NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2029க்கு பிறகே ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    2029க்கு பிறகே ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
    ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

    2029க்கு பிறகே ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 05, 2025
    06:55 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒரே நாடு ஒரே தேர்தல் செயல்படுத்துவது எப்போது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தி உள்ளார்.

    ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது பொதுச் செலவினங்களைக் கணிசமாகக் குறைக்கும் என்று கூறினார்.

    செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், இந்தக் கொள்கை அரசாங்கத்திற்கு கிட்டத்தட்ட ₹12,000 கோடி தேர்தல் செலவுகளைச் சேமிக்கும் என்று கூறினார்.

    இந்த யோசனை பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

    மேலும், "நாங்கள் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை மட்டுமே நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    இதில் உள்ளாட்சித் தேர்தல்கள் இல்லை. ஒருவர் கொள்கையை ஆதரிக்காவிட்டாலும், அதை கண்மூடித்தனமாக எதிர்க்கக்கூடாது." என்றார்.

    அறிக்கை

    முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான அறிக்கை

    முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இதற்காக அமைக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்த பிறகு இந்த கருத்து வேகம் பெற்றது.

    இந்த அறிக்கையின் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

    இருப்பினும், எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை விமர்சித்து, இது ஜனநாயக விரோதம் என குற்றம் சாட்டியுள்ளன.

    இதற்கு நேர்மாறாக, தேசிய ஸ்திரத்தன்மை மற்றும் திறமையான நிர்வாகத்திற்கு இது அவசியம் என்று பாஜக கூறுகிறது.

    இந்நிலையில், 2029 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இதற்கான செயல்முறை முறையாகத் தொடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒரே நாடு ஒரே தேர்தல்
    நிர்மலா சீதாராமன்
    நிர்மலா சீதாராமன்
    மத்திய அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஒரே நாடு ஒரே தேர்தல்

    ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் தமிழக முதல்வர்
    ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான அறிக்கை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பு திரௌபதி முர்மு
    'ஒரே நாடு ஒரே தேர்தல்': மோடி 3.0 வில் அமல்படுத்தப்படும் எனத்தகவல் தேர்தல்
    ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்; குளிர்கால கூட்டத்தொடரில் பில் நிறைவேற்றப்படும் மத்திய அரசு

    நிர்மலா சீதாராமன்

    பட்ஜெட் 2024: இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு வெளியான அறிவிப்புகள் பட்ஜெட் 2024
    பட்ஜெட் 2024: நகர்ப்புற வீட்டு வசதிக்காக Rs.10 லட்சம் கோடி ஒதுக்கீடு பட்ஜெட் 2024
    பட்ஜெட் 2024: இந்தியாவில் 'ஏஞ்சல் வரியை' ரத்து செய்கிறது: அது ஏன் முக்கியமானது நிதியமைச்சர்
    யூனியன் பட்ஜெட் 2024: தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகை வருமான வரி விதிகள்

    நிர்மலா சீதாராமன்

    பட்ஜெட் 2024: நீண்ட கால மூலதன ஆதாய வரி உயர்த்தப்பட்டது பட்ஜெட் 2024
    இந்திய விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களை ஆதரிக்க 1,000 கோடி நிதி அறிவிப்பு விண்வெளி
    பட்ஜெட் 2024: 3 புற்றுநோய் மருந்துகள் இனி மலிவு விலையில் கிடைக்கும் புற்றுநோய்
    மத்திய பட்ஜெட் 2024: எதன் விலை உயரும்? எதன் விலை குறையும்? பட்ஜெட் 2024

    மத்திய அரசு

    இந்தியாவிற்கு USAID 750 மில்லியன் டாலர் நிதியுதவி; மத்திய அரசு அறிக்கையில் தகவல் இந்தியா
    தேஜாஸ் Mk-1A தயாரிப்பில் ஏற்படும் தாமதங்களை ஆய்வு செய்ய பாதுகாப்பு அமைச்சகம் குழு அமைப்பு விமானப்படை
    குழந்தைகள் துஷ்பிரயோகத்தை சமூக ஊடகங்கள் எவ்வாறு கையாள்கின்றன? அறிக்கை கோரும் மத்திய அரசு தொழில்நுட்பம்
    2025-26 நிதியாண்டில் இந்திய ரயில்வே 100% மின்மயமாக்கல் இலக்கை எட்டும்; அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி இந்திய ரயில்வே
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025