NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி வீரவணக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி வீரவணக்கம் 

    கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி வீரவணக்கம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 26, 2024
    10:22 am

    செய்தி முன்னோட்டம்

    லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கார்கில் போரின் போது வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    போர் விதவைகளுடன் பேசவும், ஷின்குன் லா சுரங்க திட்டத்தின் முதல் குண்டுவெடிப்பை நடைமுறைப்படுத்தவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

    இது குறித்து ட்விட்டரில் பேசியுள்ள பிரதமர் மோடி, ஜூலை 26ஆம் தேதி அனுசரிக்கப்படும் கார்கில் விஜய் திவாஸ், ஒவ்வொரு இந்தியருக்கும் மிகவும் சிறப்பான நாளாகும் என்று கூறினார்.

    "நமது தேசத்தை பாதுகாக்கும் அனைவருக்கும் மரியாதை செலுத்தும் நாள் இது. ஷின்குன் லா சுரங்க திட்டத்திற்கான பணிகளும் இன்று தொடங்கப்படும்." என்று பிரதமர் மோடி கூறினார்.

    இந்தியா 

    ஷிங்குன் லா சுரங்க திட்டத்தின் முக்கியத்துவம் 

    குறிப்பாக மோசமான வானிலையின் போது லே உடனான இணைப்பை மேம்படுத்த இந்த திட்டம் தொடங்கப்படுகிறது.

    ஷிங்குன் லா சுரங்க திட்டம் 4.1 கிமீ நீளமுள்ள இரட்டை குழாய் சுரங்கப்பாதையைக் கொண்டுள்ளது.

    இது நிமு-படும்-தர்ச்சா சாலையில் சுமார் 15,800 அடி உயரத்தில் கட்டப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ஷிங்குன் லா சுரங்கம் கட்டி முடிக்கப்பட்டால், இது உலகின் மிக உயரமான சுரங்கப்பாதையாக இருக்கும்.

    ஷிங்குன் லா சுரங்கப்பாதை ஆயுதப் படைகள் மற்றும் உபகரணங்களின் விரைவான மற்றும் திறமையான இயக்கத்தை உறுதி செய்வது மட்டுமல்லாமல், லடாக்கில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    லடாக்
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    லடாக்

    கல்வான் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்ட வீரரின் மனைவி லெப்டினன்டாக இராணுவத்தில் நுழைய உள்ளார் இந்தியா
    லடாக் பிரச்னையை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா-சீனா ஒப்புக்கொண்டது: பெய்ஜிங்  இந்தியா
    லடாக் கனமழை எதிரொலி - 450 ஆண்டுகால கட்டிடம் இடிந்து விழுந்தது  டெல்லி
    சீன கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அருகே அமைக்கப்படவிருக்கும் புதிய சாலையில் என்ன சிறப்பு? இந்தியா

    பிரதமர் மோடி

    முக்கிய விஷயங்களில் இணைந்து பணியாற்றுவோம்: பிரதமர் மோடியை சந்தித்த பிறகு ட்ரூடோ பேச்சு இந்தியா
    "விபத்து வருத்தமளிக்கிறது; மீட்பு பணிகள் நடந்து வருகின்றன": மேற்கு வங்க ரயில் விபத்து குறித்து பேசிய பிரதமர் மோடி  மேற்கு வங்காளம்
    இந்தியாவுக்கு வந்துள்ளார் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இந்தியா
    தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக தனது தொகுதியான வாரணாசிக்கு செல்கிறார் பிரதமர் மோடி  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025