவாரம் கையெழுத்துப் பிரதிகள் பல பழுதடைந்த நிலையில், பல்வேறு கோவில்கள் மற்றும் மடங்களில் சிதறிக் கிடந்தன.

    மேலும் சில காணாமல் போயிருந்தன. ராஜராஜ சோழன், இந்தப் பாடல்களின் கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தை உணர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள கையெழுத்துப் பிரதிகளைத் தேடினார்.

    பனை ஓலைச் சுவடிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பாடல்களைச் சேகரிக்க, சைவ அறிஞரான நம்பியாண்டார் நம்பியை நியமித்தார்.

    நம்பி சிதம்பரம் கோவிலில் பாழடைந்த நிலையில் பல பாடல்களைக் கண்டார்.

    மன்னரின் ஆதரவின் கீழ், இந்த நூல்கள் மீட்டெடுக்கப்பட்டு, வகைப்படுத்தப்பட்டு, இப்போது திருமுறையின் முதல் ஏழு பாகங்களாக அறியப்படும் சைவ நூல்களாகத் தொகுக்கப்பட்டன.

    கோவில்கள்

    கோவில்களில் தேவாரம்

    தேவாரம் கையெழுத்துப் பிரதிகளைக் காப்பாற்றும் முயற்சியின் மூலம் தமிழ்ப் பண்பாட்டைப் பாதுகாப்பதில் ராஜ ராஜ சோழனின் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

    மேலும், இந்த பாடல்கள் அழியாமல் இருப்பதை உறுதி செய்ய சிவபெருமான் கோவில்களில் தேவாரம் பாடுவதை வழக்கமாக்கி அதற்காக ஓதுவார்களையும் அதிக அளவில் நியமித்து, தேவாரம் எனும் பக்தி இலக்கியம் அழியாமல் பாதுகாத்தார்.

    தற்போதும் கோவிலில் தேவாரம் பாட தனியாக ஓதுவார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் பண்பாட்டை மீட்ட இத்தகைய சிறப்பு வாய்ந்த ராஜராஜ சோழனின் பிறந்த நாள், ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில், சதய விழாவாக கொண்டாடப்படுகிறது.

    அந்த வகையில், இந்த ஆண்டு நவம்பர் 10 அன்று தஞ்சையில் ராஜராஜ சோழனின் சதயவிழா கொண்டாடப்பட உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராஜ ராஜ சோழன்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ராஜ ராஜ சோழன்

    சமஸ்கிருதம்-தமிழ்: பழமையான மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது? இந்தியா
    ராஜ ராஜ சோழனின் 1038வது சதய விழா - தாஞ்சாவூருக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு  தஞ்சை பெரிய கோவில்
    சதய விழா 2024 ஸ்பெஷல்: இந்தியாவின் பொற்காலமாக விளங்கிய ராஜராஜ சோழன் ஆட்சி இந்தியா

    தமிழ்நாடு

    காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளா? ஸ்ட்ரிக்ட் வார்னிங் கொடுத்த பள்ளிக் கல்வித்துறை பள்ளிக்கல்வித்துறை
    திமுக ஆட்சிகள் புதிதாக 46 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளது; தமிழக அரசு அறிக்கை மு.க.ஸ்டாலின்
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை அறிக்கை

    தமிழ்நாடு செய்தி

    இனி வானிலை முன்னறிவிப்பை தெரிந்துகொள்வது ரொம்ப ஈஸி; முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு வானிலை அறிக்கை
    தென்தமிழகத்தில் வெளுக்கப்போகுது கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அலெர்ட் தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்

    இந்தியா

    தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிவு; இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி ரிசர்வ் வங்கி
    ரஷ்யாவில் இந்திய சினிமாவின் ஆதிக்கம்; அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டு சினிமா
    நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி; இன்றும் (அக்.19) தங்கம், வெள்ளி விலைகள் கடும் உயர்வு தங்கம் வெள்ளி விலை
    அதிகரிக்கும் விபத்துகள்; ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த இந்திய ரயில்வே முடிவு இந்திய ரயில்வே
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025