NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரதமர் கிசான் திட்டம்: 9.26+ கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை வழங்கினார் பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமர் கிசான் திட்டம்: 9.26+ கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை வழங்கினார் பிரதமர் மோடி 

    பிரதமர் கிசான் திட்டம்: 9.26+ கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை வழங்கினார் பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 18, 2024
    06:23 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ் சுமார் 9.26 கோடி விவசாயிகளுக்கு 17வது தவணையான 20,000 கோடி ரூபாயை இன்று பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

    மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, தனது தொகுதியான வாரணாசிக்கு இன்று முதல்முறையாக சென்ற பிரதமர் மோடி, அங்கு வைத்து பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் 17வது தவணையை விவசாயிகளுக்கு வழங்கினார்.

    இன்று மாலை 4:00 மணியளவில் வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடி, மாலை 5:00 மணிக்குப் பிறகு PM-KISAN மாநாட்டில் கலந்து கொண்டார்.

    அங்கு அவருக்கு மூன்று விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர் .

    இந்தியா 

    'என்னை 3வது முறையாக தேர்வு செய்த காசிக்கு நன்றி': பிரதமர் மோடி 

    பிரதமர் மோடி தனது உரையை தொடங்கி வைத்து பேசுகையில், "தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு வாரணாசிக்கு வந்துள்ளேன். காஷியேட்ஸ், பாபா காசி விஸ்வநாத் மற்றும் மா கங்கா ஆகியோரை வணங்குகிறேன்" என்று கூறியுள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்தியாவின் தேர்தல் செயல்முறையை பாராட்டிய பிரதமர் மோடி, "இந்தத் தேர்தல் உலகத்தின் முன் இந்தியாவின் பலத்தை காட்டுகிறது" என்று கூறினார்.

    "ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வாக்காளர்களை விட இந்திய வாக்காளர்கள் இரண்டரை மடங்கு அதிகம். ஜனநாயகத்தின் இந்த திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி, மூன்றாவது முறையாக பிரதமரை தேர்ந்தெடுத்த காசி மக்களுக்கு எனது நன்றி" என்றும் அவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரதமர் மோடி
    வாரணாசி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    PMAY திட்டத்தின் கீழ் 3 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்டி தர மத்திய அரசு முடிவு  பிரதமர் மோடி
    புதிய அமைச்சரவையின் இலாக்காகள் அறிவிப்பு: எந்தெந்த துறைகளுக்கு யார் அமைச்சர்?  மத்திய அரசு
    சீனா மற்றும் பாகிஸ்தானுடனான உறவுகளை இந்தியா எப்படி முன்னெடுத்து செல்ல போகிறது: பதிலளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியுறவுத்துறை
    'தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுவிட்டது': நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்தது உச்ச நீதிமன்றம்  நீட் தேர்வு

    பிரதமர் மோடி

    தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக தமிழகம் வரும் பிரதமர்; விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் பிரதமர்
    'கௌரவத்தை குறைக்கும் முதல் பிரதமர்...': மோடியை கடுமையாக சாடிய மன்மோகன் சிங் மன்மோகன் சிங்
    விவேகானந்தர் நினைவிடத்தில்  45 மணி நேர தியானத்தை தொடங்கினார் பிரதமர் மோடி கன்னியாகுமரி
    இறுதிக்கட்ட பொது தேர்தல்: பிரதமர் மோடியின் தொகுதி உட்பட 57 இடங்களில் இன்று வாக்குப்பதிவு  இந்தியா

    வாரணாசி

    ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை: வரும் 28ம் தேதி சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு  தொல்லியல் துறை
    ஞானவாபி மசூதி தொடர்பான அறிக்கையை தொல்லியல் துறை சமர்ப்பித்தது தொல்லியல் துறை
    ஸ்வர்வேத் மகாமந்திர்: உலகின் மிகப்பெரிய தியான மையம் பற்றிய சில தகவல்கள்  தியானம்
    ஞானவாபி மசூதி அடித்தளத்தில் வழிபாடு நடத்த ஹிந்துக்களுக்கு அனுமதி: வாரணாசி நீதிமன்றம்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025