NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'INDIAவே இந்தியாவை விட்டு வெளியேறு': எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'INDIAவே இந்தியாவை விட்டு வெளியேறு': எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர் மோடி 
    இன்று இந்த திட்டத்திற்கு வீடியோ கால் மூலமாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

    'INDIAவே இந்தியாவை விட்டு வெளியேறு': எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 06, 2023
    02:40 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று 508 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, புதிதாக உருவாக்கப்பட்ட INDIA எதிர்க்கட்சி கூட்டணியை கடுமையாக சாடினார்.

    இன்று இந்த திட்டத்திற்கு வீடியோ கால் மூலமாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

    உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55, பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்கு வங்கத்தில் 37, மத்தியப் பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22 , குஜராத் மற்றும் தெலுங்கானாவில் தலா 21, ஜார்கண்டில் 20, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 18, ஹரியானாவில் 15, கர்நாடகாவில் 13 ஆகிய நாடு முழுவதும் உள்ள 508 ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் பணிக்கான திட்டத்திற்காக இந்த அடிக்கல் நாட்டப்பட்டது.

    டிஜேவுகில்

    அடிக்கல் நாட்டிய பிறகு பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் குறித்து பேசியதாவது:

    வெள்ளையனே வெளியேறு இயக்கம்(Quit India) ஆகஸ்ட் 9, 1942 இல் தொடங்கியது.

    இந்த இயக்கம் சுதந்திரத்தை அடைவதற்கும், புதிய இந்தியாவை உருவாக்குவதற்கும் பெரும் ஆற்றலை அளித்தது.

    நாட்டிலிருந்த அனைத்து தீமைகளையும் துடைத்து எறிய இந்த இயக்கம் உறுதி பூண்டிருந்தது.

    அந்த இயக்கத்திடம் இருந்து உத்வேகத்தை பெற்ற இந்தியாவில், தற்போது எங்கும் ஒரே குரல்தான் ஒலித்து கொண்டிருக்கிறது-ஊழலா, INDIAவே வெளியேறு. பரம்பரை அரசியலா, INDIAவே வெளியேறு.

    இந்தியாவில் நவீன நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டது. நாட்டின் ஜனநாயகத்தின் சின்னம் நாடாளுமன்றமாகும்.

    புதிய நாடாளுமன்றத்திற்கு ஆளும் தரப்பிலிருந்தும் எதிர்க்கட்சியிலிருந்தும் பிரதிநிதித்துவம் உள்ளது. ஆனால், புதிய பார்லிமென்ட் கட்டடத்துக்கு, எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதையெல்லாம் தாண்டி, ஒரு நேர்மறையான அரசியல் பாதையில் நாங்கள் முன்னேறி வருகிறோம். என்று தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எதிர்க்கட்சிகள்
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    எதிர்க்கட்சிகள்

    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம், பெங்களுருவில் கூடும் என சரத் பவார் அறிவிப்பு  பெங்களூர்
    பெங்களுரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு  பெங்களூர்
    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான மாற்று தேதி அறிவிப்பு  அரசியல் நிகழ்வு
    அடுத்த மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் சோனியா காந்தி  சோனியா காந்தி

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி பங்கேற்கும் டெல்லி பல்கலைக்கழக விழா: கருப்பு சட்டை அணிய தடை டெல்லி
    விரைவில் வருகிறது படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் - ரயில்வே அதிகாரிகள்  வந்தே பாரத்
    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்றம்
    'விவசாயிகளின் நலனுக்காக ஆண்டுக்கு ரூ.6.5 லட்சம் கோடி செலவிடுகிறோம்': பிரதமர் மோடி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025