NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'நிலைமை மோசமடைந்து கொண்டிருக்கிறது': மணிப்பூர் ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சி எம்பிக்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'நிலைமை மோசமடைந்து கொண்டிருக்கிறது': மணிப்பூர் ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சி எம்பிக்கள் 
    இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளனர்.

    'நிலைமை மோசமடைந்து கொண்டிருக்கிறது': மணிப்பூர் ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சி எம்பிக்கள் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 30, 2023
    03:04 pm

    செய்தி முன்னோட்டம்

    கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரை நேரில் சென்று பார்வையிட 16 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 20 எம்.பி.க்கள் கொண்ட குழு, 2 நாட்கள் பயணமாக மணிப்பூருக்கு சென்றுள்ளது.

    இந்த பயணத்தின் போது, ​​எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குகி மற்றும் மெய்தே சமூகங்கள் இருக்கும் பகுதிகளுக்கும் நிவாரண முகாம்களுக்கும் சென்றனர்.

    இந்நிலையில், இன்று மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேயை சந்தித்த எதிர்க்கட்சிகள் குழு, தங்கள் அவதானிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு அறிக்கையை அவரிடம் கொடுத்தனர்.

    இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளனர்.

    எதிர்க்கட்சிகளின் இந்த பயணத்தை விமர்சித்திருக்கும் பாஜக, அவர்கள் ஊர் சுற்றி பார்க்கவும் போட்டோ எடுக்கவும் மட்டுமே அங்கு சென்றுள்ளனர் என்று கூறியுள்ளது.

    பீஜேபிஜி

    இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்ட எதிர்க்கட்சி குழு

    நேற்று INDIA எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்த 21 எம்.பி.க்கள் டெல்லியில் இருந்து மணிப்பூரின் இம்பாலுக்கு வணிக விமானத்தில் பயணம் செய்தனர்.

    பயணத்தின் முதல் நாளான நேற்று, எதிர்க்கட்சித் தலைவர்கள் இம்பால், பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள மொய்ராங் மற்றும் சுராசந்த்பூரில் அமைந்திருக்கும் ஏராளமான நிவாரண முகாம்களுக்குச் சென்றனர்.

    அதன் பிறகு, காங்கிரஸ் தலைவர்கள் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மற்றும் கௌரவ் கோகோய் ஆகியோர் தலைமையில் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்ட எதிர்க்கட்சி குழு, வெவ்வேறு முகாம்களுக்கு சென்று பார்வையிட்டது.

    இந்நிலையில், இன்று ராஜ்பவனில் வைத்து மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உகேயை சந்தித்த எதிர்க்கட்சி எம்பிக்கள், அவரிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எதிர்க்கட்சிகள்
    மணிப்பூர்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    எதிர்க்கட்சிகள்

    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம், பெங்களுருவில் கூடும் என சரத் பவார் அறிவிப்பு  பாஜக
    பெங்களுரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு  பெங்களூர்
    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான மாற்று தேதி அறிவிப்பு  பாஜக
    அடுத்த மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் சோனியா காந்தி  காங்கிரஸ்

    மணிப்பூர்

    மணிப்பூர் கலவரம்: அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வார அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்  உச்ச நீதிமன்றம்
    மணிப்பூர் மாநில கொடியை ஏந்தியதால் சர்ச்சை; விளக்கமளித்த இந்திய கால்பந்தாட்ட வீரர் ஜீக்சன் கால்பந்து
    மணிப்பூர் விவகாரம் : அமெரிக்க தூதரின் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் அமெரிக்கா
    மணிப்பூர் வன்முறை: 2 மாதகாலமாக தொடரும் 'இன்டர்நெட்' தடையை நீக்க உத்தரவு  கலவரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025