
உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம்
செய்தி முன்னோட்டம்
உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறுவது சிறிய நகரங்களின் வளர்ச்சியைப் பொறுத்தது என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று (மே 27) வலியுறுத்தினார்.
இந்த சிறிய நகர்ப்புறங்களை மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளன என்றும் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான இயந்திரங்கள் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
வெளிநாட்டுப் பொருட்களைச் சார்ந்து இல்லாமல், 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை முழுமையாக வளர்ந்த நாடாக மாற்றுவது என்ற கூட்டு தேசிய இலக்கையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
குஜராத்தில் காந்திநகரில் திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, உள்நாட்டுப் பொருட்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விட உள்ளூர்ப் பொருட்களை ஆதரிக்குமாறு குடிமக்களை வலியுறுத்தினார்.
அந்நிய பொருட்கள்
சுயசார்பை அடைய அந்நிய பொருட்களை தவிர்க்க வேண்டும்
உண்மையான சுயசார்பை அடைய மக்கள் அனைவரும் தங்கள் அன்றாடத் தேர்வுகளை உள்நாட்டு பொருட்கள் மூலம் தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அரசியல் எதிர்ப்பை மறைமுகமாகக் குறிவைத்து, சில குழுக்கள் உண்மை குறைபாடுகள் காரணமாக அல்ல, சித்தாந்த வேறுபாடுகள் காரணமாக இந்தியாவின் முன்னேற்றத்தை சிறுமைப்படுத்துகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார்.
அரசியல் ஆதாயத்திற்காக இந்த அமைப்புகள் இந்தியாவின் உலகளாவிய பிம்பத்தை சேதப்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.
சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக, குஜராத்தின் கட்ச் மற்றும் அவரது சொந்த ஊரான வத்நகரின் மாற்றத்தை, கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியம் எவ்வாறு பொருளாதார மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதற்கான மாதிரிகளாக மோடி மேற்கோள் காட்டினார்.
ஆபரேஷன் சிந்தூர்
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேச்சு
சுயசார்பு இந்தியாவை ஆபரேஷன் சிந்தூர் உடன் ஒப்பிட்டு, அது ஆயுதப்படைகள் மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்கள் அனைவரின் பகிரப்பட்ட பொறுப்பு என்றும் கூறினார்.
பிரதமர் மோடி, 1947 ஆம் ஆண்டு காஷ்மீருக்குள் நுழைந்த முஜாஹிதீன்களை நாம் முழுமையாக வீழ்த்தி இருந்தால், இப்போது இதுபோன்ற சூழ்நிலையை சந்தித்திருக்க மாட்டோம் என்றார்.
மேலும், 1947 இல் பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமிக்க முயற்சித்தபோது, சர்தார் படேல் கூறியபடி, ராணுவத்தை நிறுத்தாமல் விட்டிருந்தால், முழு காஷ்மீரும் மீட்கப்பட்டிருக்கும் என்றும், 75 வருட கால பிரச்சினையே இருந்திருக்காது என்றும் கூறினார்.
அப்போதிலிருந்து, இப்போது வரை ஒவ்வொரு முறையும், இந்திய ராணுவம் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது என்றும், பாகிஸ்தான் தன்னால் இந்தியாவை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.