NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம்
    உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற என்ன செய்ய வேண்டும் எனக் கூறிய பிரதமர் மோடி

    உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 27, 2025
    02:01 pm

    செய்தி முன்னோட்டம்

    உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறுவது சிறிய நகரங்களின் வளர்ச்சியைப் பொறுத்தது என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று (மே 27) வலியுறுத்தினார்.

    இந்த சிறிய நகர்ப்புறங்களை மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளன என்றும் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான இயந்திரங்கள் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

    வெளிநாட்டுப் பொருட்களைச் சார்ந்து இல்லாமல், 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை முழுமையாக வளர்ந்த நாடாக மாற்றுவது என்ற கூட்டு தேசிய இலக்கையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

    குஜராத்தில் காந்திநகரில் திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, ​​உள்நாட்டுப் பொருட்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

    இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விட உள்ளூர்ப் பொருட்களை ஆதரிக்குமாறு குடிமக்களை வலியுறுத்தினார்.

    அந்நிய பொருட்கள்

    சுயசார்பை அடைய அந்நிய பொருட்களை தவிர்க்க வேண்டும்

    உண்மையான சுயசார்பை அடைய மக்கள் அனைவரும் தங்கள் அன்றாடத் தேர்வுகளை உள்நாட்டு பொருட்கள் மூலம் தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    அரசியல் எதிர்ப்பை மறைமுகமாகக் குறிவைத்து, சில குழுக்கள் உண்மை குறைபாடுகள் காரணமாக அல்ல, சித்தாந்த வேறுபாடுகள் காரணமாக இந்தியாவின் முன்னேற்றத்தை சிறுமைப்படுத்துகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார்.

    அரசியல் ஆதாயத்திற்காக இந்த அமைப்புகள் இந்தியாவின் உலகளாவிய பிம்பத்தை சேதப்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.

    சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக, குஜராத்தின் கட்ச் மற்றும் அவரது சொந்த ஊரான வத்நகரின் மாற்றத்தை, கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியம் எவ்வாறு பொருளாதார மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதற்கான மாதிரிகளாக மோடி மேற்கோள் காட்டினார்.

    ஆபரேஷன் சிந்தூர்

    ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேச்சு

    சுயசார்பு இந்தியாவை ஆபரேஷன் சிந்தூர் உடன் ஒப்பிட்டு, அது ஆயுதப்படைகள் மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்கள் அனைவரின் பகிரப்பட்ட பொறுப்பு என்றும் கூறினார்.

    பிரதமர் மோடி, 1947 ஆம் ஆண்டு காஷ்மீருக்குள் நுழைந்த முஜாஹிதீன்களை நாம் முழுமையாக வீழ்த்தி இருந்தால், இப்போது இதுபோன்ற சூழ்நிலையை சந்தித்திருக்க மாட்டோம் என்றார்.

    மேலும், 1947 இல் பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமிக்க முயற்சித்தபோது, சர்தார் படேல் கூறியபடி, ராணுவத்தை நிறுத்தாமல் விட்டிருந்தால், முழு காஷ்மீரும் மீட்கப்பட்டிருக்கும் என்றும், 75 வருட கால பிரச்சினையே இருந்திருக்காது என்றும் கூறினார்.

    அப்போதிலிருந்து, இப்போது வரை ஒவ்வொரு முறையும், இந்திய ராணுவம் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது என்றும், பாகிஸ்தான் தன்னால் இந்தியாவை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    இந்தியா
    பொருளாதாரம்
    குஜராத்

    சமீபத்திய

    உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் பிரதமர் மோடி
    இந்தியாவில் செயற்கைகோள் இன்டர்நெட் எப்போது பயன்பாட்டிற்கு வரும்? மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தகவல் இன்டர்நெட்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    சரிவுக்கு பிறகு மீண்டும் உயர்ந்த தங்க விலை; இன்றைய விலை நிலவரம் (மே 27) என்ன? தங்கம் வெள்ளி விலை

    பிரதமர் மோடி

    நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நிறுவனருக்கு பிரதமர் மோடி அஞ்சலி; தீக்சபூமியில் அம்பேத்கருக்கும் அஞ்சலி செலுத்தினார் நரேந்திர மோடி
    மன் கி பாத் நிகழ்ச்சியில் யோகா, நீர் பாதுகாப்பு. கழிவு மேலாண்மையை வலியுறுத்திய பிரதமர் மோடி இந்தியா
    ஏப்ரல் 19ஆம் தேதி காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் ஜம்மு காஷ்மீர்
    'பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் தனது ஓய்வு பற்றி அறிவித்தார்': சிவசேனா சஞ்சய் ராவத் தகவல் ஆர்எஸ்எஸ்

    இந்தியா

    இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராஜதந்திர MPக்கள் குழுவில் யார் எங்கு செல்கிறார்கள்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்! ஜம்மு காஷ்மீர்
    2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை லஷ்கர்-இ-தொய்பா
    இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 55% உயர்ந்து, பெட்ரோலியம், வைர விற்பனையை முந்தியது ஸ்மார்ட்போன்
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்

    பொருளாதாரம்

    உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி வரவுள்ளதா? பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை எழுத்தாளர் எச்சரிக்கை உலகம்
    ரூபாய் மதிப்பிழப்பு முதல் ஜிடிபி வளர்ச்சி வரை; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் மன்மோகன் சிங்
    மிடில் கிளாஸ் மக்களுக்கு நிம்மதி? 2025 பட்ஜெட்டில் வருமான வரியைக் குறைக்க மத்திய அரசு திட்டம் எனத் தகவல் பட்ஜெட்
    பொருளாதார பின்னடைவு இருந்தாலும் இந்தியாவின் வளர்ச்சி தொடரும்; டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன் நம்பிக்கை டாடா

    குஜராத்

    வெளிநாட்டை சேர்ந்த இஸ்லாமிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரம்: 2 பேர் கைது  அகமதாபாத்
    ஐபிஎல் 2024: சரத், கோட்டியன், குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளின் மாற்று வீரர்களாக இணைகிறார்கள் ஐபிஎல்
    சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்கள் குஜராத்தில் கைது சல்மான் கான்
    தேர்தலுக்கு முன்னரே சூரத்தில் வெற்றி பெற்ற பாஜக; எப்படி? பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025