NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'பாரத் மாதா கி ஜெய்!' என்று சொல்பவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடம் உண்டு: மத்திய அமைச்சர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'பாரத் மாதா கி ஜெய்!' என்று சொல்பவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடம் உண்டு: மத்திய அமைச்சர்
    ஹைதராபாத்தில் பாஜக ஏற்பாடு செய்திருந்த விவசாயிகள் மாநாடு

    'பாரத் மாதா கி ஜெய்!' என்று சொல்பவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடம் உண்டு: மத்திய அமைச்சர்

    எழுதியவர் Sindhuja SM
    Oct 15, 2023
    02:09 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்று சொல்ல வேண்டும் என்று மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி கூறி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானா இடையே நதிநீர் பங்கீடு தொடர்பான கிருஷ்ணா நதிநீர் தகராறு தீர்ப்பாயத்தின் விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்ததையொட்டி விவசாயிகள் மாநாட்டை பாஜக ஏற்பாடு செய்தது.

    ஹைதராபாத்தில் பாஜக ஏற்பாடு செய்திருந்த இந்த விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய வேளாண்மைத் துறை அமைச்சர் சவுத்ரி, இதை தெரிவித்திருக்கிறார்.

    ஹைதராபாத்தில் அரசியல்வாதிகள் பயன்படுத்தும் "மொழி" பற்றி குறிப்பிட்டு பேசிய அவர், வருங்காலத்தில் தேசியவாத சிந்தனை கொண்ட அரசாங்கம் தெலுங்கானாவில் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

    சன்ஜஸ்ல்க்

    'பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்': அமைச்சர் சவுத்ரி

    "இந்தியாவில் 'பாரத் மாதா கி ஜெய்' என்று கோஷமிட மாட்டோம் என்று கூறுபவர்கள் நரகத்தில் தள்ளப்படுவார்கள். நீங்கள் இந்தியாவில் வாழ விரும்பினால், 'பாரத் மாதா கி ஜெய்' என்று சொல்ல வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

    மேலும், "இந்தியாவில் வசிக்கும் நீங்கள், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று சொல்வீர்களா?" என்று கேள்வி எழுப்பிய அவர், "அதனால்தான் சொல்கிறேன், 'பாரத் மாதா கி ஜே' என்று சொல்லாதவர்கள், இந்துஸ்தான் மற்றும் பாரதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள், பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள். இங்கே அவர்களுக்கு இடமில்லை." என்று தெரிவித்துள்ளார்.

    மாநிலங்களில் தேசியவாத சித்தாந்தம் வளர்வது நாட்டிற்கு அவசியம். கூட்டு முயற்சிகளால் நாட்டை பலப்படுத்த வேண்டும் என்று மேலும் அவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாரத்
    மத்திய அரசு
    பாஜக

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    மில்லியன் கணக்கான மொபைல்களுக்கு இந்திய அரசாங்கம் அனுப்பிய அவசர எச்சரிக்கை மத்திய அரசு
    இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    "இஸ்ரேலுக்கு துணையாக இந்தியா உறுதியாக நிற்கிறது": பிரதமர் மோடி பிரதமர்
    பிறக்காத குழந்தைக்கு கவலை தெரிவித்த தலைமை நீதிபதி: கருக்கலைப்பு உத்தரவை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்

    பாரத்

    பாரத், பாரதம், இந்தியா..மூன்றிற்குமான வித்தியாசம் என்ன? அரசியலைப்பின்படி எது சரியான பெயர்? இந்தியா
    'பாரத' சர்ச்சையில் அடிபடும் தோனியின் பெயர்; என்ன நடந்தது? வைரலான ட்வீட்
    இதற்கு முன் நாட்டின் பெயர்களை மாற்றிய 9 நாடுகளும் அவற்றின் காரணங்களும்  உலகம்
    இந்தியா - பாரத்: ஐநா சபை ஓப்புதல் எவ்வாறு பெறப்படும்? இந்தியா

    மத்திய அரசு

    ஜி20 மாநாடு - உலக தலைவர்களை அசரவைத்த தமிழகத்தினை சேர்ந்த தவில் வித்வான் இந்தியா
    அலுவலகங்களை சுத்தம் செய்ததன் மூலம் ரூ.600 கோடி வருவாய் ஈட்டிய மத்திய அரசு இந்தியா
    தங்களது சேவையின் பெயரை 'பாரத் டார்ட்' என மாற்றிய ப்ளூ டார்ட் நிறுவனம்! பாரத்
    நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு முன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறது மத்திய அரசு  இந்தியா

    பாஜக

    ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  அண்ணாமலை
    மோடியை அதிபராக்குவதற்கான சதி திட்டம் தான் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' - மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    'எதிர்க்கட்சிகள் இந்து மதத்தை வெறுக்கின்றன': உதயநிதியின் கருத்துக்கு அமித்ஷா பதில்  அமித்ஷா
    'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது மாநிலங்கள் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025