NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது
    நேற்று நண்பகல் சுற்றுலாப் பயணிகள் குழு மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 23, 2025
    08:25 am

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத்தலமான பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் நேற்று நண்பகல் சுற்றுலாப் பயணிகள் குழு மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    பொதுமக்களை குறிவைத்து ஜம்மு காஷ்மீரில் நடந்த மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலாக கருதப்படும் இந்த சம்பவத்தில் குறைந்தது இருபத்தி ஆறு பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    கொல்லப்பட்டவர்களில் இரண்டு வெளிநாட்டினர் அடங்குவர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

    மினி சுவிட்ஸர்லாந்து என்று அழைக்கப்படும் பைசரன் புல்வெளியில், சீருடை அணிந்திருந்த பயங்கரவாதிகள் குழு ஒன்று சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது என தாக்குதலை நேரில் கண்டவர்கள் கூறினர்.

    தாக்குதல்

    'மோடியிடம் போய் சொல்': பயங்கரவாதி கூறியதாக பாதிக்கப்பட்ட பெண் தகவல் 

    அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் சுற்றுலாப் பயணிகள் மீது மிக அருகில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

    இந்த தாக்குதலுக்கு லஷ்கர் முன்னணி டிஆர்எஃப் தாக்குதலுக்கு உரிமை கோரியது.

    பஹல்காம் மலைவாசஸ்தலத்திலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பைசரன் புல்வெளி, நடந்து அல்லது குதிரைகள் மூலம் மட்டுமே அடைய முடியும்.

    நேற்று ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் நுழைந்து, உணவகங்களை சுற்றித் திரிந்த சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர் என்று அதிகாரிகள் கூறியதாக செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.

    தாக்குதலில் தப்பியவரின் கூற்றுப்படி, தாக்குதல் நடத்தியவர்கள் இந்துக்களை குறிவைத்ததாகவும், தீவிரவாதிகளில் ஒருவர், 'நான் உன்னைக் கொல்ல மாட்டேன். போய் மோடியிடம் இதைச் சொல்லுங்கள்' என்றதாகவும் கூறினார்.

    சுற்றிவளைப்பு

    தீவிரவாதிகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் விரைந்தனர் 

    தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைக்கப்பட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது.

    X இல் ஒரு பதிவில், பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவர்கள் தப்பிக்க மாட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.

    "இந்தக் கொடூரமான செயலுக்குப் பின்னால் இருப்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்... அவர்கள் தப்பவிடப்பட மாட்டார்கள்! அவர்களின் தீய திட்டம் ஒருபோதும் வெற்றிபெறாது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் உறுதி அசைக்க முடியாதது, மேலும் அது இன்னும் வலுவடையும்."

    சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்து கொண்டிருந்த பிரதமர், தாக்குதலை தொடர்ந்து தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு இந்தியா விரைந்தார்.

    சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, முதலமைச்சர் உமர் அப்துல்லாவும் ராம்பனில் இருந்து ஸ்ரீநகருக்குத் திரும்பினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பயங்கரவாதம்
    ஜம்மு காஷ்மீர்
    சுற்றுலா
    துப்பாக்கி சூடு

    சமீபத்திய

    கேன்ஸில் டாம் குரூஸின் 'மிஷன்: இம்பாசிபிள்' படத்திற்கு குவிந்த பாராட்டு ஹாலிவுட்
    இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் திடீர் ஒத்திவைப்பு; என்ன காரணம்? சுபன்ஷு சுக்லா
    கடலூர் சாயப் பட்டறையில் ரசாயன பாய்லர் வெடித்து விபத்து; 19 பேருக்கு காயம் கடலூர்
    நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கி கௌரவிப்பு நீரஜ் சோப்ரா

    பயங்கரவாதம்

    சிறைக்கைதிகளுக்கு பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: 7 மாநிலங்களில் என்ஐஏ சோதனை கர்நாடகா
    இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு அமெரிக்க மண் பயன்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா
    பாகிஸ்தான் குவாதர் துறைமுகத்தில் திடீர் தாக்குதல்: 2 தீவிரவாதிகள் பலி  பாகிஸ்தான்
    ரஷ்யாவில் உள்ள கச்சேரி அரங்கில் பயங்கரவாத தாக்குதல்: 60 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம் ரஷ்யா

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீரின் தோடாவில் என்கவுன்டர் நடவடிக்கை: 4 இராணுவ வீரர்கள் பலி  இந்தியா
    ஜம்மு காஷ்மீரின் தோடாவில் 5 ராணுவ வீரர்களை கொன்ற காஷ்மீர் புலிகள் அமைப்பின் பின்புலம் என்ன? பயங்கரவாதம்
    ஜம்முவில் பயங்கரவாதிகளை வேட்டையாட 500 பாரா கமாண்டோக்கள் குவிப்பு பயங்கரவாதம்
    மணிப்பூர், ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்ய வேண்டாம்: பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை அமெரிக்கா

    சுற்றுலா

    இந்தோனேசியா பாலியில் புதிய ஹோட்டல்கள் கட்ட தடை; என்ன காரணம்? இந்தோனேசியா
    டார்ஜிலிங்கின் தேயிலைத் தோட்ட அதிசயங்களுக்கு போலாமா ஒரு விசிட்?! சுற்றுலாத்துறை
    உலகின் கைவிடப்பட்ட சிறந்த கட்டிடக்கலை கொண்ட ஐந்து நகரங்கள்; ஆச்சரியமூட்டும் பின்னணி பயணம்
    சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்; திருச்சியிலிருந்து பாங்காக்கிற்கு நேரடி விமான சேவை தொடக்கம் திருச்சி

    துப்பாக்கி சூடு

    நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் இன்று! நாடாளுமன்றம்
    சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த என்கவுன்டரில், சிஆர்பிஎஃப் துணை ஆய்வாளர் கொல்லப்பட்டார் சத்தீஸ்கர்
    ஜம்மு&காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - 3 வீரர்கள் பலி ஜம்மு காஷ்மீர்
    செக் குடியரசு துப்பாக்கிச் சூடு: சார்லஸ் பல்கலைக்கழகத்தில் 14 பேர் சுட்டுக்கொலை, 25 பேர் காயம் கொலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025