NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் ஒரு சதுரடி நிலம் ரூ.1,000 ஆக நிர்ணயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் ஒரு சதுரடி நிலம் ரூ.1,000 ஆக நிர்ணயம்
    சென்னையில் ஒரு சதுரடி நிலம் ரூ.1,000 ஆக நிர்ணயம்

    சென்னையில் ஒரு சதுரடி நிலம் ரூ.1,000 ஆக நிர்ணயம்

    எழுதியவர் Nivetha P
    Aug 25, 2023
    04:40 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம் முழுவதுமான குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு தமிழக பத்திரப்பதிவு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதிலுள்ள மதிப்பானது இம்மாதம் முதலே அமலுக்கு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்கள் அனைத்து பதிவாளர் அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    புதிய கட்டண மதிப்பீட்டில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒரு சதுரடி நிலம் ரூ.1000ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    நகர பகுதிகளுக்கு ஏற்றாற்போல் இந்த வழிகாட்டி மதிப்பில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.

    கட்டணம் 

    மாவட்டங்களுக்கு ஏற்றாற்போல் மதிப்பு நிர்ணயம் 

    அதன்படி காஞ்சிபுரம் மாநகராட்சி, ஆவடி, தாம்பரம் போன்ற பகுதிகளில் வழிகாட்டி மதிப்பு ஒரு சதுரடிக்கு ரூ.800ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தற்போது மதிப்பீடுகள் மாற்றப்பட்டுள்ளதால் இதுவரை மதிப்பு குறைவான இடங்களின் மதிப்பு இனி விலை உயரும் என்றும் கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து, நாகர்கோயில், திருச்சி, திருப்பூர், ஈரோடு, மதுரை, சேலம், ஈரோடு போன்ற மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளின் ஒரு சதுரடி ரூ.700-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கரூர், வேலூர், திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகள் ரூ.600ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    பஞ்சாயத்து நிலங்கள் 

    கிராம பஞ்சாயத்து பகுதிக்கான நிர்ணயம் குறித்த தகவல் 

    அதேபோல் கடலூர் மாநகராட்சி பகுதிகள் ரூ.300ஆகவும், தூத்துக்குடி, தஞ்சாவூர், சிவகாசி, கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.500ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, போன்ற பகுதிகளில் கிராம பஞ்சாயத்து பகுதி வீட்டுமனைகள் ஒரு சதுரடிக்கு ரூ.100ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    விவசாய நிலங்கள் ஏக்கருக்கு ரூ.5 லட்சத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மற்ற மாவட்டங்களில் கிராம பஞ்சாயத்து பகுதி வீட்டுமனைகள் ஒரு சதுரடிக்கு ரூ.50ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, விவசாயநிலங்கள் ஏக்கருக்கு ரூ.2 லட்சத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    பத்திரப்பதிவு 

    பத்திரப்பதிவு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் 

    பத்திரப்பதிவு கட்டணம் 11%ல் இருந்து 9%மாக குறைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் வழிகாட்டி மதிப்பு சில இடங்களில் 2 மடங்குக்கும் அதிகமாக உள்ளது.

    மாநில அரசு இதன் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதிகளவு பணம் ஈட்டும் இத்துறையில் அதிகளவு வருவாய் ஈட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    ஒவ்வொரு சர்பதிவாளர் அலுவலகத்திற்கும் ஆண்டுக்கு இவ்வளவு கோடி என்னும் இலக்கு அமைக்கப்பட்டிருக்குமாம்.

    அதன்படி முன்னர் அதிகாரபத்திரத்திற்கு ரூ.10 ஆயிரம் இருந்த நிலையில் தற்போது அது ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    தொடர்ந்து முன்னர் ஆவணபக்கங்கள் எவ்வளவு இருந்தாலும் ரூ.100 தான் கட்டணம். ஆனால் தற்போது ஒரு பக்கத்துக்கு ரூ.100 என வசூலிக்கப்படவுள்ளது.

    நிர்வாக குழு 

    மறுசீரமைப்பு குறித்து இந்திய கட்டுமான சங்க உறுப்பினர் கருத்து 

    இந்த மறுசீரமைப்பு குறித்து இந்திய கட்டுமான சங்க உறுப்பினர் எம்.எல்.ஏ.ரூபி மனோகரன் கூறுகையில், முத்திரைத்தாள் கட்டணத்தினை 2% குறைந்துள்ள நிலையில் வழிகாட்டி மதிப்பீடு பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளது மக்களுக்கு பெரும் சுமையினை ஏற்படுத்தும்.

    இதனால் அவர்கள் வீடு, நிலம் வாங்குவது கணிசமாக குறையும் பட்சத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

    மேலும் இந்த தொழில்சார்ந்த பல பொருட்களின் விற்பனையும் கடுமையாக பாதிப்படையும் என்று கவலை தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே அவர், "முதன்முதலாக ஒருவர் வீடு வாங்கும் பட்சத்தில் அவருக்கு வரி விதிக்கப்படாமல் பதிவு செய்து கொடுக்க வேண்டும். அது தான் சாமானிய மக்களுக்கு அரசு துணைநிற்பதற்கான அடையாளமாகும்" என்றும் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு
    மாநில அரசு

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    சென்னை

    சென்னையில் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக புதிய அறிமுகம் மெட்ரோ
    சென்னையில் துவங்கும் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி - 6 அணிகள் பங்கேற்பு  தமிழக அரசு
    மீண்டும் சென்னையில் அதிநவீன 'டபுள் டக்கர்' பேருந்து தமிழ்நாடு
    'Paytm' செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் மெட்ரோ

    தமிழ்நாடு

    காலிமனை பதிவிற்கு நிலத்தின் தற்போதைய புகைப்படம் கட்டாயம் - பதிவுத்துறை உத்தரவு  எச்சரிக்கை
    மஞ்சள் நிற பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர்  மு.க ஸ்டாலின்
    சென்னை கோயம்பேட்டில் தக்காளி வரத்து அதிகரிப்பு - விலையில் வீழ்ச்சி சென்னை
    எம்எஸ் தோனியின் கோரிக்கையை நிராகரித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் எம்எஸ் தோனி

    மாநில அரசு

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025