NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெட்ரோல் பங்கில் சுத்தமான கழிவறைகள் இல்லையென்றால் நடவடிக்கை; மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெட்ரோல் பங்கில் சுத்தமான கழிவறைகள் இல்லையென்றால் நடவடிக்கை; மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை
    பெட்ரோல் பங்கில் சுத்தமான கழிவறைகள் இல்லையென்றால் நடவடிக்கை பாயும்; நிதின் கட்கரி எச்சரிக்கை

    பெட்ரோல் பங்கில் சுத்தமான கழிவறைகள் இல்லையென்றால் நடவடிக்கை; மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 11, 2024
    12:04 pm

    செய்தி முன்னோட்டம்

    பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்திற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் வசதிகளை மேம்படுத்துவதற்காக ஹம்சஃபர் கொள்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்.

    மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் சுத்தமான கழிப்பறைகள், குழந்தை பராமரிப்பு அறைகள் மற்றும் எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்கள் போன்ற அத்தியாவசிய வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட லட்சியமான ஹம்சஃபர் கொள்கையை கடந்த செவ்வாயன்று (அக்டோபர் 8) அன்று தொடங்கி வைத்தார்.

    இந்த முயற்சியானது பயணிகளுக்கு பயண அனுபவத்தை மேம்படுத்த முயல்கிறது.

    தூய்மையான கழிப்பறைகள், குழந்தை பராமரிப்பு அறைகள், சக்கர நாற்காலிகளுக்கான ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடங்கள், எரிபொருள் நிலையங்களில் தங்குமிட சேவைகள் மற்றும் பலவற்றை அறிமுகப்படுத்துவது கொள்கையில் அடங்கும்.

    ஹம்சஃபர் கொள்கை

    ஹம்சஃபர் கொள்கை குறித்த விபரங்கள்

    ஹம்சஃபர் பிராண்ட் பயணிகளுக்கான பாதுகாப்பு மற்றும் வசதிக்கு ஒத்ததாக மாறும் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார்.

    ஒருவரிடம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றால், பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்ய வேண்டும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.

    இதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் முழுவதும் உயர்தர, தரப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை நிதின் கட்கரி எடுத்துரைத்தார்.

    இதற்கு ஏற்ற வகையில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அடிப்படை வசதிகளை பராமரிக்கவும், கழிவறைகளை பொது பயன்பாட்டிற்காக திறந்து வைக்கவும் கட்கரி அறிவுறுத்தினார்.

    இதை முறையாட செய்யத் தவறினால் பெட்ரோல் பங்க்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் நிதின் கட்கரி எச்சரித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நிதின் கட்கரி
    நிதின் கட்காரி
    இந்தியா
    நெடுஞ்சாலைத்துறை

    சமீபத்திய

    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்
    சென்னையில் அதிகாலை முதல் மிதமழை; தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை எங்கே? தமிழகம்
    தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஜோ பைடன்
    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்

    நிதின் கட்கரி

    நாளை அறிமுகமாகிறது இந்தியாவிற்கான வாகன தர நிர்ணயத் திட்டமான 'பாரத் NCAP' இந்தியா
    டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதல் வரி? விளக்கமளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி! ஆட்டோமொபைல்
    கார்களில் ஆறு ஏர்பேக்குகள் கட்டாயமில்லையா? என்ன கூறினார் நிதின் கட்கரி? ஆட்டோமொபைல்
    தானியங்கி கார்களுக்கு எதிரான கருத்தைத் தெரிவித்த நிதின் கட்கரி டெஸ்லா

    நிதின் கட்காரி

    9 லட்சம் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 முதல் தடை - நிதின் கட்கரி அறிவிப்பு சுற்றுச்சூழல்
    ஆறு வழி சாலை அமைப்பது குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்
    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி மகாராஷ்டிரா
    சென்னை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி - ரூ.24 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு சென்னை

    இந்தியா

     எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் அதிகரிக்கும் உள்கட்டமைப்புகள்: விமானப்படை தளபதி எச்சரிக்கை இந்தியா-சீனா மோதல்
    எஸ்சிஓ உச்சி மாநாட்டில் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடைபெறாது: ஜெய்சங்கர் திட்டவட்டம் எஸ்.ஜெய்சங்கர்
    பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார விவகாரம்; சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கிய மேற்குவங்க மருத்துவர்கள் மேற்கு வங்காளம்
    சென்னை ஏர்ஷோ நேரலை: இந்திய விமானப்படையின் மெகா சாகச நிகழ்ச்சி தொடங்கியது விமானப்படை

    நெடுஞ்சாலைத்துறை

    அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக தொடரும் ரெய்டு தமிழ்நாடு
    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் U-வடிவ மேம்பாலம் திறப்பு தமிழ்நாடு
    மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்  சேலம்
    மயிலாடுதுறை கொள்ளிடம் பகுதியில் மண் பானை தயாரிக்கும் இன்ஜினியர்  மயிலாடுதுறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025