NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு - பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க இருக்கும் அமைச்சர் பொன்முடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு - பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க இருக்கும் அமைச்சர் பொன்முடி
    தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு - பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க்கும் அமைச்சர் பொன்முடி

    தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு - பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க இருக்கும் அமைச்சர் பொன்முடி

    எழுதியவர் Nivetha P
    Nov 01, 2023
    05:32 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சுதந்திர போராட்ட வீரர் சங்கரயாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க கூடாது என்று மறுத்துள்ளார்.

    இதற்கு பலதரப்பட்ட எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை(நவ.,2) நடைபெறவுள்ள நிலையில், ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை புறக்கணிக்க போவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    இதனை இன்று(நவ.,1) சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து அறிவித்துள்ளார்.

    மேலும் அவர், 'தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இத்தகைய மோசமான ஆளுநர் இருந்ததே இல்லை' என்றும்,

    'இவருக்கு சுதந்திர போராட்ட வீரர் சங்கரையா பற்றி தெரிந்திருக்கவில்லை என்றால், யாரிடமாவது கேட்டு தெரிந்திருக்க வேண்டும்' என்றும் கூறியுள்ளார்.

    போராட்டம் 

    'பொய் பேசுவதை தொழிலாக வைத்துள்ள ஆளுநர்' - அமைச்சர் சாடி பேசியுள்ளார் 

    சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று கூறும் ஆளுநர், சங்கரயாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க என்ன காரணம்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தொடர்ந்து, 'இதனால் நாளை நடக்கவுள்ள மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளாமல் புறக்கணிக்கவுள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், 'பொய் பேசுவதை தொழிலாக வைத்துள்ள ஆளுநர் எந்த சட்டத்தையும் மதிப்பதில்லை. தமிழ்நாடு அமைச்சரவை சொல்வதை செய்வது தான் ஆளுநரின் முக்கிய வேலை' என்று பேசியுள்ளார்.

    பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு ஆளுநர் ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என்றும் அமைச்சர் கூறியதாக தெரிகிறது.

    மாநில அரசு உரிமைகளை பறிக்கும் வகையில் ஆளுநர் செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    அமைச்சரின் ஆதங்கம் 

    #NewsUpdate | "நாளை மதுரையில் நடக்க உள்ள பட்டமளிப்பு விழாவில் நான் கலந்துகொள்ளப் போவதில்லை. அதை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளேன்" -பொன்முடி, உயர் கல்வித்துறை அமைச்சர்#SunNews | #RNRavi | #KPonmudy pic.twitter.com/gTvvBAzRCh

    — Sun News (@sunnewstamil) November 1, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆர்.என்.ரவி
    உயர்கல்வித்துறை
    மாநில அரசு
    சென்னை

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    ஆர்.என்.ரவி

    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம் தமிழ்நாடு
    திமுக கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஆளுநர் மாளிகை
    தமிழக ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம் - 144 உறுப்பினர்கள் ஆதரவு தமிழ்நாடு

    உயர்கல்வித்துறை

    பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் தமிழ்நாடு
    2023-24 கல்வியாண்டில் கல்லூரிகளில் புதிய மாதிரி பாடத்திட்டம் - அமைச்சர் பொன்முடி  தமிழக அரசு
    அமைச்சர் பொன்முடி மீதான வழக்கினை ஒத்திவைத்த விழுப்புரம் நீதிமன்றம் திமுக

    மாநில அரசு

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு இந்தியா

    சென்னை

    தொடரும் ஓலா, ஊபர் போராட்டம்; பாதுகாப்பு கோரும் ராப்பிடோ ஓட்டுனர்கள் ஓலா
    சென்னையில் போலி டிக்கெட் பரிசோதகர் கைது கைது
    ஒரு நாள் உலகக் கோப்பை NZ vs AFG- டாஸ் வென்று பந்து வீசுகிறது ஆப்கானிஸ்தான் ஆப்கான் கிரிக்கெட் அணி
    டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்களின் அபராதம் மூலம் ரயில்வேக்கு ரூ.57.48 கோடி வருவாய் தெற்கு ரயில்வே
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025