Page Loader
26/11 குற்றவாளி நாடுகடத்தல், பாதுகாப்பு, $500 பில்லியன் வர்த்தக ஒப்பந்தம்: மோடி-டிரம்ப் சந்திப்பில் கையெழுத்தான ஒப்பந்தங்கள்
பிரதமர் நரேந்திர மோடியும், டிரம்பும் சந்தித்து கொண்டனர்

26/11 குற்றவாளி நாடுகடத்தல், பாதுகாப்பு, $500 பில்லியன் வர்த்தக ஒப்பந்தம்: மோடி-டிரம்ப் சந்திப்பில் கையெழுத்தான ஒப்பந்தங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 14, 2025
08:49 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நட்பு நாடுகள், எதிரி நாடுகள் உள்ளிட்டவைகளுக்கு பரஸ்பர வரிகளை உயர்த்துவதாக அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியும், டிரம்பும் சந்தித்து கொண்டனர். அரசாங்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற AI உச்சி மாநாட்டை முடித்துக்கொண்டு, இந்திய நேரப்படி நேற்று அதிகாலை அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனை அடைந்தார். அதன் பின்னர் நேற்று இரவு(இந்திய நேரப்படி) ஜனாதிபதி டிரம்ப் உடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் பிரதமர் மோடி. இருதரப்பு சந்திப்பின் போது வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் குடியேற்றம் ஆகியவை மையமாக இருந்தன என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதை பற்றி ஒரு பார்வை:

செய்தியாளர் சந்திப்பு

பேச்சுவார்த்தை நிறைவடைந்ததும் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது

டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியின் கருத்துக்களில் பெரும்பாலானவை வர்த்தகத்தை மையமாகக் கொண்டிருந்தன. இரு நாடுகளும் இருதரப்பு வர்த்தகத்திற்கு 500 பில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை நிர்ணயித்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார். மேலும் அமெரிக்காவில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தையும் டிரம்ப் அறிவித்தார். இந்தியாவின் நீண்டகால கோரிக்கையான 26/11 பயங்கரவாதத் தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை நாடு கடத்துவதும் இந்த சந்திப்பின் ஒரு முக்கிய அறிவிப்பாகும். பாதுகாப்பு உறவுகளுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, அமெரிக்கா இந்தியாவிற்கான தனது இராணுவ விற்பனையை "பில்லியன் டாலர்கள்" அதிகரிக்கும் என்றும், ஐந்தாம் தலைமுறை F-35 ஸ்டெல்த் ஜெட் விமானங்களை நாட்டிற்கு வழங்கும் என்றும் டிரம்ப் கூறினார்.

MEGA கூட்டணி

அமெரிக்காவின் MAGA போல இந்தியாவில் MIGA: பிரதமர் மோடி 

டிரம்பின் "MAGA" (Make America Great Again) என்ற முழக்கத்திற்கு பிரதமர் மோடி தனது சொந்த வார்த்தை சிலேடையை சேர்த்தார். "இந்தியாவில், நாங்கள் ஒரு விக்ஸித் பாரத்தை நோக்கிச் செயல்படுகிறோம், இது அமெரிக்க சூழலில் MIGA (Make India Great Again) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படும்போது, ​​இந்த MAGA மற்றும் MIGA ஆகியவை செழிப்புக்கான 'MEGA' கூட்டாண்மையாக மாறும்" என்று பிரதமர் மோடி கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post