NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமெரிக்க அதிபர் டிரம்பை பிப்ரவரி 13ஆம் தேதி சந்திக்க உள்ளார் பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்க அதிபர் டிரம்பை பிப்ரவரி 13ஆம் தேதி சந்திக்க உள்ளார் பிரதமர் மோடி
    இருவரும், வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி வாஷிங்டனில் சந்திப்பார்கள்

    அமெரிக்க அதிபர் டிரம்பை பிப்ரவரி 13ஆம் தேதி சந்திக்க உள்ளார் பிரதமர் மோடி

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 04, 2025
    09:51 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி வாஷிங்டனில் சந்திப்பார்கள் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

    பிரதமரின் வருகைக்காக அமெரிக்காவுடன் முன்கூட்டிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியுறவு அமைச்சகம் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிறகு, பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்பு விஜயம் இதுவாகும்.

    கூடுதலாக, டிரம்ப் பதவியேற்ற சில வாரங்களுக்குள் இருதரப்பு விஜயமாக வாஷிங்டன் டிசிக்குச் செல்லும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வெளிநாட்டுத் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர்.

    திட்டத்தின்படி, பிரதமர் தனது இரண்டு நாள் பாரிஸ் பயணத்தை முடித்துக்கொண்டு வாஷிங்டன், டிசிக்கு பயணம் மேற்கொள்வார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கூட்டாண்மை

    இந்தியா- அமெரிக்கா உறவு

    டிரம்பின் பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, ஜனவரி 27 அன்று பிரதமர் மோடி அவருடன் பேசினார்.

    வர்த்தகம், எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் இந்தியா-அமெரிக்க ஒத்துழைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி, "நம்பகமான" கூட்டாண்மையை நோக்கிச் செயல்பட இரு தலைவர்களும் உறுதியளித்தனர்.

    பிப்ரவரி 12-14 வரை பிரதமரின் வருகைக்காக இந்தியாவும் அமெரிக்காவும் எதிர்பார்த்து கொண்டிருப்பதாக செய்தி நிறுவனம் பிடிஐ முன்பு செய்தி வெளியிட்டது.

    அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் டிரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து டிரம்பிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தை எடுத்துச் சென்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    அமெரிக்கா
    டொனால்ட் டிரம்ப்
    இந்தியா

    சமீபத்திய

    இந்தியாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்தது உண்மைதான்; தி நியூயார்க் டைம்ஸைத் தொடர்ந்து வாஷிங்டன் போஸ்டும் ஒப்புதல் ஆபரேஷன் சிந்தூர்
    காவலில் இருந்த இந்திய ராணுவ வீரரை மனரீதியாக கொடுமைப்படுத்திய பாகிஸ்தான் பாகிஸ்தான் ராணுவம்
    கேன்ஸில் டாம் குரூஸின் 'மிஷன்: இம்பாசிபிள்' படத்திற்கு குவிந்த பாராட்டு ஹாலிவுட்
    இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் திடீர் ஒத்திவைப்பு; என்ன காரணம்? சுபன்ஷு சுக்லா

    பிரதமர் மோடி

    "சுயநலம்..மனிதாபிமானமற்ற செயல்":ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்தாத டெல்லி, வங்காளத்தை கடுமையாக சாடிய பிரதமர் காப்பீட்டுத் திட்டங்கள்
    விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே சிவில் சட்டம்: ஒற்றுமை தினத்தில் அறிவித்த பிரதமர் மோடி  ஒரே நாடு ஒரே தேர்தல்
    'தேசத்தின் ஒரு அங்குல நிலத்தில் கூட சமரசம் கிடையாது': பிரதமர் மோடி திட்டவட்டம் இந்தியா
    'நம் மக்களுக்காக உழைப்போம்': டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மோடி வாழ்த்து! நரேந்திர மோடி

    அமெரிக்கா

    87 குழந்தைகளுக்கு தந்தையான அமெரிக்க இளைஞர்; விந்தணுக்கள் தானம் மூலம் சாதனை உலகம்
    விவாகரத்தை நோக்கி செல்லும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா? பராக் ஒபாமா
    ஜனவரி 20 அன்று டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவில் என்ன எதிர்பார்க்கலாம் டொனால்ட் டிரம்ப்
    இந்திய-அமெரிக்க பாதுகாப்பு திட்டத்திற்காக ஏழு இந்திய விண்வெளி ஸ்டார்ட் அப்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன ஸ்டார்ட்அப்

    டொனால்ட் டிரம்ப்

    ஜிம்மி கார்ட்டர் மறைவையடுத்து, தற்போது வயதில் மூத்த முன்னாள் அமெரிக்க அதிபராக இருப்பது இவர்தான்! அமெரிக்கா
    அமெரிக்காவில் டிரம்ப் ஹோட்டல் முன் வெடித்து சிதறிய டெஸ்லாவின் சைபர் டிரக்; தீவிரவாத தாக்குதலா? தீவிரவாதம்
    டொனால்ட் டிரம்ப் மீதான கிரிமினல் வழக்கில் ஜனவரி 10 அன்று தண்டனை விபரங்கள் வெளியிடுவதாக நீதிமன்றம் அறிவிப்பு அமெரிக்கா
    'இணைப்போமா??' ட்ரூடோவின் ராஜினாமாவுக்குப் பிறகு அமெரிக்கா-கனடா இணைப்பை முன்மொழிந்த டிரம்ப்  கனடா

    இந்தியா

    நவீன இந்தியாவின் இருதய அறுவை சிகிச்சையின் முன்னோடி டாக்டர் கே.எம்.செரியன் காலமானார் மருத்துவம்
    குய்லின்-பாரே சிண்ட்ரோம் தொற்றுக்கு மகாராஷ்டிராவில் முதல் மரணம்; புனேவில் அதிகரிக்கும் பாதிப்புகள் மகாராஷ்டிரா
    புல்வாமாவில் உள்ள டிரயல் சவுக்கில் முதன்முறையாக குடியரசு தினத்தில் இந்தியக் கொடியேற்றம் குடியரசு தினம்
    உலக நாடுகளை விட 44% அதிக சைபர் கிரைம்களை எதிர்கொள்ளும் இந்தியா சைபர் கிரைம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025