சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மகளிர் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து
செய்தி முன்னோட்டம்
2025 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, அவர்களின் பங்களிப்புகளைக் கொண்டாட ஒரு தனித்துவமான முயற்சியை அறிவித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து கொண்ட அவர், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களால் தனது சமூக ஊடகக் கணக்குகள் இன்று ஒருநாள் கையாளப்படும் என்று அறிவித்தார்.
இந்த ஆண்டு மகளிர் தினம் "அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கும்: உரிமைகள், சமத்துவம், அதிகாரமளித்தல்" என்ற கருப்பொருளின் கீழ் அனுசரிக்கப்படுகிறது.
இது பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் உரிமைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
பிரதமர் மோடியின் எக்ஸ் தள பதிவு
We bow to our Nari Shakti on #WomensDay! Our Government has always worked for empowering women, reflecting in our schemes and programmes. Today, as promised, my social media properties will be taken over by women who are making a mark in diverse fields! pic.twitter.com/yf8YMfq63i
— Narendra Modi (@narendramodi) March 8, 2025