NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆசியான் மற்றும் கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பு; இரண்டு நாள் பயணமாக லாவோஸ் கிளம்பினார் பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆசியான் மற்றும் கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பு; இரண்டு நாள் பயணமாக லாவோஸ் கிளம்பினார் பிரதமர் மோடி
    இரண்டு நாள் பயணமாக லாவோஸ் கிளம்பினார் பிரதமர் மோடி

    ஆசியான் மற்றும் கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பு; இரண்டு நாள் பயணமாக லாவோஸ் கிளம்பினார் பிரதமர் மோடி

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 10, 2024
    11:43 am

    செய்தி முன்னோட்டம்

    21வது ஆசியான்-இந்தியா மற்றும் 19வது கிழக்கு ஆசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (அக்டோபர் 10) இரண்டு நாள் பயணமாக லாவோஸ் சென்றார்.

    தனது பயணம் ஆசியான் நாடுகளுடனான ஈடுபாட்டை மேலும் ஆழப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    தனது புறப்பாடு அறிக்கையில், இந்தியா ஆக்ட் ஈஸ்ட் கொள்கையை தொடங்கி 10 ஆண்டுகள் ஆனதை நினைவுகூர்ந்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எங்கள் விரிவான மூலோபாய கூட்டாண்மையின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும், ஒத்துழைப்பின் எதிர்கால திசையை பட்டியலிடவும் ஆசியான் தலைவர்களை சந்திக்க உள்ளேன்." என்று கூறினார்.

    இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான சவால்கள் குறித்து விவாதிக்க கிழக்கு ஆசிய உச்சி மாநாடு வாய்ப்பளிக்கும் என்றும் கூறினார்.

    லாவோஸ்

    இந்தியா லாவோஸ் இடையேயான தொடர்பு குறித்து பிரதர் மோடி

    பௌத்தம் மற்றும் ராமாயணத்தின் பகிரப்பட்ட பாரம்பரியத்தால் வளமான பிணைப்பைக் கொண்டுள்ள லாவோஸ் உட்பட இப்பகுதியுடன் இந்தியா நெருங்கிய கலாச்சார மற்றும் நாகரீக உறவுகளைப் பகிர்ந்து கொள்கிறது என்று மோடி கூறினார்.

    இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த லாவோஸ் தலைமையுடனான எனது சந்திப்புகளை எதிர்பார்க்கிறேன் என்று அவர் கூறினார்.

    வியன்டியானில் நடைபெறும் உச்சி மாநாடு, இந்தியா-ஆசியான் உறவுகளின் முன்னேற்றம் மற்றும் தங்கள் உறவின் எதிர்கால திசையை பட்டியலிடுகிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    லாவோஸின் பிரதமர் சோனெக்சே சிபாண்டோனின் அழைப்பின் பேரில், மோடி அக்டோபர் 10-11 தேதிகளில் வியன்டியானுக்குச் செல்கிறார் என்று வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் ஜெய்தீப் மஜூம்தார் தெரிவித்தார்.

    அங்கு மோடி, லாவோஸின் பிரதமருடன் இருதரப்பு சந்திப்பையும் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    மோடியின் பயணம் குறித்த பிரதமர் அலுவலகத்தின் எக்ஸ் பதிவு

    PM @narendramodi emplanes for Vientiane, Laos. He will take part in the India-ASEAN Summit and East Asia Summit. pic.twitter.com/BBteNo3n7R

    — PMO India (@PMOIndia) October 10, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நரேந்திர மோடி
    பிரதமர் மோடி
    இந்தியா
    ஆசியா

    சமீபத்திய

    ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சம்பவம் பண்ணியது இப்படித்தான்; வீடியோ வெளியிட்டு பாகிஸ்தானை அலறவிட்ட பலோச் போராளிகள் பலுசிஸ்தான்
    ஹேக்கிங் அபாயம்; டெஸ்க்டாப்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு அதி உயர் எச்சரிக்கை கூகுள்
    கிரிக்கெட்டில் கோலியின் இறுதி கவுண்டவுன்: 2027 ஒருநாள் உலகக் கோப்பையுடன் முழுவதுமாக வெளியேற திட்டமா? விராட் கோலி
    கொரோனா பாதிப்புகளில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? கொரோனா

    நரேந்திர மோடி

    'பிரதமர் மோடி ஓபிசி வகுப்பினை சேர்ந்தவர் இல்லை' என சாடும் ராகுல்; மறுக்கும் பாஜக ராகுல் காந்தி
    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தினார் பிரதமர் மோடி துபாய்
    இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு பயணப்படவுள்ள விண்வெளி வீரர்கள் யார்? அவர்களை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை ககன்யான்
    பிரதமர் குறித்து தமிழக அமைச்சர் கீழ்த்தரமாக பேசியதாக பாஜக குற்றச்சாட்டு  பாஜக

    பிரதமர் மோடி

    ஃபின்டெக் துறையில் 500 சதவீத வளர்ச்சி கண்ட ஸ்டார்ட்அப்; பிரதமர் மோடி பேச்சு தொழில்நுட்பம்
    'தலையை குனிந்து மன்னிப்பு கேட்கிறேன்': சிவாஜி சிலை உடைந்தற்கு மோடியின் ரியாக்ஷன்  நரேந்திர மோடி
    3 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் புருனே செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர்
    தமிழகத்திற்கு 2 புதிய வந்தே பாரத்; 3 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி வந்தே பாரத்

    இந்தியா

    அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கையை நிராகரித்தது இந்தியா; வெளியுறவு அமைச்சகம் பதிலடி அமெரிக்கா
    ரூ.1.01 லட்சம் கோடி மதிப்பில் விவசாய வளர்ச்சிக்கு இரண்டு புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல் மத்திய அரசு
    அக்டோபர் 7ஆம் தேதி மாலத்தீவு அதிபர் இந்தியா வர உள்ளதாக தகவல் மாலத்தீவு
    வெளியுறவு அமைச்சராக பாகிஸ்தானுக்கு முதல் பயணம்; எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்

    ஆசியா

    வளரும் நாடுகளில் விற்கப்படும் குழந்தைகளின் உணவுப்பொருட்களில் சர்க்கரையை கலக்கும் நெஸ்லே நெஸ்லே
    தென்கிழக்காசியாவில் யாகி சூறாவளியால் கடும் சேதம்; 500க்கும் மேற்பட்டோர் பலியான பரிதாபம் சூறாவளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025