NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை மதுரவாயல் பைபாஸ் ரோட்டில் BMW கார் மோதியதில் கொல்லப்பட்ட ராபிடோ ஓட்டுநர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை மதுரவாயல் பைபாஸ் ரோட்டில் BMW கார் மோதியதில் கொல்லப்பட்ட ராபிடோ ஓட்டுநர்
    BMW கார் மோதியதில் கொல்லப்பட்ட ராபிடோ ஓட்டுநர்

    சென்னை மதுரவாயல் பைபாஸ் ரோட்டில் BMW கார் மோதியதில் கொல்லப்பட்ட ராபிடோ ஓட்டுநர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 20, 2024
    01:03 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் மதுரவாயல்- தாம்பரம் பைபாஸ் ரோட்டில், நேற்று இரவு அதிவேகமாக வந்த BMW சொகுசு கார் மோதியதில் ராபிடோ பைக் ஓட்டுநர் உயிரிழந்தார்.

    இவர் தெலுங்கு ஊடகத்தில் வீடியோ பத்திரிகையாளராகவும் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

    கார் மோதியதில் அவர் விபத்து நடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் தூக்கி வீசப்பட்டார்.

    பாண்டி பஜாரைச் சேர்ந்த பிரதீப் குமார் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் பகுதி நேரமாக ரேபிடோ ஓட்டுநராக பணிபுரிந்தார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

    விபத்து நடந்ததையடுத்து காரை ஓட்டி வந்தவர் காரை விட்டுவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #JUSTIN மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் ரோட்டில் அதிவேகமாக வந்த BMW கார் மோதி விபத்து; 100 மீ. தூக்கி வீசப்பட்டு ராபிடோ ஊழியர் உயிரிழப்பு #Maduravoyal #Tambaram #BMWCar #Bike #RoadAccident #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/j7ViHdxqK6

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) November 20, 2024

    விவரங்கள்

    விபத்து குறித்து விசாரணையை துவங்கிய போலீசார்

    வாகனம் ஓன்று ரோட்டில் தனியாக கிடப்பதை பார்த்த வாகன ஓட்டிகள், விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

    பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சேதமடைந்த இருசக்கர வாகனங்களையும் கைப்பற்றனர்.

    விபத்து நடந்த இடத்திலிருந்து 100 மீ தொலைவில், மேம்பாலத்தின் கீழே இருந்த ஒரு புதரில் குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்ட பின்னரே இவரது மரணம் உறுதிப்படுத்தப்பட்டது.

    விபத்து நடந்த வேகத்தில், 100 மீ தொலைவில் குமார் தூக்கியெறிப்பட்டு இருக்கலாம் என சந்தேகித்த போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி விசாரணையை துவக்கியுள்ளனர்.

    காவல்துறையின் கூற்றுப்படி, விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    விபத்து

    சமீபத்திய

    3 வயது சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுவிப்பு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு உச்ச நீதிமன்றம்
    தீவிரவாதத்தை ஊட்டி வளர்த்ததன் விளைவு; ஒரு இந்திய மாநிலத்தை விட குறைவான ஜிடிபி கொண்ட பாகிஸ்தான் பாகிஸ்தான்
    தனுஷின் 'குபேரா' ஓடிடி உரிமைகள் ₹50 கோடிக்கு விற்கப்பட்டதாம்! தனுஷ்
    மழைக்காலங்களில் கார்களை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி? நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை பருவமழை

    சென்னை

    நாவரசு கொலை வழக்கு: ஜான் டேவிடின் விடுதலை மனுவை மீண்டும் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு கொலை
    சென்னையில் 'பிங்க் ஆட்டோக்கள்' திட்டம்; பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தமிழக அரசு
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    சென்னை தலைமைச் செயலகத்தில் திடீர் அதிர்வு; என்ன நடந்தது? இந்தியா

    விபத்து

    விரைவில் இந்திய சாலைகளில் பிரத்யேக இரு சக்கர வாகனப் பாதைகள் உருவாகலாம் இரு சக்கர வாகனம்
    புனே கார் விபத்து: அமைச்சர், எம்எல்ஏ-விற்கு தொடர்பு என புனே மருத்துவமனை டீன் குற்றச்சாட்டு புனே
    புனே போர்ஷே விபத்து வழக்கில் விபத்தை ஏற்படுத்திய 17 வயது இளைஞனின் தாய் கைது  புனே
    ஹைதராபாத்தில் நடந்த பயங்கர விபத்து; வைரலாகும் வீடியோ ஹைதராபாத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025