NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளாவிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிறார் பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளாவிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிறார் பிரதமர் மோடி 
    கேரளாவிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிறார் பிரதமர் மோடி

    கேரளாவிற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிறார் பிரதமர் மோடி 

    எழுதியவர் Nivetha P
    Apr 21, 2023
    06:00 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய பிரதமர் மோடி வரும் 24ம் தேதி கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரத்திற்கு வருகை தரவுள்ளார்.

    வருகை தரும் மோடிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மிகப்பெரிய வரவேற்பினை அளிக்க பாஜக முடிவு செய்துள்ளது.

    2 நாள் சுற்றுப்பயணமாக வரும் இவர் திருவனந்தபுரத்தில் வந்தே பாரத் ரயில் சேவையினை துவக்கி வைக்கவுள்ளார்.

    அது தவிர வேறு சில நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

    இதற்காக அவர் 24ம் தேதி மத்திய பிரதேஷ் மாநிலத்திலிருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு செல்கிறார்.

    அன்று மாலை 5 மணிக்கு கொச்சி கப்பல் தளத்தில் நடைபெறும் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

    இதனையடுத்து 6 மணிக்கு தேவார கல்லூரி மயானத்தில் நடைபெறும் பிஜேபி கட்சியின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசுகிறார்.

    கேரளா

    உள்ளதாஜ்மலபார் என்னும் நட்சத்திர ஓட்டலில் தங்கவுள்ளார் மோடி 

    தொடர்ந்து அன்று இரவு உள்ளதாஜ்மலபார் என்னும் நட்சத்திர ஓட்டலில் தங்கவுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    அதன் பின்னர் 25ம் தேதி காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சென்று வந்தே பாரத் ரயிலினை தொடங்கி வைக்கிறார்.

    இதனையடுத்து திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    அன்று மாலை 4 மணியளவில் பிஜேபி கட்சி தலைவர்களை சந்தித்து உரையாடவுள்ளார்.

    அதன்பின்னர் இரவு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு விமானத்தில் டெல்லிக்கு செல்கிறார்.

    இந்நிலையில் இவர் துவக்கி வைக்கவுள்ள இந்த வந்தே பாரத் ரயிலானது திருவனந்தபுரத்திலிருந்து கண்ணூர் வரை ஓடும் என்று கூறப்பட்டிருந்தது.

    ஆனால் தற்போது இந்த ரயில் சேவையானது காசர்கோடு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    கேரளா

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை
    13 வருட கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெறும் கிளென் மேக்ஸ்வெல்: ODIகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    'ஒன்றரை வருட பிளானிங்': 40 ரஷ்ய ஜெட் விமானங்களை துவம்சம் ஆகிய உக்ரைனின் ட்ரோன்கள்  உக்ரைன்
    30 ஆண்டுகள் சிறை; சென்னை நீதிமன்றம் ஞானசேகரனுக்கு வழங்கிய தண்டனையின் முழு விபரம் பாலியல் வன்கொடுமை

    பிரதமர் மோடி

    சில எம்.பி.க்கள் இந்த சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி இந்தியா
    உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் இந்தியா
    பிபிசியை தடை செய்ய கோரிய மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம் இந்தியா
    இந்தியாவின் மிக நீண்ட விரைவுச்சாலையை திறந்து வைக்கும் பிரதமர்! சிறப்பு அம்சங்கள் என்ன? விரைவு சாலை

    கேரளா

    கேரள திருநர் தம்பதி ஜியா-ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது திருநர் சமூகம்
    மாசி மாத பூஜை - பிப்., 12ம் தேதி சபரிமலை கோயில் நடை திறப்பு இந்தியா
    முதன்முதலாக கேரளா கோயிலில் சேவை செய்யப்போகும் ரோபோ யானை இந்தியா
    கேரளாவில் ஆற்றுப்பாலத்தில் காதல் பூட்டு போட்டு சாவியை ஆற்றில் வீசிச்செல்லும் காதலர்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025