
வந்தே பாரத் ரயில்களில் பயணிக்க 15 நிமிடங்களுக்கு முன் வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம்!
செய்தி முன்னோட்டம்
இந்திய ரயில்வே ஒரு புதிய பயணிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பயணிகள் தற்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில், ரயில் தங்கள் ஸ்டேஷனிற்கு வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை பெறலாம். இந்த வசதி தற்போது தெற்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் இயக்கப்படும் எட்டு வந்தே பாரத் ரயில்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை, ஒரு ரயில் அதன் தொடக்க நிலையத்திலிருந்து புறப்பட்டதும், வழித்தட நிலையங்களில் இருந்து அதற்கான டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது.இப்போது, பாசஞ்சர் ரிசர்வேஷன் சிஸ்டத்தில் (PRS) ஏற்பட்ட தொழில்நுட்ப மேம்பாடுகளால், எந்தவொரு நிறுத்தத்திலிருந்தும் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை காலியாக உள்ள இருக்கைகள் தற்போதைய புக்கிங்களுக்கு திறந்திருக்கும்.
ரயில்கள்
இதில் அடங்கும் முக்கிய வந்தே பாரத் ரயில்கள்
20631 மங்களூரு சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல் 20632 திருவனந்தபுரம் சென்ட்ரல் - மங்களூரு சென்ட்ரல் 20627 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் 20628 நாகர்கோவில் - சென்னை எழும்பூர் 20642 கோயம்புத்தூர் - பெங்களூரு கண்டோன்மெண்ட் 20646 மங்களூர் சென்ட்ரல் - மட்கான் 20671 மதுரை - பெங்களூரு கண்டோன்மெண்ட் 20677 சென்னை சென்ட்ரல் - விஜயவாடா
முக்கியத்துவம்
இந்த புதிய அம்சத்தின் முக்கியத்துவம் என்ன?
இந்த புதிய அம்சத்தினால் ரயிலில் இருக்கைகள் நிறைய வாய்ப்புகள் அதிகமாகும். திடீர் பயணத் திட்டங்கள் உள்ள பயணிகள் பயனடையலாம் மற்றும் பயணிகள் நம்பிக்கைக்கு ஏற்ப நெகிழ்வான முன்பதிவு வசதியும் உண்டு. பயணிகள் IRCTC இணையதளம் அல்லது railone ஆப் மூலம் அல்லது ரயில்வே முன்பதிவு கவுன்டர்களில் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.