NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கத்தார் சிறையில் அடைக்கப்பட்ட 8 இந்திய கடற்படை வீரர்களை விடுவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கத்தார் சிறையில் அடைக்கப்பட்ட 8 இந்திய கடற்படை வீரர்களை விடுவிப்பு 
    இவர்கள் 18 மாத சிறைவாசத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர் pc: ANI

    கத்தார் சிறையில் அடைக்கப்பட்ட 8 இந்திய கடற்படை வீரர்களை விடுவிப்பு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 12, 2024
    07:41 am

    செய்தி முன்னோட்டம்

    கத்தாரில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 8 இந்திய கடற்படை வீரர்கள் விடுவிக்கப்பட்டதாக மத்திய அரசு இன்று (12 பிப்ரவரி) அதிகாலை அறிவித்தது.

    இவர்கள் 18 மாத சிறைவாசத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    விடுவிக்கப்பட்டவர்களுள் 7 பேர் ஏற்கனவே இந்தியா திரும்பியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் அறிக்கைப்படி,"கத்தாரில் சிறை வைக்கப்பட்டிருந்த தஹ்ரா குளோபல் நிறுவனத்தில் பணிபுரியும் எட்டு இந்திய பிரஜைகளின் விடுதலையை இந்திய அரசு வரவேற்கிறது. அவர்களில் 8 பேரில் 7 பேர் இந்தியா திரும்பியுள்ளனர். இந்த பிரஜைகளின் விடுதலை மற்றும் சொந்த நாட்டிற்கு திரும்புதலுக்கு வழிவகுத்த கத்தார் அரசின் அமீர் செயல்படுத்திய முடிவை நாங்கள் பாராட்டுகிறோம். " என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    சிறைவாசம்

    இந்திய கடற்படையிலிருந்து மரணதண்டனை வரை!

    கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுகுணகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால், மாலுமி ராகேஷ் ஆகியோர் கத்தார் அரசுக்கு எதிராக உளவு பார்த்தமைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்கள் தஹ்ரா குளோபல் என்ற தனியார் நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

    அவர்கள் கத்தாரில், இத்தாலிய U212 ஸ்டெல்த் நீர்மூழ்கிக் கப்பல்களை, கத்தார் எமிரி கடற்படைப் படையில் பயன்படுத்த உதவினார்கள்.

    அக்டோபர் 26, 2023 அன்று கத்தார் நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது.

    இந்த தீர்ப்பால் அதிர்ச்சிஅடைந்த இந்தியா, அனைத்து சட்ட வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகவும் அப்போது கூறியது.

    கடற்படை வீரர்கள்

    நாடு திரும்பிய முன்னாள் கடற்படை வீரர்கள் 

    அதனை தொடர்ந்து இந்தியா மேற்கொண்ட இராஜதந்திர தலையீட்டின் பலனாக, கடந்த டிசம்பர் மாதம் அவர்களின் மரண தண்டனை குறைக்கப்பட்டது.

    தற்போது நாடு திரும்பியுள்ள கடற்படை வீரர்கள், தங்களை விடுவித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

    "நாங்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்பியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நிச்சயமாக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம், ஏனெனில் இது அவரது தனிப்பட்ட தலையீட்டால் மட்டுமே சாத்தியமானது" என்று அவர்களில் ஒருவர் கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    நாடு திரும்பிய முன்னாள் கடற்படை வீரர்கள் 

    #WATCH | Delhi: Qatar released the eight Indian ex-Navy veterans who were in its custody; seven of them have returned to India. pic.twitter.com/yuYVx5N8zR

    — ANI (@ANI) February 12, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கத்தார்
    சிறை
    கடற்படை
    இந்தியா

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    கத்தார்

    உளவு பார்த்ததாக 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தது கத்தார் மரண தண்டனை
    கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
    கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 கடற்படை வீரர்கள் வழக்கில் இந்தியா மேல்முறையீடு கடற்படை
    இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடைநிறுத்த பேச்சுவார்த்தை வெற்றி: 50 பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புதல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    சிறை

    புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு  செந்தில் பாலாஜி
    முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு  காவல்துறை
    பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை கடலூர்
    இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல்  தமிழ்நாடு

    கடற்படை

    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல் இலங்கை
    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் ராமேஸ்வரம்
    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் இலங்கை

    இந்தியா

    இந்தியாவில் மேலும் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    முதல் ஏர்பஸ் ஏ350-900 விமானத்தை அறிமுகப்படுத்தியது ஏர் இந்தியா ஏர் இந்தியா
    உலகின் நான்காவது பெரிய பங்குச் சந்தையாக உருவெடுத்தது இந்தியா  பங்கு சந்தை
    மிசோரம் மாநிலத்தில் மியான்மர் ராணுவ விமானம் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து விபத்து  மிசோரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025