LOADING...
50க்கும் குறைவான ஆயுதங்கள்; ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான புதிய தகவலை வெளியிட்ட இந்திய விமானப்படை
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான புதிய தகவலை வெளியிட்ட இந்திய விமானப்படை

50க்கும் குறைவான ஆயுதங்கள்; ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான புதிய தகவலை வெளியிட்ட இந்திய விமானப்படை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 30, 2025
05:39 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது மே மாதம் இந்தியா நடத்திய ராணுவ நடவடிக்கை குறித்த புதிய தகவல்களை இந்திய விமானப்படையின் (IAF) துணைத் தளபதி, ஏர் மார்ஷல் நர்மதேஸ்வர் திவாரி வெளியிட்டுள்ளார். என்டிடிவி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பேசிய அவர், பாகிஸ்தானை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வரவழைக்க 50 க்கும் குறைவான ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். ஏர் மார்ஷல் திவாரி கூறுகையில், ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் தாக்குதல் நடந்தவுடன், இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளும் உடனடியாகத் திட்டமிடத் தொடங்கின. தாக்குதலுக்கான இலக்குகள் ஏப்ரல் 24 அன்று ஒரு உயர்மட்டக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஒன்பது இலக்குகள்

ஒன்பது இலக்குகள் குறிவைப்பு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், ஒன்பது இலக்குகள் இறுதி செய்யப்பட்டு, மே 6, 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தியா முதலில் தாக்குதலை நடத்திய பிறகு, பாகிஸ்தான் பதிலடி கொடுக்க முயற்சி செய்தது. ஆனால், இந்தியப் படைகள் பதிலடி கொடுத்த பிறகு, முதல் தாக்குதலுக்குப் பிறகு நான்கு நாட்களில் மே 10 அன்று இரு நாடுகளும் மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஒப்புக் கொண்டன. இந்த நடவடிக்கை, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆயுதங்களைக் கொண்டு, எதிரி நாடுகளைப் பேச்சுவார்த்தைக்கு வரவழைக்கும் இந்தியாவின் திறனை எடுத்துக் காட்டுவதாக ஏர் மார்ஷல் திவாரி குறிப்பிட்டார்.