NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'படிப்பில் திறமையானவர், மூளைச்சலவை செய்யப்பட்டார்' - கர்னி சேனா தலைவர் கொலையாளி
    அடுத்த செய்திக் கட்டுரை
    'படிப்பில் திறமையானவர், மூளைச்சலவை செய்யப்பட்டார்' - கர்னி சேனா தலைவர் கொலையாளி

    'படிப்பில் திறமையானவர், மூளைச்சலவை செய்யப்பட்டார்' - கர்னி சேனா தலைவர் கொலையாளி

    எழுதியவர் Srinath r
    Dec 06, 2023
    06:55 pm

    செய்தி முன்னோட்டம்

    ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க, ராஜஸ்தான் டிஜிபி உமேஷ் மிஸ்ரா சிறப்பு புலனாய்வு குழுவை (எஸ்ஐடி) அமைத்துள்ளார்.

    காவல்துறையினர் இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாக, ரோஹித் ரத்தோர் மக்ரானா மற்றும் நிதின் ஃபௌஜி ஆகியோரை சந்தேகிக்கின்றனர். மேலும் காவல்துறையினர் அவர்கள் மீது தலா ₹5 லட்சம் சன்மானமாக அறிவித்துள்ளனர்.

    "நவம்பர் 9 ஆம் தேதி காலை 11 மணிக்கு காரை ரிப்பேர் செய்வதற்காக என் மகன் மகேந்திரகர் சென்றான். அதன்பிறகு அவனுடன் எந்த தொடர்பும் இல்லை," என்று நிதின் ஃபௌஜி தந்தை பிடிஐயிடம் கூறினார்.

    2nd card

    ராணுவத்தில் பணியாற்றிய அனுபவமுள்ள நிதின் ஃபௌஜி

    மேலும் பிடிஐ செய்தி நிறுவனம் குற்றம்சாட்டப்பட்ட நித்தினின் நண்பரான தீபக்கிடமும் இதுகுறித்து பேசியுள்ளது.

    "நிதின் என் வகுப்பில் படித்து வந்தான். நன்றாக படித்து வந்த அவன், பின்னர் ராணுவத்தில் சேர முடிவு செய்தான்."

    "அவர் தனது உடல் தேர்வுக்குத் தயாராகி பின்னர் ராணுவத்தில் சேர்ந்தான். அவரை மூளைச் சலவை செய்தது யார் என்று எனக்குத் தெரியவில்லை, திடீரென அவன் பெயர் செய்திகளில் அடிபடுகிறது" என தீபக் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், சுக்தேவ் சிங் கோகமேடியின் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, ஜெய்ப்பூர் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் வன்முறை வெடித்தது.

    ராஜ்புத் தலைவர் ராஜ் ஷெகாவத், "துப்பாக்கி குண்டுகளுக்கு, துப்பாக்கி குண்டுகள் மட்டுமே பதிலளிக்கும்" எனவும், அவரை கொன்றவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

    3rd card

    கோகமேடி கொலைக்கு ரோஹித் கோதாரா கும்பல் பொறுப்பேற்பு

    ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி, அவர் வீட்டில் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இருவரில் ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது

    அவரை கொல்ல வந்த கொலையாளிகள், "அவரிடம் ஏதோ விவாதிப்பது போன்று அங்கு வந்திருந்தனர். இந்த சம்பவத்தில் சுக்தேவ் சிங் கோகமேடி மற்றும் அவரது பாதுகாவலர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்."

    "கொலையாளிகளுடன் வந்த ஒரு குற்றவாளியும் சுட்டுக் கொல்லப்பட்டார், அவர் இறந்தார். மர்ம நபர்களின் மறைவிடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது."

    "நாங்கள் ஹரியானா டிஜியிடம் பேசினோம், உதவி கோரப்பட்டுள்ளது. கொலைக்கு ரோஹித் கோதாரா கும்பல் பொறுப்பேற்றுள்ளது; விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என அம்மாநில டிஜிபி தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராஜஸ்தான்
    கொலை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா

    ராஜஸ்தான்

    வட இந்தியாவில் கடும் மழை: டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு  வானிலை ஆய்வு மையம்
    செல்போன் வெடித்ததால் அவசரமாக தரையிறக்கட்ட ஏர் இந்தியா விமானம்  ஏர் இந்தியா
    6 மாத குழந்தையுடன் அதன் குடும்பத்தையும் கொன்று எரித்த கொடூர சம்பவம்  இந்தியா
    ஜெய்ப்பூர்: அரை மணிநேரத்தில் தொடர்ந்து 3 நிலநடுக்கங்கள் நிலநடுக்கம்

    கொலை

    பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு கைது
    பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் இருவரும் பலி  குழந்தைகள்
    தேவகோட்டையில் காணாமல் போனதாக கூறப்பட்டவர் எலும்புக்கூடுகளாக மீட்பு  சிவகங்கை
    பெண் ஆசையால் பறிபோன ரவுடியின் உயிர், பரபரப்பு சம்பவம் - க்ரைம் ஸ்டோரி  காவல்துறை

    காவல்துறை

    விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் குறித்து காவல்துறை விளக்கம்  குண்டர் சட்டம்
    மகளை மர்ம கும்பல் கடத்தியதாக புகாரளித்த தாய் - அம்பலமான உண்மை  காவல்துறை
    ராஜஸ்தான்: பிரதமரின் பேரணிக்கு அனுப்பப்பட்ட 6 போலீசார் லாரி விபத்தில் சிக்கி பலி ராஜஸ்தான்
    விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 50க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதம்  ஆந்திரா

    காவல்துறை

    மும்பையின் முக்கிய சாலையில் சூட்கேசில் அடைக்கப்பட்டு கிடந்த பெண்ணின் சடலம் மும்பை
    சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் துவக்கம்  சபரிமலை
    சென்னையில் இரவில் தனியே செல்லும் பெண்களிடம் அத்துமீறிய பைக் டாக்சி ஓட்டுநர் கைது சென்னை
    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரின் நினைவாக நினைவுச்சின்னம் அமைப்பு விபத்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025