NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / BRICS மாநாட்டில் சீன அதிபர்- பிரதமர் மோடி சந்திப்பு: எல்லையிலிருந்து ராணுவத்தினரை துரிதமாக விலக்க முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    BRICS மாநாட்டில் சீன அதிபர்- பிரதமர் மோடி சந்திப்பு: எல்லையிலிருந்து ராணுவத்தினரை துரிதமாக விலக்க முடிவு
    எல்லை பிரச்சினைகள் குறித்து சீன அதிபருடன் உரையாடிய பிரதமர் மோடி

    BRICS மாநாட்டில் சீன அதிபர்- பிரதமர் மோடி சந்திப்பு: எல்லையிலிருந்து ராணுவத்தினரை துரிதமாக விலக்க முடிவு

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 25, 2023
    10:26 am

    செய்தி முன்னோட்டம்

    தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் மோடி, இந்திய-சீன எல்லையில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து சீன அதிபர், ஷி ஜின்பிங்குடன் உரையாடியிருக்கிறார்.

    2020ம் ஆண்டு, வடக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியில், இந்திய மற்றும் சீன வீரர்களிடையே நடைபெற்ற சிறு மோதலைத் தொடர்ந்து, LAC (Line of Actual Control) பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது.

    இந்த எல்லைப் பகுதியில், சீனா ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களைக் குவித்த நிலையில், இந்திய எல்லைப் பகுதியில் சீன வீரர்களின் அத்துமீறலைத் தடுக்க, இந்தியாவும் ஆயிரக்கணக்கான வீரர்களை இப்பகுதியில் குவித்திருக்கிறது.

    பிரிக்ஸ் மாநாட்டின் போது சந்தித்துக் கொண்ட இருநாட்டுத் தலைவர்களும் இந்த பதற்றமான சூழ்நிலையை குறித்து உரையாடிக் கொண்டதாகத் தெரிகிறது.

    இந்தியா

    சீன அதிபரிடம் அமைதியை வலியுறுத்திய மோடி: 

    சீன அதிரபருடனான உரையாடலின் போது, LAC மற்றும் பிற இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் இருநாடுகளுக்கிடைய உள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதனை மோடி வலியுறுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் க்வாத்ரா.

    LAC-யினை மதித்து நடப்பதும், எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதும் இரு நாடுகளுக்குமிடையேயான உறவை சுமூகமாக்க மிகவும் அவசியம் என்பதையும் மோடி வலியுறுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், LAC-யின் மேற்குப் பகுதியில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து இந்தியா மற்றும் ராணுவ உயர்அதிகாரிகளுக்கிடையே நடைபெற்ற 19வது சுற்று சந்திப்பில், பிரச்சினைகளைக் களைவதற்கான நேர்மறையான முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதாவும் தெரிவித்துள்ளார் வினய் க்வாத்ரா.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    இந்தியா-சீனா மோதல்
    இந்தியா
    சீனா

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்

    பிரதமர் மோடி

    உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா: பிரதமர் மோடி பிரதமர்
    மணிப்பூர் விவகாரம் - கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்  மணிப்பூர்
    பாஜக மீண்டும் 2024ல் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடே இருக்காது - மு.க.ஸ்டாலின் பேச்சு  மு.க ஸ்டாலின்
    தெலுங்கானா கனமழை எதிரொலி - உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை  மழை

    இந்தியா-சீனா மோதல்

    சீன பொருட்களுக்கு 'நோ' சொல்லும் இந்தியர்கள்; ஏன் தெரியுமா? இந்தியா
    சீன ஊடுருவலைத் தடுக்க 4 முக்கிய அமைப்புகள்! இந்தியா
    இமயமலை தங்கத்தைத் திருட இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனர்கள்! சீனா
    "இந்தியாவுடன் சமாதானம் பேச தயார்": வெள்ளைக்கொடி காட்டும் சீனா! இந்தியா

    இந்தியா

    நீட் தேர்வு - அதிகமாக விண்ணப்பித்த மாநிலங்கள் வரிசையில் 3ம் இடத்தினை பிடித்த தமிழ்நாடு  தமிழ்நாடு
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 21 தங்கம் வெள்ளி விலை
    மத்திய உள்துறை அமைச்சக ஊழியா்கள் மீது அதிக ஊழல் புகாா்: சிவிசி தகவல் மத்திய அரசு
    இலங்கையிடமிருந்து கச்சத்தீவிவினை மீட்பதற்கான காரணங்கள் - மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரி  இலங்கை

    சீனா

    இந்திய நிறுவனமாகும் எம்ஜி மோட்டார் இந்தியா கார் தயாரிப்பு நிறுவனம் எம்ஜி மோட்டார்
    இந்தியாவை விட்டு வெளியேறும் 6,500 கோடீஸ்வரர்கள்: காரணம் என்ன  இந்தியா
    சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் அமெரிக்காவின் ஆண்டனி பிளிங்கன் அமெரிக்கா
    சீன அதிபரை சந்தித்தார் அமெரிக்க வெளியுறவு செயலர் பிளிங்கன் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025