NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 

    உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 09, 2024
    11:40 am

    செய்தி முன்னோட்டம்

    அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் ஜங்கிள் சஃபாரியையும், அருணாச்சல பிரதேசத்தில் உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

    நேற்று அசாம் சென்றடைந்த பிரதமர் மோடி, இன்று காலை காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் ஜங்கிள் சஃபாரிக்கு சென்றார்.

    அவர் முதலில் பூங்காவின் மத்திய கோஹோரா மலைத்தொடரில் யானை சஃபாரி செய்தார்.

    பின்னர் வனத்துறை அதிகாரிகளுடன் அதே எல்லையில் ஜீப்பில் சஃபாரி செய்தார்.

    "இன்று காலை நான் அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காக்கு சென்றேன். பசுமையான இடத்தில் அமைந்துள்ள இந்த யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம், கம்பீரமான ஒரு கொம்பு காண்டாமிருகம் உட்பட பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது," என்று கூறியுள்ளார்.

    அசாம்

    வடகிழக்கு மாநிலங்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் 

    அதன் பிறகு, அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகரில் நடந்த 'விக்சித் பாரத் விக்சித் வடகிழக்கு' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், உலகின் மிக நீளமான இருவழிச் சுரங்கப்பாதையான சேலா சுரங்கப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    சேலா சுரங்கப்பாதை என்பது அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சேலா கணவாய் வழியாக தவாங்கை இணைக்கும் ஒரு பொறியியல் அதிசயமாகும்.

    சுமார் ரூ. 825 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த சுரங்கப்பாதை, நாட்டின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் அடிக்கல்லை பிரதமர் மோடி 2019ல் நாட்டினார்.

    மேலும், இன்று நடந்த நிகழ்ச்சியில், அவர் ரூ.10,000 கோடி மதிப்பிலான UNNATI திட்டத்தையும், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் ரூ.55,600 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அருணாச்சல பிரதேசம்
    அசாம்
    பிரதமர் மோடி
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    அருணாச்சல பிரதேசம்

    அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது இந்தியா
    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர் உடலுக்கு இறுதி சடங்கு இந்திய ராணுவம்
    அருணாச்சல் பிரதேசத்தில் இருக்கும் 11 பகுதிகளுக்கு பெயரிட்ட சீனா இந்தியா
    அருணாச்சல் பகுதிகளுக்கு 'மறுபெயரிட்ட' சீனா: இந்தியா கடும் எதிர்ப்பு இந்தியா

    அசாம்

    குழந்தை திருமணத்தை முறியடிக்கும் முயற்சி: அசாமில் 1800க்கும் மேற்பட்டோர் கைது இந்தியா
    லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர் இந்தியா
    அசாம்: போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தை திருமண வழக்குகள் வருமா இந்தியா
    போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்தியா

    பிரதமர் மோடி

    "இந்தியர்கள் சோம்பேறிகள் என்று நேரு நினைத்தார்": எதிர்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி  நாடாளுமன்றம்
    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து பிரிட்டன்
    பொதுத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று உரையாற்றினார் பிரதமர் மோடி காங்கிரஸ்
    'பிரதமர் மோடி ஓபிசி வகுப்பினை சேர்ந்தவர் இல்லை' என சாடும் ராகுல்; மறுக்கும் பாஜக ராகுல் காந்தி

    இந்தியா

    ஆந்திர மாணவியை கொன்ற அமெரிக்க போலீஸ்காரர் விடுதலையானதை அடுத்து இந்தியா தலையீடு அமெரிக்கா
    ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது 3 புதிய குற்றவியல் சட்டங்கள்  இந்தியா
    இந்தியாவின் மிக நீளமான தொங்கு பாலமான 'சுதர்சன் சேது'வை திறந்து வைத்தார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு 3 மாத இடைவெளியை அறிவித்தார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025