NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒடிசா ரயில் விபத்து: 48 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒடிசா ரயில் விபத்து: 48 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர்
    தலையில் பலமாக அடிபட்டிருந்தாலும், மீட்கப்பட்ட நபர் தற்போது நலமாக உள்ளார்.

    ஒடிசா ரயில் விபத்து: 48 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர்

    எழுதியவர் Sindhuja SM
    Jun 06, 2023
    10:24 am

    செய்தி முன்னோட்டம்

    ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பெரும் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர்.

    விபத்து நடந்த இடத்தில் 48 மணிநேரம் வரை மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்தது.

    மத்திய மற்றும் மாநில மீட்பு படையை சேர்ந்த அதிகாரிகள் இரவும் பகலுமாக உடல்களையும் காயமடைந்தவர்களையும் மீட்டு கொண்டிருந்தனர்.

    ஆனால், 48 மணி நேரத்திற்கு பிறகு அவர்களது உடலும் நமபிக்கையும் சோர்வடைந்தது.

    இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில், மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த சோரோ காவல் நிலைய காவலர்களுக்கு ஏதோ ஒரு குரல் கேட்டது.

    அந்த மெலிதான குரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் தலைகீழான பெட்டிக்கு அடுத்து இருந்த அடர்ந்த புதரில் இருந்து வந்தது.

    இரண்டு நாட்களாக, மீட்பு படையினர் ரயிலுக்கு உள்ளே தேடினர்.

    details

    மீட்கப்பட்ட நபர் தற்போது நலமாக உள்ளார்

    ஆனால், ரயிலுக்கு வெளியே உள்ள புதரில் தேடுதல் பணி எதுவும் நடக்கவில்லை.

    "இதுபோன்ற ஒரு ரயில் விபத்து நடந்து 48-மணிநேரத்திற்குப் பிறகு ஒரு மனிதன் எப்படி உயிருடன் இருக்க முடியும் என்று நாங்கள் ஆச்சரியப்பட்டோம். சில சமூக சேவகர்களின் உதவியோடு, புதரில் கிடந்த நபர் பாலசோர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்." என்று சோரோ காவல் நிலைய காவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    தலையில் பலமாக அடிபட்டிருந்தாலும், மீட்கப்பட்ட நபர் தற்போது நலமாக உள்ளார்.

    மேலும், அவர் அசாமை சேர்ந்த துலால் மஜூம்தார்(35) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    அவருடன் மேலும் 5 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர்களுக்கு என்ன ஆனது என்பது சரியாக தெரியவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    அசாம்
    ஒடிசா
    ரயில்கள்

    சமீபத்திய

    இப்போது நீங்கள் கூகிள் சர்ச்சிலேயே ஆடைகளை ட்ரை செய்து பார்க்கலாம் கூகிள் தேடல்
    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா

    இந்தியா

    தனது பதவியில் இருந்து விலகிய ஒன்பிளஸ் இந்தியாவின் சிஇஓ.. ஏன்? இந்தியா
    டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ கிருத்திவாசன்.. யார் இவர்? டிசிஎஸ்
    அவசர சட்ட விவகாரம்: மு.க.ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி
    சர்வதேச தடகள போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் தடகள போட்டி

    அசாம்

    குழந்தை திருமணத்தை முறியடிக்கும் முயற்சி: அசாமில் 1800க்கும் மேற்பட்டோர் கைது இந்தியா
    லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர் இந்தியா
    அசாம்: போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தை திருமண வழக்குகள் வருமா இந்தியா
    போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்தியா

    ஒடிசா

    ஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள் இந்தியா
    ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது  இந்தியா

    ரயில்கள்

    ஆந்திரா கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து-அச்சத்தில் பயணிகள் ஆந்திரா
    ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உணவு மிக அருமை! சமூகவியலாளர் சால்வடோர் பாபோன்ஸ் பதிவு! இந்தியா
    வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மீட்பு தமிழ்நாடு
    254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைப்பு; தெற்கு ரயில்வே அறிவிப்பு! தெற்கு ரயில்வே
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025