NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உருக்கமான உரையுடன் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உருக்கமான உரையுடன் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 
    பிரதமர் நரேந்திர மோடி, மக்களவையில் ஒரு உருக்கமான உரையை ஆற்றினார்.

    உருக்கமான உரையுடன் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 18, 2023
    12:14 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடாளுமன்றத்தின் ஐந்து நாள் "அமிர்த கால்" கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

    இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வளர்ச்சி குறித்த விவாதங்கள் இதில் நடைபெற உள்ளது. சிறப்பு அமர்வுக்கு எட்டு மசோதாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

    நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால விவாதத்தை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, மக்களவையில் ஒரு உருக்கமான உரையை ஆற்றினார்.

    மேலும், முதன்முறையாக நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் தான் நுழைந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

    "இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடம் நம் நாட்டு மக்களின் வியர்வை, உழைப்பு மற்றும் பணத்தால் கட்டப்பட்டது," என்று கூறிய அவர் தனது உரையைத் தொடங்கினார்.

    சந்திரயான்-3இன் வெற்றி மற்றும் ஜி20 உச்சி மாநாடு குறித்தும் பிரதமர் பேசினார்.

    டக்லம்

    'பழைய கட்டிடம் எப்போதும் எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும்'

    "நாம் புதிய வளாகத்திற்குச் செல்வதற்கு முன், இந்த நாடாளுமன்ற கட்டிடத்துடன் தொடர்புடைய தருணங்களை நினைவில் கொள்ள வேண்டிய நேரம் இது. நாம் புதிய கட்டிடத்திற்கு மாறலாம், ஆனால் இந்த கட்டிடம் எப்போதும் எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும்." என்று மேலும் அவர் கூறினார்.

    இதற்கிடையில், நாளை முதல் புதிய பார்லிமென்ட் கட்டிடத்துக்கு மாற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மக்களவை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

    இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இந்த அமர்வு "வரலாற்று முடிவுகளின்" கூட்டமாக இருக்கும் என்றார்.

    மக்களவை கூடியதும் காரசாரமான கருத்துப் பரிமாற்றம் தொடங்கியது. இரண்டு முறை தேசிய கீதம் இசைக்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் புகார் தெரிவித்தனர்.

    அதன் பிறகு, பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி

    நாடாளுமன்றம்

    மணிப்பூர் பிரச்சனை: நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம்  மக்களவை
    'மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்': அமித்ஷா  மணிப்பூர்
    விடிய விடிய நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி எம்பிக்கள்  காங்கிரஸ்
    மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு  எதிர்க்கட்சிகள்

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடியின் பாகிஸ்தான் சகோதரி: யாரிந்த கமர் மொஹ்சின் ஷேக்? இந்தியா
    தென்னாப்பிரிக்காவில் இருந்து சந்திரயான்-3 தரையிறங்குவதை பார்வையிட இருக்கிறார் பிரதமர் மோடி  இந்தியா
    மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விபத்து: 17 பேர் பலி இந்தியா
    பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கீழே விழுந்து கிடந்த மூவர்ண கொடி: பிரதமர் மோடியின் நெகிழ வைக்கும் வீடியோ  தென்னாப்பிரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025