NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்ற கைகலப்பில் காயமடைந்த பாஜக எம்பிக்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்ற கைகலப்பில் காயமடைந்த பாஜக எம்பிக்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு 
    நாடாளுமன்ற கைகலப்பில் காயமடைந்த பாஜக எம்பிக்களிடம் பேசிய பிரதமர் மோடி

    நாடாளுமன்ற கைகலப்பில் காயமடைந்த பாஜக எம்பிக்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு 

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 19, 2024
    02:58 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்ததாகக் கூறப்படும் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் பிரதாப் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (டிசம்பர் 19) பேசினார்.

    டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் பற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்களுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளுக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.

    அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் பிரதாப் சாரங்கியின் நெற்றியில் காயம் ஏற்பட்டது.

    மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றொரு எம்பியை தன்னை நோக்கித் தள்ளினார் என்று குற்றம் சாட்டினார். இதன் விளைவாக அவர் விழுந்தார்.

    குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு

    காயங்களை ஏற்படுத்தியதாக ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு

    இந்த கைகலப்பில் ராஜ்புத் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. பாரதிய ஜனதா தலைவர் நிஷிகாந்த் துபே, வயதான நாடாளுமன்ற உறுப்பினரை ராகுல் காந்தி தள்ளிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

    மேலும் காங்கிரஸ் தலைவர் குண்டகார்டியை (ரவுடித்தனமான நடத்தை) நாடியதாகக் குற்றம் சாட்டினார்.

    ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்த ராகுல் காந்தி, நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றபோது பாஜக எம்.பி.க்களால் தம்மைத் தடுத்து தள்ளிவிட்டதாகக் கூறினார்.

    இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றபோது, ​​பாஜக எம்பிக்கள் என்னை தடுத்து நிறுத்தி, என்னைத் தள்ளிவிட்டு மிரட்டினார்கள்." என்றார்.

    சட்ட நடவடிக்கை

    அமைச்சர் ராகுல் காந்தியை விமர்சித்தார்

    நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, நாடாளுமன்றத்தில் பலத்தை பயன்படுத்தியதற்காக ராகுல் காந்தியை கடுமையாக சாடினார், மற்ற எம்.பி.க்களை காயப்படுத்த ராகுல் காந்தி கராத்தே, குங்ஃபூ கற்றுக்கொண்டாரா என்று கிண்டலாக கேட்டார்.

    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரிஜிஜு கூறினார்.

    முன்னதாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றபோது, ​​பாஜக எம்.பி.க்கள் மாற்று வழியில் செல்லாமல் இணையான போராட்டத்தை நடத்தியபோது கைகலப்பு தொடங்கியது.

    இதனால் நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவு வாயிலான மகர் துவாரில் மோதல் ஏற்பட்டது.

    சர்ச்சைக்குரிய கருத்துக்கள்

    சர்ச்சைக்கு காரணமான அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் கருத்து

    அம்பேத்கர் குறித்துன் நாடாளுமன்றத்தில் அமித் ஷா கூறிய கருத்துக்கள் அம்பேத்கரை அவமதிப்பதாக இருப்பதை எதிர்க்கட்சிகள் கூறி போராட்டம் நடத்துவதால் கைகலப்பு ஏற்பட்டது.

    அமித் ஷாவின் கருத்துக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அவருக்கு எதிராக ராஜ்யசபாவில் சிறப்புரிமை தீர்மானங்களை தாக்கல் செய்தன.

    பிரதாப் சாரங்கி, ஒடிசா மாநிலம் பாலசோர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக உள்ளார். இவர் சமூக சேவை பின்னணி கொண்டவர் மற்றும் 2009 முதல் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    நரேந்திர மோடி
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நாடாளுமன்றம்

    கொண்டாட்டங்களுக்கு தயாரான அறிவாலயம்: திமுக கூட்டணி 40 இடங்களிலும் முன்னிலை திமுக
    போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது நாடாளுமன்ற அத்துமீறல்
    மக்களவையின் சிறப்பு கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதியும், ராஜ்யசபா ஜூன் 27ம் தேதியும் தொடங்கும் மக்களவை
    கைகலப்பில் ஈடுபட்ட இத்தாலி நாடாளுமன்ற உறுப்பினர்கள்; வைரலாகும் காணொளி இத்தாலி

    நரேந்திர மோடி

    அனந்த் அம்பானி -ராதிகா திருமணத்தில் கலந்து கொள்வதாக பிரதமர் மோடி உறுதி ஆனந்த் அம்பானி
    'வாய்ப்புகளை ஆராயுங்கள்...': வினேஷின் ஒலிம்பிக் தகுதி நீக்கம் குறித்து பி.டி.உஷாவிடம் மோடி அறிவுறுத்தல் வினேஷ் போகட்
    பொது சிவில் சட்டம் காலத்தின் தேவை; சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேச்சு சுதந்திர தினம்
    "லேட்டரல் என்ட்ரி விளம்பரத்தை ரத்து செய்யுங்கள்": UPSC தலைவருக்கு மத்திய அமைச்சர் உத்தரவு யுபிஎஸ்சி

    இந்தியா

    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் ஒரே நாடு ஒரே தேர்தல்
    பெருநிறுவனங்களின் லாபங்கள் 4 மடங்கு அதிகரித்தும் ஊழியர்களின் ஊதியம் அதற்கேற்ப உயரவில்லை; ஆய்வில் வெளியான தகவல் பணவீக்கம்
    நவம்பரில் இந்தியாவின் பணவீக்கம் 5.48 சதவீதமாகக் குறைவு; தேசிய புள்ளியியல் அலுவலகம் தகவல் பணவீக்கம்
    இந்தியாவில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட மொபைல் இணைப்புகளை ரத்து செய்தது தொலைத்தொடர்புத் துறை தொலைத்தொடர்புத் துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025