NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரதமரின் விமர்சனத்திற்கு பிறகு, தனது 'சக்தி' கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார் ராகுல் காந்தி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமரின் விமர்சனத்திற்கு பிறகு, தனது 'சக்தி' கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார் ராகுல் காந்தி 

    பிரதமரின் விமர்சனத்திற்கு பிறகு, தனது 'சக்தி' கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார் ராகுல் காந்தி 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 18, 2024
    07:21 pm

    செய்தி முன்னோட்டம்

    'சக்தி' கருத்துக்காக தன்னை விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பதிலடி கொடுத்துள்ளார்.

    தனது கருத்துகளின் அர்த்தத்தை பிரதமர் திரித்து பேசுவதாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, "நான் உண்மையை பேசுகிறேன்" என்பது பிரதமருக்கே தெரியும் என்றும் கூறினார்.

    மும்பையில் நேற்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்(EVM) தான் இந்த நாட்டின் சக்தி என்றும், அவை இல்லாமல் பிரதமர் மோடியால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றும் கூறினார்.

    "ஒரு சக்திக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். அது என்ன சக்தி தெரியுமா? ராஜாவின்(பிரதமர் மோடி) ஆன்மாவே EVM என்ற சக்தியில் தான் உள்ளது." என்று பிரதமரை நேற்று ராகுல் காந்தி விமர்சித்தார்.

    இந்தியா 

    பிரதமர் தனது வார்த்தைகளை திரித்து பேசுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு 

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்(EVM) மட்டுமல்லாமல், அமலாக்கத்துறை, CBI, மற்றும் வருமான வரித் துறை உள்ளிட்ட நாட்டின் ஒவ்வொரு நிறுவனமும் பிரதமரின் கைக்குள் இருப்பதாக நேற்று ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்திருந்தார்.

    மேலும், அந்த சக்திக்கு எதிராக தான் போராடுவதாகவும் அவர் கூறினார்.

    இந்நிலையில், ராகுல் காந்தி இந்து மதத்தின் 'சக்தி'யை எதிர்த்து பேசுவதாக இன்று குற்றம் சாட்டிய பாஜக தலைவர்கள். ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    இதற்கிடையில், இன்று பிற்பகல் ராகுல் மற்றும் எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கி பேசிய மோடி, 2024 பொது தேர்தல், 'சக்தியை' அழிக்க நினைப்பவர்களுக்கும் சக்தியை வழிபடுபவர்களுக்கும் இடையே நடக்கும் சண்டை என்று கூறினார்.

    இந்நிலையில், பிரதமர் தனது வார்த்தைகளை திரித்து பேசுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    ராகுல் காந்தி
    பாஜக
    காங்கிரஸ்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    பிரதமர் மோடி

    பாரத் மார்ட்: UAE -இல் இந்தியா திறக்கவுள்ள வேர்ஹவுஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    "உலகிற்கு தூய்மையான, வெளிப்படையான, தொழில்நுட்பம் சார்ந்த அரசுகள் தேவை": பிரதமர் மோடி இந்தியா
    அபுதாபியின் முதல் இந்து கோவிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி அபுதாபி
    "அடுத்த 100 நாட்களுக்கு நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும்": பிரதமர் மோடி  இந்தியா

    ராகுல் காந்தி

    ஜி20 மாநாடு - ஜனாதிபதி தலைமையிலான விருந்து குறித்த விவரங்கள்  இந்தியா
     ஜி20 மாநாடு - டெல்லி குடிசை பகுதிகளை திரையிட்டு மறைத்ததற்கு ராகுல் காந்தி கண்டனம்  இந்தியா
    ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக மாறிய ராகுல் காந்தி டெல்லி
    டெல்லியில் தச்சர்களை சந்தித்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா

    பாஜக

    பாஜகவில் சேர சொல்லி அக்கட்சி தன்னை கட்டாயப்படுத்துவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு  டெல்லி
    ஜார்க்கண்ட் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் சம்பை சோரன்  ஜார்கண்ட்
    பாஜகவில் இணைந்த தமிழக மாஜி அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பாஜக அண்ணாமலை
    பொதுத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று உரையாற்றினார் பிரதமர் மோடி பிரதமர் மோடி

    காங்கிரஸ்

    சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  உதயநிதி ஸ்டாலின்
    தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் தயார், விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு தேர்தல்
    'ஆர்எஸ்எஸ்- பாஜக நிகழ்ச்சி': அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணித்தது காங்கிரஸ் உத்தரப்பிரதேசம்
    "எனக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழக காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை": கார்த்தி சிதம்பரம் கார்த்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025