NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
    பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

    பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

    எழுதியவர் Nivetha P
    Sep 06, 2023
    02:59 pm

    செய்தி முன்னோட்டம்

    திருப்பூர்-பல்லடம், கள்ளக்கிணறு என்னும் பகுதியினை சேர்ந்த பாஜக.,கிளை நிர்வாகி மோகன்ராஜ்(49), இவரது தம்பி செந்தில்குமார்(47),இவர்களது சித்தி ரத்தினாம்பாள்(58)மற்றும் அவரது தாயார் புஷ்பாவதி(67)உள்ளிட்ட நால்வர் கடந்த 4ம்தேதி இரவு கொலை செய்யப்பட்டனர்.

    பொது இடத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் இவர்களை குடிபோதையில் இருந்த கும்பல் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் இதுகுறித்து பல்லடம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    அதன்படி இதில் தொடர்புடைய திருச்சி, மனப்பாறையினை சேர்ந்த செல்லமுத்து(24)என்பவரை காவல்துறை கைது செய்து, கொலை செய்ய உபயோகித்த ஆயுதத்தினை கைப்பற்ற அழைத்து செல்கையில் தப்பியோட முயற்சி செய்த அவர், தண்ணீர் தொட்டி மீதிருந்து தவறிவிழுந்து காலில் முறிவு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கொலை 

    காவல் கண்காணிப்பாளர் அளித்த உறுதியின் பேரில் உடல்களை வாங்க ஒப்புக்கொண்ட உறவினர்கள் 

    இந்த கொலையில் சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளியினை நேற்று(செப்.,5)காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடவேண்டியவை.

    இதனிடையே, கொலையில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து பின்னரே உடல்களை வாங்குவோம் என்று மோகன்ராஜின் அண்ணன், குடும்பத்தினர் மற்றும் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    இவர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான சாமிநாதன் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் கொலை செய்த கும்பலில் இருந்த அனைவரையும் கைது செய்வோம் என உறுதியளித்ததோடு,

    உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தக்க பாதுகாப்பு அளிப்பதாக கூறிய பின்னரே போராட்டத்தினை கைவிட்டு உடல்களை வாங்க ஒப்புக்கொண்டனர்.

    அதன்பின்னர் நேற்று(செப்.,6)மாலை 4 பேரின் உடல்களும் தனித்தனி ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    தொடர்ந்து பல்லடம் வீட்டில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு அதே பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொலை
    கைது
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஆப்பிள் உற்பத்தியை இந்தியாவில் விரிவுப்படுத்த வேண்டாம் : டிம் குக்கிடம் அறிவுறுத்திய டிரம்ப் ஆப்பிள்
    ஐபிஎல் 2025இல் தற்காலிக மாற்று வீரர்களை சேர்த்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி... ஆனால் ஒரு கண்டிஷன் ஐபிஎல் 2025
    கர்னல் குரேஷியை 'பயங்கரவாத சகோதரி' என்று அழைத்த பாஜக அமைச்சரை கண்டித்த உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான் அமேசான்

    கொலை

    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை  இந்தியா
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  இந்தியா
    மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ் இந்தியா
    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு  இந்தியா

    கைது

    செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு  உச்ச நீதிமன்றம்
    மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - பிரிஜ் பூஷனுக்கு சம்மன்  பாஜக
    செல்போன் பறிப்பு விவகாரம் - ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் பலி  சென்னை
    ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை  ராமேஸ்வரம்

    காவல்துறை

    மணிப்பூரை அடுத்து மேற்கு வங்கத்தில்: அரை நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட 2 பெண்கள் மேற்கு வங்காளம்
    சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பெண் வியாபாரி - 5 பேர் கைது  கொலை
    பீகாரில் 40 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை பீகார்
    கலவரத்தின் போது பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஜீரோ FIRகள்: அலறும் மணிப்பூர் போலீஸ்  மணிப்பூர்

    காவல்துறை

    என்.எல்.சி.-கடலூரில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிக நிறுத்தம்  காவல்துறை
    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து - 26 பேர் பலி  பிலிப்பைன்ஸ்
    என்.எல்.சி.க்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் - அன்புமணி ராமதாஸ் கைது  பாமக
    கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025